சில காலமாகவே பதின்ம வயதுக்குழந்தைகள் குடிப்பழக்கத்திற்கு ஆளாவது குறித்து பேசப்படுகிறது.மேலும் விவரங்கள் இங்கே.
சமீபத்தில் ஒரு பள்ளியின் 8 ஆம் வகுப்புக் குழந்தைகள் பருகும் தண்ணீர் அல்லது கோலா போன்ற பானங்களை எடுத்து பரிசோதித்துப் பார்த்ததில் சிலவற்றில் மது கலந்திருப்பது தெரியவந்தது. வீட்டில் பெற்றோர்கள் பெரிய பாட்டில்களில் வாட்கா வாங்கி மீதம் வைக்கும் போதோ அல்லது 30 can என்று பியரை வாக்கி மீதம் வைக்கும் போதோ அதில் ஒன்றோ அல்லது ஒரு அவுன்சோ குறையும் போது தெரிவதில்லை. 30மிலி வாட்கா பதின்ம வயதுள்ளவர்களுக்கு உடல்நலத்தை பாதிக்க வல்லது. பெற்றோருக்கும் மற்றோருக்கும் தெரியாமல் மதுவைப் பருக அதை தண்ணீருடன் கலப்பதோ அல்லது கோக் போன்ற திரவங்களில் கலந்தோ எடுத்துச் செல்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன் ஒரு வீட்டின் முன் கார்கள் சரியாக நிறுத்தப்படாமல் இருப்பதாலும் அதிக சப்தம் வந்ததாலும் பக்கத்து வீட்டினரின் புகாரின் மேல் காவலர்கள் வர அந்த வீட்டு குழந்தைகள் மது அருந்திக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.அவர்களை சட்டப்படி குற்றம் செய்ததற்காக காவலர்கள் அழைத்துச்செல்ல, பெற்றோர்கள் மிகுந்த கோபம் கொண்டு நகரின் மீது வழக்கு பதிந்திருக்கிறார்கள். 18 வயதிற்கு மேலானவர்கள் வீட்டில் இல்லாதபோது காவலர்கள் வீட்டினுள் நுழந்ததே அத்துமீறல் என்றும் இந்நிலை நீடித்தால், தனிப்பட்ட உரிமை எல்லாவற்றையும் இழக்க நேரிடும் என்று ஒரு சாராரும், 21 வயதுக்கு கீழே உள்ளவர்கள் குடித்தது சட்டப்படி தவறுதானே, ஏதேனும் ஒன்றுவரம்புமீறி நடந்தால் அப்போதும் காவல்துறைமீதுதான் புகார் வரும் என்று ஒரு சாராரும் வாதிட கடைசியில் வழக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஒரு நீண்ட வார இறுதிக்கு முன் வசந்த கால விடுமுறைக்கு முன், 10 வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனவரும் ஒரு மாணவனின் வீட்டில் 3 மணிஇக்கு குடிக்க அரம்பித்திருக்கிறார்கள். வீட்டில் ஒரு கெக் (Keg)பியர் வாங்கி வைத்திருக்கிறார்கள் பெற்றோர் வார இறுதி பார்ட்டிக்காக. போதை அதிகமாக 3 மாணவர்கள் அந்த குழுவில் இருந்த மனநிலை சரியில்லாத ஒரு மாணவியை வன்புணர்ந்ததோடு மட்டும் அல்லாமல் பேஸ்பால் மட்டையாலும் துன்புறுத்தி இருக்கிறார்கள். பயம் அல்லது போதை தந்த உணர்வு மற்ற யாரும் அதைத்தடுத்து நிறுத்தவில்லை. அடுதத நாள் ஒரு மாணவி தன் கவுன்சிலரிடம் நட்ந்ததை கூற அவர் பள்ளித் தலவர் மூலம் காவலரை அழைக்க வழக்கு பதிவாகி இப்போது அந்த மூன்றூ மாணவர்களும் சிறையில். இன்னமும் வழக்கு முடியவில்லை. இந்த வழக்கில் மது வாங்கி அதை சரியாக காபந்து செய்யாமல் வைத்த பெற்றோர் மீது வழக்குப் பதிய இருக்கிறார்கள். ஆனால் பெற்றோர்கள் இதை எதிர்க்கிறார்கள். குழந்தைகள் மீது உள்ள நம்பிக்கையால் வீட்டில்வைத்துவிட்டுப் போகீறோம். ஒவ்வொன்ரையும் கண்காணிக்க நேரம் இல்லை, நாங்கள் எப்படி பொறுப்பெடுக்க முடியும் என்பது அவர்கள் காரணம். ஆனாலும் 3 மாண்வர்கள் வாழ்க்கையும் அந்த மாணவியின் உடல்நலமும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
ஒருநாள் காலையில் இன்னொரு நகரின் கார்நிறுத்துமிடத்தில் ஆடைகள் அலங்கோலமான நிலையில் மது அளவுக்கு மீறியதால் மயங்கிக்கிடந்த இரண்டு பதின்மவயது சிறுமிகள் பெற்றோரிடம் சேர்க்கப்பட்டனர். இந்த பிரச்சினை இப்போது மிக அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இதனாலேயே நியுஜெர்சியில் பல நகரங்கள் 21 வயதுக்கு கீழான குழந்தைகள் மது அருந்தினால் அதற்கு பெற்றவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர்களுடைய முதல் ஓட்டுனர் உரிமம் காலதாமதப்படுத்தப்படும் என்றும் சட்டமாக்க முயன்று வருகிறோம். போதையில் ஏதேனும் வன்முறைகள் நடந்தால் பெற்றவர்களுக்கும் தண்டனை உண்டு என்பதும் இந்த சட்டத்தின் பகுதி.
பெற்றவர்கள் அரை மனதுடன் மது அருந்துவதை அனுமதிக்கிறார்கள். வெளியே சென்று போதை பழகத்திற்கு உள்ளாகி இறப்பதைக்காட்டிலும் வீட்டிலேயே அருந்துவது தப்பில்லை என்பது அவர்கள் வாதம்.
பெற்றோர்கள் வீட்டில் மது வாங்கி வைத்தால் அவ்வப்போது எவ்வளவு செலவானது, எவ்வளவு மீதம் இருக்கிரது என்பதை சரிபார்ப்பது அவசியம்.