»
S
I
D
E
B
A
R
«
வீட்டு வன்முறை, dirty Bomb, Radiation terrorism
Mar 22nd, 2009 by பத்மா அர்விந்த்

கணவனின் வன்முறை தாங்க முடியாமல் மனைவி கொலை செய்வது ஒன்றும் புதிய செய்தி இல்லை. ஆனால் சமீபத்தில் வந்த ஒரு 911 தொலைபேசி அழைப்பை ஏற்று சென்ற காவலர்கள் முதலில் இதுவும் ஒரு வீட்டு வன்முறை வழக்கு, அது தொடர்ச்சியாக கொலையில் முடிந்திருக்கிறது என்று தான் நினைத்தார்கள். ஆனால் அந்த வீட்டின் சோதனையில் படிப்படியாக பல விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன.

சமீபகாலமாக எங்கள் துறையில் ரேடியோ கதிர்வீசு குண்டுகள் வெடித்தால் எத்தனை இழப்பு வரும் எப்படி மருத்துவ உதவி செய்ய முடியும் என்பது குறித்தெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறோம். இதுகாறும் வேதியியல் அல்லது உயிரியல் தீவிரவாதத்திற்கே அதி முக்கியத்துவம் கொடுத்திருந்த நாங்கள், கடந்த ஒரு வருடமாக ரேடியோ கதிரியக்க தீவிரவாதம் குறித்து அதற்கு தேவையான மருத்துவ செயல்பாடுகள் குறித்து திட்டமிட ஆரம்பித்திருத்தோம். பலரும் இது போல ரேடியோ கதிர்வீச்சு ஐசோடோப் பெறுவதன் சிக்கல் குறித்து பேசும் போது, உள்நாட்டு பாதுகாப்பில் அமெரிக்கா போக வேண்டிய தூரம் மிக அதிகம் என்பதை சொல்லாமல் சொல்லும் வீடியோ கீழே:

Family Assistance Fair, Coping with the Recession தொடர்ச்சி
Mar 9th, 2009 by பத்மா அர்விந்த்

சென்ற வாரம் கவர்னர் கோர்சைனின் சிறப்பு உரையுடன் குடும்பங்களின் பொருளாதார உதவி கூட்டம் நடைபெற்றது. இங்கே அரசாங்கத்தின் பல அமைப்புகளும், வங்கிகளும் தங்களுடைய நிறுவனத்தில் என்ன உதவி கிடைக்க கூடும் என்பதை விளக்கினார்கள்.

வீட்டுக் கடனின் வட்டி விகிதம் குறைக்க, மற்ற முயற்சிகளுக்கு இலவச ஆலோசனை பெற இங்கே செல்லவும். இங்கே குறைந்த செலவில் வாடகைக்கு வீடு கிடைப்பது பற்றியும், Mortgage Assistance Pilot திட்டம் பற்றியும் விவரமாக காணலாம். கட்டுரையில் NJ HOPE இணைய தளம் பற்றியும் அதில் கிடைக்க கூடிய உதவிகள் பற்றியும் இருக்கிறது.

வீட்டிற்கு ஆகும் மின்சார வெப்ப நிலையை அதிகரிக்க அல்லது குறைக்க ஆகும் செலவு கட்ட இயலாதவர்கள், வேலை இழந்தவர்கள் உடனடியாக வேலை தேட உதவி, வேலை இழந்தவர்கள் மேலும் தங்களது திறனை அதிகரிக்க உதவி, அவர்கள் மனைவி வேலை இல்லாமல் இருந்தால் குறைந்த செலவில் அல்லது இலவசமாக கிடைக்கும் பயிற்சிகள் (division on women) இந்த தளத்தில் காணலாம்.

நீங்கள் சிறுதொழில் நடத்துபவரா அல்லது தொழில் ஆரம்பிக்க வட்டியில்லா அல்லது மிக குறைந்த வட்டியில் கடன் அல்லது பொருளாதார உதவி வேண்டுமானாலும் இங்கே மேலும் விவரங்கள் கிடைக்கும். http://www.recovery.nj.gov/

வேலை இழந்தவர்கள் தங்கள் குழந்தைக்கான மருத்துவ காப்பீட்டை இலவசமாக பெற இயலும். தங்கள் வரி படிவத்தில் குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு இல்லை என்றால் அதை தெரியப்படுத்தினால் இலவச மருத்துவ காப்பீடும், ஊதியம் இல்லாதவர்களுக்கு சலுகை முறையில் காப்பீடும் பெற இங்கே செல்லவும். இங்கே மாதாந்திர வருமானம் (அவர்களுடைய அசையா சொத்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை) தற்காலிகமாக வேலை இழந்தவர்கள் கூட காப்பீடு பெற்றுக்கொள்ளலாம்.

குழந்தைகள் தடுப்பூசி, தற்போது கட்டாயமாக்கப்பட்ட ப்ளூ தடுப்பூசி, சிறப்பு குழந்தைகளுக்கான உடல்நல உதவி, அவர்களை பார்த்துக்கொள்ள பெற்றோர்களுக்கு கிடைக்கும் செவிலிகளின் உதவி ஆகியவை மாநில பொதுநல துறையில் ஏற்பாடு செய்து கொள்ள முடியும்.

வரும் ஜூன் மாதம் நியுஜெர்ஸியில் உள்ள எல்லா நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள் ஒண்றிணைத்து ஒரு Job summit நடத்த ஆளுநரின் அலுவகம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. மேலும் தகவல்கள் வந்தால் பதிவு செய்கிறேன்.

பல மருந்து நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் குறைந்த விலைக்கு கிடைப்பது பற்றியும், காது கண் ஆகியவை இலவசமாக சிகிச்சை செய்துகொள்ள சில காப்பீடு நிறுவனங்களுடன் பேசி ஏற்பாடு செய்யவும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. தற்போது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் தள்ளுபடி பெற அட்டைகள் தரப்படுகின்றன.விரைவில் மற்றவையும் ஏற்பாடு செய்யப்படும்.

முதியோருக்கான உதவிகள், மருந்துகள், உணவு ஆகியவை இன்னும் அதிகமாக்க பபட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

ஆளுநரின் முழு உரையையும் இங்கே
கேட்கக் கிடைக்கும்.

social Normமும் மகளிர் தினமும்
Mar 8th, 2009 by பத்மா அர்விந்த்

வழக்கம் போலவே என் இன்பாக்ஸ் மகளிர்தினத்தை நினைவுறுத்தும் வண்ணம் அழைப்புக்களால் நிரம்பி இருந்தன. காலை உணவு, அல்லது சின்ன கூட்டம். ஒன்றில் கொண்டாடத்தான் வேண்டுமா மற்ற நாடுகளில் எத்தனை பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், ஒரு மணிக்கு பத்தில் நான்கு பெண் ஏதேனும் ஒரு பாலியல் சித்திரவதைக்கு ஆளாகிறாள், இந்தியாவில் 19% திருமனமான 19இல் இருந்து 25 வயதுகுட்பட்ட பெண்களும் கம்போடியாவில் 35% மணமான பெண்களும் கணவனால் ஒருமுறையேனும் அடிக்கப்பட்டிருக்கிறாள், இன்னும் இந்தியாவில் விதவைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றார்கள், இங்கே முதியோர் இல்லங்களில் பெண்கள் பாலியல் கொடுமைக்கும் ஆளாகிறார்கள், இந்த நிலையில் வேண்டுமா மகளிர் தினம் யோசியுங்கள் என்ற கடிதம்.

பாஸ்நியா முதல் இன்றைய இராக், ஈழம் வரை போர்க்காலங்களில் பெண்கள் படும் அவதிகள் அதிகம். ஆண்கள் பலர் கொல்லப்படுவதால், குழந்தைகளின் பசிதீர்க்க, முதியோருக்கு உணவு வழங்க, குடும்பத்தை சற்றேனும் குறைவில்லாமல் நடத்த பெண்கள் பணிக்கு செல்கிறார்கள். முதல்முறையாக பணிக்கு செல்வதால் குறைந்த அளவு ஊதியம் கிடைக்கும் பணிகளில் இவர்கள் படும் பாலியல் தொல்லைகள் ஏராளம். போர் என்றாலே ஒரு நாட்டின் உடமைகளை கைக்கொள்வதோடு, பெண்களை பாலியியல் கொடுமைக்கு ஆளாக்குவது ஆண்கள் நிறைந்த இராணுவத்தில் ஒருவகை கொண்டாட்டமாகி இருக்கிறது. இதற்கு உளவியல் ரீதியாக பல காரணம் இருப்பினும் ஒரு வீட்டின் பெண் ஒருவகையில் இன்னும் ஒரு உடமையாகவே கருதப்படுவதால் அவளை சிதைப்பது என்பது அந்த வீட்டின் ஆணை உச்சகட்ட அவமானத்திற்கு ஆளாக்குவது முக்கிய காரணம், இரண்டாவதாக இவ்வாறான வன்புணர்வில் கருத்தரிக்கும் பெண்கள் மூலம் தங்கள் இனத்தை அங்கே வளர்க்கவும் நினைப்பது இன்னொரு காரணம். பெரும்பாலான போர்க்கால வன்புணர்வுகள் கருவில் முடிந்தால் அவர்களுக்கு அதை கலைப்பது மிகவும் முடியாத காரியம். அவ்வாறாக பிறந்த குழந்தைகள் அந்த வன்புணர்வு அனுபவத்தை நினைவுறுத்திக் கொண்டே இருப்பதால் சமூகத்தாலும் வெறுக்கப்படும் நிலைக்கு ஆளாவதால், போர் முடிந்த பின்னும் இன்னொரு தலைமுறைக்கு அவமானப்படுத்தப்படுகிறார்கள். இப்படியாக பல்லாயிரம் பெண்கள் அவதிப்படும் போது நிலையற்ற வாழ்க்கையில் அவரும் அவர்தம் குடும்பமும் சுழலும் போது இந்தக் கொண்டாட்டங்கள் அவசியம்தானா?

தினசரி வாழ்க்கையில் பெரும்பாலான வீடுகளில் தங்கள் மனைவியின் உடல்நல முடிவுகளைக்கூட ஆண்களே எடுக்கின்றனர். தெற்காசிய நாடுகளில் 61% ஆண்கள் முடிவின் படிதான் குடும்பத்தாரின் உடல்நல சிகிச்சைகள் கூட தெரிவு செய்யப்படுகின்றன. அதே போல அன்றாடம் நடக்கும் செலவினங்கள் தெற்காசிய நாட்டில் 34 இல் இருந்து 40% வரை ஆண்கள் முடிவெடுப்பின் படி நடக்கிறது.

இதே போல பெண்கள் கருவின் துவக்கம் முதல் கடைசி காலம் வரை ஏன் மயானத்திலும் கூட ஆண்களின் முடிவே அதிகாரம் பெற்றதாக இருக்கிறது.
ஆரம்ப நிலை படிப்பு முதல் பொது literacy வரை 100% ஆண்களுக்கு 65% பெண்களே படிக்கிறார்கள். பெண்களின் கல்வி அறிவு ஒரு குடும்பத்தின் உடல் நலம் மற்றும் அறிவுத்திறனுக்கு ஆதாரம் என்ற போதிலும் பெண்குழந்தைகளின் படிப்பு ஆண் குழந்தைகளை விட அதிகம் ஆதரவு பெறுவதில்லை. இவ்வாறாக ஓவ்வொரு துறையிலும், வேலைக்கு போகும் பெண்கள் பெறும் சற்றே visibility குறைந்த பிராஜக்ட், பொதுவாக குழந்தை வீடு என்று பெண்கள் கவனம் செலுத்த தேவை இருப்பதால் அவர்களால் நீண்ட நேரம் பணியாற்ற முடியாது என்று அனுமானித்து வேறு திட்டங்கள் கொடுப்பது, வீட்டின் அன்றாட வேலைகளில் கூட இது பெண்களே செய்ய வேண்டியது என்று அவர்கள் செய்யும் intangible பணிகளின் முக்கியத்துவத்தை கவனிக்காமல் விடுவது போல நிறைய எழுதிக்கொண்டே இருக்கலாம்.

நேற்றைய முந்தினம் நடந்த ஒரு அரசியல் தலைவர்கள் நிறைந்த கூட்டத்தில் சிறையில் பெண்கள் எப்படி கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற ஒரு விளக்கப்படத்தையும் பார்க்க நேரிட்டது. சிறையில் அதிலும் ஆப்பிரிக்க அமெரிக்க பெண்ணாகவோ ஹிஸ்பானிய பெண்ணாகவோ இருந்தால் இன்னும் எத்தனை மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதையும் பார்க்க நேர்ந்தது. அவர்களுக்காக போராடும் ஒரு குழு நடத்திய உரை மூலமாக மனமே கனத்துப் போனது. இதில் இன்னும் வேதனையான செய்தி என்னவென்றால், குடியுரிமை இல்லாமல் வரும் மக்கள் இமிக்ரேஷனால் பிடிக்கப்படும் போது, அதில் பெண்கள், குழந்தைகள் சிறையில் (பொதுவான குற்றவாளிகளுக்கான) கிரிமினல் குற்றவாளிகள் போல நடத்தப்படுவதும் ஆண்கள் இமிக்ரேஷன் சிறையில் அடைக்கப்படுவதும்தான். கிரிமினல் சிறையில் நிகழ்த்தப்படும் அராஜகங்கள் நிர்பந்திக்கபட்டு ஒரு கிரிமினல் குற்றவாளியைப்போல பெண்கள் நடத்தப்படுவது ஏன் என்று இன்னொரு குழு அட்டைகளை பிடித்திருந்தார்கள். ஒரே செய்கைக்கு ஆணுக்கொரு நீதியாகவும் பெண்ணுக்கொரு நீதியாகவும் இருப்பது இங்கேதான். குடியுரிமை பெறாமல் வேலை செய்யும் பெண்கள் அடையும் கொடுமைகளும் அதிகம்.

ஓரின சேர்க்கையாளர்களில் பெண்கள் நடத்தப்படும் விதம், மருத்துவர்கள் அவர்களை நடத்தும் விதம் குறித்தும் கூட நிறைய எழுதி மனம் அமைதி இழக்கலாம். ஆனாலும் இந்த பதிவு அதற்காக இல்லை.

14% ஆனாலும் கூட பல நாடுகளில் பெண்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள், அவர்களால் முடிவுகள் எடுக்க மாற்ற முடியும், 65% ஆனாலும் கூட படிக்க செல்லும் பெண்கள் சதவிகிதம் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. 19 % பெண்கள் வன்முறைக்கு ஆளானாலும் 81% பெண்கள் தங்களைக்காத்துக்கொள்ளும் கலையை அறிந்திருக்கிறார்கள். 35% ஆனாலும் கூட உலகெங்கும் ஆண்கள் பாலியியல் சமன்பாட்டை மதிக்க துவங்கி இருக்கிறார்கள். ஆக கூடி கோப்பை நிறைய ஆரம்பித்திருக்கிறது. அது முற்றிலும் நிறைய என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க துவங்க வேண்டும்.

இதுதான் சோசியல் நார்ம் தியரி சொல்லித் தரும் பாடம். பாதிக்கோப்பை நிறைந்த நிலையில் மீதியை நிரப்ப ஒன்று சேருங்கள் என்பதன் தத்துவம். இப்போதுதான் நிறைய துவங்கி இருக்கும் கோப்பையில் நச்சை சேர்ப்பது போல பொறுப்பற்ற தன்மையில் நடப்பதும் பேசுவதும் கூடாது என்பதையும் தங்களை காப்பாற்ற வந்திருக்கும் சட்டங்களை மதித்து அதையும் கவனமாக கையாள்வதையும் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

பாலியியல் சமன்பாடு என்னும் கனவு நிறைவேற இன்னும் பல தூரம் செல்ல வேண்டும் என்றாலும், பாதையே இல்லாமல் இருந்து முட்காடாக இருந்த நிலத்தில் இப்போது பாதை ஒன்று புலப்படுவதே கூட நல்ல மாற்றம்தான். நடைப்பயணத்தில் இன்னும் நிறைய பேர் சேர்ந்து கொள்ள முடியும், சேர்ந்து கொள்வார்கள் என்னும் நம்பிக்கை பூத்திருக்கிறது.

ஒரு சிறுமியின் சுதந்திரத்தை தேடிய கதையை இங்கே கேளுங்கள்.

பாலியியல் சமன்பாட்டின் முக்கியத்துவத்தைச் சொல்லும் புகைப்படங்களின் தொகுப்பு இங்கே

Un and UNESCO reports linked wherever needed. You can download them.

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions