»
S
I
D
E
B
A
R
«
19/11: நீரிழிவு நோய்- சில அடிப்படைகள்
Nov 9th, 2005 by பத்மா அர்விந்த்

இந்த மாதம் நீரிழிவு நோய் தடுப்பு மாதமாக கருதப்படுகிறது. தற்போது நிறைய சிறுவர்கள்/மிகள் மற்றும் பதின்ம வயதினர் இந்நோயால் பாதிக்கப்படுவதால் சில அடிபடை கருத்துகள் தமிழோவியத்தில் எழுதியது. இங்கேயும் அவசியம் கருதி பதிக்கிறேன்.

நீரிழிவு நோய் என்பது இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதால் இரத்ததில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பதால் வரும் நோய். இதை மருந்துகளின் மூலமும், உடற்பயிற்சிகள் மூலமும் கட்டு பாட்டில் வைத்திருக்கலாம் என்றாலும் பலவித நோய்கள் மற்றும் சிக்கல்களை உருவாக்குவதால் குறைந்த வயதில் அகால மரணம் ஏற்பட வழிவகுக்கிறது.

நீரிழிவு நோயில் இரண்டு வகை உண்டு. முதலாம் வகை இன்சுலின் நம்பியுள்ள நீரிழிவு நோய் என அழைக்க படுகிறது. இது குழந்தையாக இருக்கும் போதே ஏற்படக்கூடியது ஆகும்.

இரண்டாம் வகை வயதான பின் வரும் நோய். இதில் இன்சுலினை நம்பி சர்க்கரை அளவு அதிகமாதல் நடப்பதில்லை. இது பெரும்பாலும் மருந்துகள், மற்றும் உடற்பயிற்சி மூலம் கட்டுக்குள் கொண்டுவர முடியும் வகை.

முதலாம் வகை சில உடல் எதிர்ப்பு சக்தியால் பாங்கிரியாஸின் β செல்கள் அழிக்க படுவதால் இன்சுலின் அளவு குறைந்தும் இன்னும் சிலருக்கு இன்சுலினை மிகவும் வீரியம் உள்ளதாக்க வைக்கும் சக்தி குறைவதாலும் உண்டாகுகிறது. இதற்கு சர்க்கரை அளவை அவ்வப்போது சரி பார்த்து இன்சுலின் ஊசி போட்டு கொள்ள வேண்டும். இது குழந்தைகளையும் இளவயதினரையும் தாக்கும். மரபணு குறைபாடு, சுற்று புரம் மற்றும் உடலின் சுய எதிர்ப்பு தன்மை இவற்றால் வரும் இவ்வகை நீரிழிவு நோய்க்கு எந்த வித தடுப்பும் உபயோகப்படாது. 5இல் இருந்து 10% நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த வகை நோயை கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாம் வகை நீரிழிவு நோய்: நீரிழிவு நோய் உள்ளவர்களில் 90% இவ்வகை நீரிழிவு நோய் கொண்டிருக்கிறார்கள். இன்சுலினுக்கு எதிர்ப்பு சக்தி உண்டாவதால் இந்நோய் வருகிறது. இன்சுலினுக்கு தேவை அதிகரிக்க அதிகரிக்க பான்க்கிரியாஸ் உற்பத்தியை நிறுத்துகிறது. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், சர்க்கரை செரிமான குறைவு, குடும்பத்தில் ஏற்கெனவே சர்க்கரை நோய் இருந்தால், அதிக உடல் இயக்கம் (physical activity) இல்லாதது போன்றவை இதற்கு காரணம். இப்போது அமெரிக்காவில் குழந்தைகள் அதிக உடற்பயிற்சி செய்யாமல் எடை அதிகரிப்பதால் இந்நோயால் பீடிக்க படுகிறார்கள். ஒருவகையில் ஆசிய அமெரிக்கன், ஹிச்பானியர், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இந்நோய் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது.

மூன்றாவது வகை நீரிழிவு நோய் கருத்தரிக்கும் போது வரும். சில பெண்கள் உடல் எடை அதிகமாக இருந்தால், அவர்களின் குடும்ப வரலாறு பொறுத்து இந்த நீழிவு நோய் வர வாய்ப்புண்டு.குழந்தை பிறந்த பின் இதில் 5% பெண்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் வரக்கூடும்.

நீரிழிவு நோய்க்கான மருந்து:

முதலாம் வகை நீரிழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் ஊசி அல்லது ஒரு பம்ப் கொண்டு மருந்து எடுத்து கொள்ளவேண்டும். இரண்டாம் வகை நோய் உல்ளவர்கள் உடற்பயிற்சி மூலம் எடை யை குறைப்பதோடு சில மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். இதை தவிர்த்து கொலஸ்டிரால் குறைக்கவும் மாத்திரை எடுத்து கொள்ளவேண்டும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் 16% மக்கள் இன்சுலின் உபயோகிக்கிறார்கள். மற்றவர்களில் 54% மாத்திரைகளும் 17% இரண்டும் உபயோகிக்கிறார்கள்.

நீரிழிவு நோய்க்கு முதலாம் நிலை: இந்நிலையில் உள்ளவர்கள் சர்க்கரை அளவு இரத்தத்தில் சாதாரணமானவர்களை விட அதிகமாக இருக்கும். ஆனால் அதே சமயம் இவர்களை நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்றும் சொல்ல முடியாது.

இவர்களுக்கு உணவு உண்பதற்கு முன் சர்க்கரை அளவு பாதிக்கப்பட்டிருக்கும். அதேபோல இவர்களின் முன் இரவு முழுதும் சாப்பிடாமல் இருந்து மறுநாள் காலை அளவு பார்க்க படும் சர்க்கரை அளவு 100-120 மில்லிகிராம்/ டெசிலிட்டர் இருக்கும். இது சாதாரணமானவர்களின் அளவை விட அதிகம்.

அமெரிக்காவில் பலரின் சர்க்கரை அளவை சரிபார்த்ததில் 41 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு நீரிழிவு நோய்க்கான முன்நிலையில் இருப்பது தெரியவந்திருக்கிறது.

2005 ஆம் ஆண்டு மட்டும் 20வயதுக்கும் மேலானவர்களில் 1.5 மில்லியன் (புதிதாக கண்டுபிடிக்க பட்டவர்கள்)பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

நீரிழிவு நோய் இருந்தால் இன்னும் பல நோய்கள் வர கூடும்.

இதய நோய், பக்கவாதம் (Heart disease, stroke):

நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றவர்களை விட 4 மடங்கு அதிகமாக இ தய நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு பெறுகிறார்கள். இதில் இ தய நோய், பக்கவாதம் வந்தபின் 65% இறந்து போகிறார்கள்.

அதேபோல ஸ்ட்ரோக் வரக்கூடிய வாய்ப்பும் 4 மடங்கு அதிகமாகிறது.

இரத்த அழுத்தம்: 75% நீரிழிவு நோய் உள்ளவர்கள் 130/90 க்கு மேல் இரத்த அழுத்தம் கொண்டு மருந்து உட்கொள்கிறார்கள்.

கண்பார்வை போதல்: 20 வயதிலிருந்து 74 வயதுக்குள்ளான நீரிழிவு நோய் உள்ளவர்கள் கண் பார்வையை இழக்கிறார்கள். ஆண்டொன்றுக்கு 24000 பேர் புதிதாக கண் பார்வையை இழப்பதாக சொல்கிறார்கள்.

சிறுநீரக கோளாறு: நீரிழிவு நோய், சிறுநீரக கோளாறு வர முதல் காரணம் ஆகிறது. ஆண்டொன்றுக்கு 44% புதிய சிறுநீரக கோளாறு உள்ள நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள்.

2002 ஆம் ஆண்டு நீரிழிவு நோய் உள்ளவர்களில் 150000க்கும் அதிகமானோர் சிறுநீரக கோளாறு ஏற்பட்டு டையாலிஸ் செய்து கொள்ள மருத்துவமனையில் சேர்க்க பாட்டிருந்ததாக புள்ளி விவரம் கூறுகிறது.

நரம்பு சம்பந்தமான நோய்கள்:

60 முதல் 70% வரையான நீரிழிவு நோய் உள்ளவர்கள் நரம்பு சம்பந்தமான நோய்க்கு உள்ளாகிறார்கள். கை கால் விரல்களில் உணர்ச்சி அற்று போதல், உணவு செரிமான சக்தி குறைவது போன்றவை ஏற்படுகின்றன.

மிக அதிக பட்சம் சிலருக்கு கால்கள் நீக்க படவேண்டிய நிலைகூட வருகிறது.

விபத்து இல்லாமல் கால்களை நீக்குதல் நீரிழிவு நோயால் மட்டுமே வருகிறது.

பற்களும் அதிக அளவு பாதிக்க படுகிறது. இதையும் தவிர அமில கார தன்மையை சீர்குலைக்க செய்து, கீட்டோன்களின் அளவை அதிகரித்து கோமா உண்டாக்கவும் வல்லது. பெரும்பாலோருக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோயே அதிகம் ஏற்படுகிறது என்பதால் சீரான உடற்பயிற்சி, உணவு கட்டுபாடு மூலம் நீரிழிவு நோயை தடுக்க முயற்சி செய்யலாம். இந்த மாதம் நீரிழிவு நோய் தடுப்பு மாதம் என்பதால், குறைந்த பட்சம் உடற்பயிற்சி செய்யவோ அல்லது நடக்கவோ செய்ய ஆரம்பிப்பது நமக்கு நல்லது.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madeThangamani wrote:
பயனுள்ள பதிவு!

reply to this comment
19/11 21:37:23
Dubukku wrote:
பயனுள்ள பதிவு.
குடும்பத்தில் இந்த நோய் இருந்துவந்தால் எனக்கும் கட்டாயம் வருமா இல்லை இது என் உடம்பைப் பொறுத்ததா? தடுக்க என்னென்ன செய்யலாம்? (உணவு பழக்கங்கள்?) நான் பொதுவாகவே பாதி சர்கரை தான் உண்வில் சேர்த்துக் கொள்கிறேன். இதனால் எதாவது பயன் உள்ளதா?

reply to this comment
21/11 16:44:45
Padma Arvind wrote:
தங்கமணி: தொடர்ந்து அளித்துவரும் ஊக்கத்திற்கு நன்றிகள்.
ரங்கா: ஒருவகையில் இது ஜீன்கள் மூலம் வரக்கூடும் என்றாலும், தடுக்க கூடிய ஒன்றே. நீங்கள் அதிகம் கொழுப்பு உள்ள உணவை உண்பதையும் குறைத்து கொள்ள வேண்டும். சில சமயம் அதிக காவீன் கூட சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். காவீன் கல்லீரலில் கிளைகோஜனை சர்க்கரையாக மாற்றி இரத்தத்தில் சேர்ப்பதால். உடற்பயிற்சி (20 நிமிட நடை) செய்தாலே உடல் எடை கூடுவதை தவிர்த்து இரண்டாம்வகை நீரிழிவு நோய் வருவதை தடுக்கலாம்.

reply to this comment
21/11 18:54:03
துளசி கோபால் wrote:
பயனுள்ள நல்ல பதிவு பத்மா.

கொலஸ்ட்ரால்அளவு 5 . ஆனாலும் இது வருமா?

reply to this comment
21/11 19:34:31
Padma Arvind wrote:
துளசி: நன்றி. கொலஸ்டிரால்ல் LDl, HDl இவற்றின் அளவு தெரிய வேண்டும். மொத்தம் 130 மைக்ரோகிராம்/ டெசிலிட்டருக்கு மேல் இருந்தால்(பெண்களுக்கு)அது நீரிழிவு நோயில் முடியவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் HDL/LDl விகிதம் தெரிந்திருத்தலும் அவசியம். 5 என்று எதை குறிப்பிடுகிறீர்கள் என்று விளக்குங்களேன் தனிமடலில்.

reply to this comment
21/11 20:20:27
வெளிகண்ட நாதர் wrote:
நமக்கு அரிசி சாப்டற பழக்கம் இன்னும் போகலிங்க, இந்த ப்ரொவுன் ரைஸ் சாப்பிட்ட நீரிழிவு நோய்யை கட்டு பாட்ல வச்சுக்க முடியும்ங்களா?

அமெரிக்காவில் மருத்துமனை, காப்பீடுகள்-சில குறிபபுகள்
Nov 8th, 2005 by பத்மா அர்விந்த்

08/11:
மருத்துவர்களின் பணி காலத்திற்கேற்ப மாறுகிறது. முன் எப்போதும் இல்லாத அளவு பல துறை வல்லுனர்கள். சமீபத்தில் சேர்ந்து கொண்ட பாதங்களுக்கான podiatrist, chiropractor போன்ற எல்லாவற்றிற்கும் தனி வல்லுனர்கள். அமெரிக்கா என்றாலே நல்ல கவனிப்பு என்றோ இல்லை அதிக வளர்ச்சி அடைந்த நாடு என்றோ இங்கே வரும் அரசியல்வாதிகள் சாதாரணமாக பொதுமக்களிடம் ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்திவிட்டதை புரிந்து கொள்ள முடிகிறது. இன்னும் சில பதிவுகளில் இங்கே உள்ள மருத்துவமனைகள், மருத்துவர்கள், இந்தியாவில் மருத்துவம் படித்து இப்போது வருபவர்கள், 80க்கும் முன் வந்தவர்கள் பற்றியும் இந்தியாவில் மருத்துவமனைகள் பற்றியும் உடல் நல கவனிப்பு திட்டங்கள் பற்றியும் (கனடாவை போல சிறந்தது இல்லை என்றாலும்) எழுதலாம் என்ற எண்ணத்தில் முன்னுரையாக ஒரு பதிவு. வழக்கம் போல தனி அனுபவத்தோடு )

இங்கே மருத்துவ சிகிச்சை பெற செல்பவர்கள் மொழி பிரச்சினை இருந்தால் ஒரு மொழி பெயர்ப்பாளரை கேட்டு கொள்ளலாம். அமெரிக்க அரசின் திட்டம் படி மொழி தெரியவில்லல என்ற காரணத்திற்காக யாருக்கும் மருத்துவ உதவிகள் புறக்கணிக்க படக்கூடாது .அதேபோல ஆண் மருத்துவரிடம் செல்லும் போது ஒரு பெண் நர்சை உடனிருக்க சொல்லலாம்.

இந்த பதிவு காப்பீடுகள் பெரும்பாலும் பணியிடத்தில் கிடைக்கும் என்றாலும் குடும்ப உறுப்பினர்களுக்கு சில இடங்களில் நாம் பணம் கட்ட வேண்டும். கல்லூரி மாணவர்களுக்கு சற்றே சகாய மாத கட்டணத்தில் கிடைக்கும். மற்றபடி பல இடங்களில் நிரந்தர வேலை இல்லாதவர்களுக்கு இந்த சலுகைகள் கிடைப்பதில்லை. இங்கே மருத்துவ செலவு மிக அதிகம் என்பதால் காப்பீடு இல்லாமல் சிகிச்சைக்கு செல்வது அதிக கடினம்.

ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால், நோயாளி மருத்துவமனையை வழக்காட வாய்ப்பு இருப்பதால், மருத்துவர்கள் பேரில் மருத்துவமனையும், தனியாக பயிற்சி செய்பவர்கள் malpractize காப்பீடும் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்கு மாதாந்திர கட்டணம் அதிகம்.

மருத்துவ காப்பீடு இருப்பதாலும் எந்த ஒரு அறிகுறியையும் தவறவிட்டுவிட்டு பிறகு அது ஆபத்தில் முடிந்துவிடுமோ என்பதலோ என்னவோ சாதாரணமாகவே பலவித பரிசோதனைகளும் செய்ய படுகின்றன. இதுவும் பலவிதசெயற்கை முறையில் கருத்தரிக்கும் முயற்சிகளும், சில சமயம் life supportஇல பல நோயாளிகளை நீண்ட நாட்கள் மருத்துவமனையில் செயற்கையாக உயிரோடு வைத்திருக்க செய்யும் முயற்சிகளும் காப்பீடுகளின் மாத கட்டணத்தை அதிகமாக்குகின்றன. ஆகையால் பலருக்கு இந்த காப்பீடு வைத்திருப்பது கடினமாகிறது.

அமெரிக்காவில் பிறந்த வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கும், மற்ற நாட்டு குடியுரிமை உள்ள பெற்றோருக்கு பிறந்தவர்களானாலும் வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்க படுகிறது.

இங்கேயும் பல நேரத்தில் மருத்துவர்கள் நோயாளிகளால் முடியாது என்பது தெரிந்தால் அவர்கள் தரவேண்டிய கட்டணத்தின் பகுதியை வாங்கி கொள்ளாமலே விட்டுவிடுவது உண்டு. மருத்துவமனையில் நடக்கும் தவறுகளால் நோயாளிகள் துன்புற நேருமானால் வழக்காட இலவசமாக இங்கே உள்ள சில அமைப்புகள் உதவி செய்கின்றன.

நடிகை ஸ்ரீதேவியின் அன்னை இங்கே உள்ள ஸ்லோன் கேட்டரிங் மருத்தவமனையில் சேர்க்க பட்டிருந்தார். அப்போது அவரின் மூளையில் கட்டியை நீக்க செய்யப்பட இருந்த அறுவை சிகிச்சை தவறுதலாக செய்யப்பட்டதால், மேலும் துன்பத்துக்குள்ளானார். அதன் பின் நியுயார்க் மருத்துவமனை பொறுப்பேற்று கொண்டு சரியான அறுவை சிகிச்சையை செய்து முடித்தாலும், சில மாதங்களுக்குள்ளாகவே அவர் இறந்து விட்டார்.அப்போது அந்த தவறுக்கு பொறுப்பேற்று கொள்ள ஒரு XRay technician மாற்றி வைத்து விட்டதாக பொறுப்பேற்று கொள்ள நிர்பந்திக்க பட்டு மருத்துவமனையிலிருந்து ஈடும் பெற்று கொண்டு முன்வந்து ஓய்வு பெற்று கொண்டதோடு வழக்கு முடிந்துவிட்டது. ஸ்ரீதேவி வழக்கு மனறத்தில் நஷ்ட ஈடு கேட்டு போட்ட வழக்கும் அவருடைய அம்மா உயிரோடு இருந்திருந்தாலும் ஸ்ரீதேவிக்கு அதனால் வருமானம் வர வாய்ப்பு இல்லை, மன அழுத்தம் + இழப்புக்கு மாறாக நியுயார்க் மருத்துவமனையில் இலவசமாக செய்த அறுவை சிகிச்சை, அவர்கள் (ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர்) தங்கும் இட,ம் அவர்கள் தங்கிய போது ஆ ன உணவு செலவு ஆகியவற்றை பார்த்து கொண்டதோடு சரியாகி விட்டது என்று சொல்லி விட்டதாக அறிந்தேன். அ ப்போதெல்லாம் ஸ்ரீதேவி உணவகத்திற்கு வரும் போதுதான் எல்லோருக்குமே பசி எடுக்கும் பதினாறு வயதினிலே முதல் Mr. India வரை பேசி அவரை போரடித்த பல ஆய்வாளர்களுக்கு அது ஒரு மாறுதலாக இருந்தது.

இந்த வழக்குகள் அதிக பரபரப்பு தந்து மருத்துவமனைக்கு கெட்ட பெயர் வாங்கி தரும் என்றால் அவர்களே தவறு இருந்தாலும் இல்லாவிட்டாலும் வழக்குக்கு தகுந்த மாதிரி 25000 முதல் 75000 வரை தந்து வழக்கை நிறுத்திவிடுவார்கள். இங்கேயும் பாதிக்க படும் நோயாளிகளும் உண்டு. ஒருவருக்கொருவர் நோயாளிகளை அனுப்பி (referral) மூலம் பணம் சேர்க்கும் மருத்துவர்களும் உண்டு.

இந்தியாவில் இருந்து வயதான பெற்றோரை காப்பீடு இல்லாமல் அழைத்து வரும் போது பல இ ல வ ச பரிசோதனைகள் அரசு தரப்பில் செய்ய பட்டாலும், அறுவை சிகிச்சை போன்றவை செய்ய நேரிட்டால் மருத்துவமனையில் பேசி உதவி பெற்று கொள்ளலாம். தேர்ந்தெடுக்கும் மருத்துவர், மருத்துவமனை இவற்றின் விவரங்கள் எங்கே படித்தார்கள், ஏதேனும் வழக்குகள் உள்ளனவா போன்ற விவரங்கள் காப்பீடு நிறுவனத்தில் அல்லது AMA இடமிருந்து பெறமுடியும்.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madethanu wrote:
பாதங்களுக்கான Podiatrist துறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது எனக்கே புதிய செய்திதான். காப்பீடும், அது சார்ந்த வைத்தியமும் தீவிரமான நோய்களுக்கு உகந்தது என்றாலும், சாதாரண தலைவலி , காய்ச்சலுக்குக் கூட தனிப்பட வைத்தியம் செய்துகொள்ள முடியாதது கஷ்டம்தான் இல்லையா பத்மா? என் கோ-சிஸ்டர் எல்ட்ராக்ஸின் என்ற மாத்திரை எடுப்பவள். அது முடிந்தபோது, காப்பீடும் கிடைக்காத நேரத்தில், வெளியில் வாங்க முடியாமல், சக நண்பரிடமிருந்து மாத்திரை `கடன்’ வாங்கி சாப்பிட்டதாகச் சொன்னாள்.

reply to this comment
08/11 23:41:38
மூர்த்தி wrote:
//அமெரிக்காவில் பிறந்த வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கும், மற்ற நாட்டு குடியுரிமை உள்ள பெற்றோருக்கு பிறந்தவர்களானாலும் வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்க படுகிறது.//

பத்மா அவர்களே,

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. இங்கே எல்லாம் குடியுரிமை பெற்றவர்களுக்குத்தான் சிறப்புச் சலுகை. மற்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள் எல்லாம் கட்டணம் இரட்டிப்பாக வசூலிக்கிறார்கள்!!!

அப்புறன் இந்த தவறான அறுவை சிகைச்சை பற்றி:-
கோழி கூவுது விஜி முதல் பலருக்கும் தவறான அறுவை சிகைச்சை செய்யப் பட்டுள்ளது. அறுவை முடிந்து கத்திரை உள்வைத்துத் தைத்த மருத்துவர்களின் கதையை அடிக்கடி சொல்லிச் சொல்லிச் சிரிப்போம். வலப்பக்கம் அறுக்கச் சொன்னால் இடப்பக்கம் அறுத்துபின் வாங்கிக் கட்டிக் கொண்டவர்களும் உண்டு.

நகைச்சுவைக்காக பத்திரிகைகளில் துணுக்காக வெளிவரும் முன்பெல்லாம். இப்போது செயலிலும் காட்டுகிறார்கள் போலும்.

reply to this comment
09/11 00:28:07
Padma Arvind wrote:
தாணு
பெரும்பாலோர் அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் பொருளாதார ரிதியில் காப்பீடு இல்லை என்றால் பல மருத்துவமனைகள் உதவும். மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரி போன்ற இடங்அளில் இலவச மருத்துவ உதவி உண்டு. பல இடங்களில் இலவச பரிசோதனைகள் வழக்கமாக கிளினிக்குகள் நடத்த படுகின்றன. இன்னும் விவரம் தெரிந்தால், யாரை அணுக வேண்டும் என்று சொல்லலாம். இங்கே பிறந்தவர்களுக்கு மெடிக்கெய்டு, மற்ரும் family care (illegal immigrantsக்கும்) உதவுவார்கள்.

reply to this comment
09/11 12:29:50
Padma Arvind wrote:
மூர்த்தி,
தவறான அறுவை சிகச்சை: ஜிப்மரில் நான் இருந்த போது நடந்த முதல் இதய(Open heart) அறுவை சிகிச்சை தேவையே இல்லாத நோயாளிக்கு செய்ய பட்டது. அதேபோல AIIMS இல் ஒரு மத்திய மந்திரியின் மகன் கத்தரிக்கோலை உள்ளே வைத்து தைத்துவிட்ட வழக்கும் நடந்தது.
இங்கே யாருக்கேனும் பரவக்கூடிய நோய் இருந்தால் எல்லாரையும் பாதிக்கும் என்பதால் அனைவருக்கும் சலுகை உண்டு. அதுவும் illegal immigrant கருவுற்ற பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம்.

reply to this comment
09/11 12:33:14
Maya wrote:
நன்றி பத்மா அவர்களே..
ஒரு காய்ச்சல் என்றால் உடனே மருத்துவரிடம் போய் சிக்கிச்சை எடுப்பது தானே நல்லது..அமெரிக்காவில் அப்படி இல்லையே..
முதலில் appointment ..அந்த மருத்துவர் in network ல் இருக்கவேண்டும்..appointment கிடைக்க குறைந்தது இரண்டு நாள் ஆகும்..இதற்க்குள் காய்ச்சல் தானாக போய் விடும்..
சரி..உடனேயே போக வேண்டுமா?? emergency க்குதான் போக வேண்டும்..அதன் பிறகு வருமே ஒர் கட்ரினா(பில்லை சொன்னேன்)..
என்னைப் பொறுத்த வரை அமெரிக்காவில் மருத்துவம்,insuracnce மிகப் பெரிய வியாபாரம்.சேவை என்று சொல்லி விடாதீர்கள்..
sue பன்னுவார்கள் என்று சொல்லி சொல்லியே premium ,bill ஏற்றி விடுவார்கள்..
அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்

reply to this comment
09/11 14:22:48
padma arvind wrote:
உண்மைதான். என் பதிவிலேயே கூட இருக்கிறது. உடனே பார்க்க வேண்டும் என்றால், நீங்கல் PCP ஐ தேர்ந்தெடுக்கும் போதே walk in clinic இருக்கிறவராக தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அதேபோல நல்ல காய்ச்சல் இருந்து அவசர சிகிச்சைக்கு போனால், காப்பீடே பணம் கட்டிவிடும். நீங்கள் மேலோட்டமாக சொல்கிறீர்கள். சமீபத்தில் ஒரு குழந்தைக்கு குடல் மாற்று அறுவை சிகிச்சை +20 நாட்கள் + இன்னொரு சிகிச்சை அட்ரீனல்+ 250,000$. காப்பீடு இல்லை. பணம் கட்டியது எங்கள் துறை. இது போல வருடத்திற்கு நாங்கள் செலவழிக்கும் பணம் கிட்டதட்ட 1 பில்லியன் $. இவை ஏழைகளுக்கு. மற்றபடி என் பதிவில் சேவை என்றெல்லாம் நான் மிகைபடுத்தி எழுதவில்லை.

reply to this comment
09/11 15:47:08
Maya wrote:
பத்மா அவர்களே ,
தயவு செய்து தவறாக நினைத்து விடாதீர்கள்.இந்தியாவில் இந்தப் பொருளாதாரத்திலும் இலவச மருத்துவமனை உண்டு.தரம் வேண்டுமானால் அமெரிக்கா அள்விற்கு இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் அமெரிக்கா உலகிலேயே பொருளாதாரத்தில் மிக உயர்ந்து இருந்தாலும் காப்பிடு
ஒருவனுக்கு இல்லை என்றால் அவன், அவன் சார்ந்த குடும்பங்களின் கதி என்னவாகும்..
இங்கு எத்தைனையோ பேர்கள் அடுத்த வேலை கிடைக்கும் வரை காப்பிடு இல்லாமல் கஷ்டப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்..உங்களுக்குத் தெரியாதா ?? cஒப்ரா இருந்தாலும் அதுக்கு உண்டான ப்ரெமிஉம் உங்களுக்குத் தெரிந்திருக்குமே…
நீங்கள் கூறுவது போல் நான் மேலோட்டமாகப் பேசலாம்..நானும் ஒத்துக்கொள்கிறேன்..உங்களுடைய பதிவுகளையும் படித்து வருபவன்..உங்கள் மூலம் விஷயங்களை அறிந்தும் கொள்கிறேன்..கண்டிப்பாக் உங்களைப் போன்றவர்களின் சேவை தேவை.

தயவு செய்து உங்களையோ உங்கள் எழுத்துக்களையோ நான் குறை கூறவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்.

reply to this comment
09/11 17:00:19
padma arvind wrote:
மாயக்கூத்தன்
தவறாக நினைக்க எதுவும் இல்லை. காப்பீடு இல்லாமல் கச்டப்படுகிறவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவு படுத்த இருக்கிறேன். இங்கே உள்ள குறைகளையும் சொல்ல இருக்கிறேன்.நம்மைப்போல உள்ளவர்களுக்கு பல வாய்ப்புகள் இருப்பது தெரிவதில்லை. இங்கே இலவச மருத்துவ வசதிகளும் உண்டு.40 மில்லியனுக்கும் அதிகமானோர் இங்கே காப்பீடு வைத்திருக்கவில்லை. இதை பற்றி இன்னும் விவரமாக, தொலைபேசி எண்களோடு எழுதுகிறேன்.
இந்த ஒரு கருத்துக்கும் மாறுபட்ட கருத்து உண்டு. நான் உங்கள் பின்னூட்டங்களை பிரரின் பதிவுகளிலும் படித்து இருக்கிறேன்.இது இன்னும் 4 பதிவுகளாக எழுத இருக்கிறேன். அதேபோல இந்திய மருத்துவமனைகள் பற்றியும் அவற்றில் உள்ள சில நல்ல தன்மைகளை பற்றியும் எழுத இருக்கிறேன்

reply to this comment
09/11 19:48:08
Maya wrote:
மிக்க நன்றி பத்மா அவர்களே
உங்களுடைய பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..
அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்

11/10: மார்பக புற்று நோய் தடுப்பு மாதம்
Oct 11th, 2005 by பத்மா அர்விந்த்

NIH மற்றும் center for disease control க்காகவும் நான் தயாரித்த மார்பக புற்று நோய் பற்றிய கையேட். தமிழோவியத்தில் வந்தாலும் இந்த நோயின் முக்கியத்துவம் கருதி இங்கே தருகிறேன். வரும் ஞாயிறன்று நியுஜெர்ஸியில் உட்பிரிட்ஜ் மாலில் இதற்காக நடை திட்டமிடப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் உலக அளவில் மார்பக புற்று நோய் தடுப்பு மாதமாக பரிந்துரைக்க படுகிறது. முன்காலத்தில் ஆசிய பெண்களுக்கு அதிக அளவில் மார்பக புற்றுநோய் வந்ததில்லை என்றாலும் பழக்கங்கள், சுற்று புர சூழல் இவற்றின் மாற்றத்தால் இப்போது அதிகம் பரவலாக காணப்படுகிறது.

நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டுவது அவசியம். இது மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். இன்று நான் மார்பக நிழல் படத்தின் முக்கியத்தைப் பற்றி பேசப் போகிறேன்.
நீஙகளோ, உஙகள் மருத்துவரோ அறியும் முன்ணே மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகளைக் கண்டறிய உதவுகிறது.

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நிழல் படம் எடுத்துக்கொண்டு உஙகளைக் காப்பற்றுவதோடு, உஙகள் சகோதரி, அன்னை, உறவினர் அனைவருக்கும் தெரியப் படுத்தி அவர்களையும் நோயிலிருந்து பாதுகாக்க உதவுங்கள். ஆண்களுக்கும் மார்பக புற்று நோய் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

உங்களுக்கு நிழல் படம் அவசியம் இல்லை என்று எண்ணாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டுவது அவசியம். மார்பக நிழற்படம் எடுப்பதை குறித்து பல வேறு கருத்துக்கள் இருந்தாலும் அமெரிக்காவின் நோய்கள் தடுக்கும் நிறுவனம் (Center for disease control) இதை பின்பற்றுகிறது.

வயதாக, வயதாக இது அவசியம். இரண்டு வருடத்திற்கொருமுறை, நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டுவதும், மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுவதும் அவசியம். இதனால் மார்பகப் புற்றுநோய் மூலமாக வரும் இறப்பு விகிதம் குறையும். உணவு பழக்கங்கள், வாழும் சூழல் , காற்றில் உள்ள மாசு இவற்றினால் மார்பக புற்று நோய் வர வாய்ப்பு இருக்கிறது.

இங்கே மார்பக நிழல் படம் எடுக்கத் தயாராகச் சில குறிப்புகள் தருகிறேன்.

உங்களுக்கு மாதவிலக்கு இருக்குமானால், உங்களுடைய பரிசோதனையை சற்று தள்ளி செய்து கொள்ளுங்கள். ஏனெனில், அப்போது மார்பகங்கள் சற்றே கடினமாக இருக்கும். அ தனால், வலி இருக்க கூடும்.

பரிசோதனை அன்று, அழகுப் பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். எந்தவித வாசனைத் திரவியங்களையும் பயன் படுத்தாதீர்கள்.இவை, நிழல் படத்தில் சந்தேகத்தை உண்டு பண்ணும். மிக எளிதாக ஆடை மாற்ற வசதியாக உடை அணிய வேண்டும்.

மார்பக நிழல் படஙகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று நோய்களைக் கண்டறியவும், மற்றொன்று வடிகட்டுவதற்கும் பயன்படுகிறது. நாம் முதலில் நோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவும் நிழல் படம் எடுப்பதைப் பற்றி அறிவோம்.

உங்களுடைய மருத்துவரின் முகவரியும், தொலைபேசியின் எண்ணும், முன்பு செய்துகொண்ட பரிசோதனை முடிவுகளும் கொண்டு வருவது அவசியம்.
மார்பக நிழல் படம் எடுக்க சில நிமிடங்களே ஆகும். இது மிக எளிது.
நீங்கள் ஒரு கதிர் வீச்சு கருவியின் முன் நிறுத்தப்படுவீர்கள். உங்கள் மார்பகம் ஒரு தட்டில் வைக்கப்படும். அதன் மேல் இன்னும் ஒரு தட்டு வைத்து மார்பகத்தை சற்றே அழுத்துவார்கள்.

ஒரு சில மணித்துளிகளுக்கு உங்கள் மார்பகம் தட்டையாக இருக்க வேண்டுவது அவசியம். மார்பகங்கள் தட்டையாக இருக்க வேண்டுவது அவசியம்.ஏனெனில் அப்போதுதான் கட்டிகளையும், மற்ற மாற்றங்களையும் அறிய முடியும்.
நிழல் படம் எடுக்கும் நபர் உங்கள் மார்பகங்களை இரண்டு படங்கள் எடுப்பார். ஒன்று பக்கவாட்டிலும், மற்றொன்று மேல்வாட்டிலும்.நிழல் படங்கள் ஒரு மருத்துவரிடம் கொடுக்கப் படும். அவர் உங்கள் படங்களில் ஏதெனும் குறைகள் இருக்கின்றனவா என்று பரிசோதிதுவிட்டு உங்களைத் தொடர்பு கொள்வார்.
நீங்கள் ஒரு வாரத்திற்குள் அழைக்கப் படவில்லையெனில், மருத்துவரைத் தொடர்பு கொள்ளவேண்டும்.

இவ்வகையான நிழல்படம் எடுக்க, மார்பக புற்று நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிந்துரை செய்யப் படுகிறாள்…இது மார்பகத்தின் அளவிலோ, தோலின் நிறத்திலோ, தடிமன் சற்றே அதிகறித்தாலோ, மார்பகக் காம்புகளில் இருந்து திரவம் வடிந்தாலோ நோய்க்கான அறிகுறிகளாகக் கொள்ளப் படும்.

இவ்வாறான அறிகுறிகள் இருந்தால், அவசியும் மருத்துவரை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் அணுக வேண்டும்.
இந்த அறிகுறிகள் சிலசமயம் புற்று நோயில் முடிவதில்லை. ஆனாலும் பரிசோதித்து அறியவேண்டியது முக்கியம்.
இன்று நாம் இந்த வகை அறிகுறிகள் இல்லாத, வடிகட்டுதலுக்கான நிழல் படம் பற்றிப் பேசுவோம்.

மார்பக நிழல் படம் எடுக்க ஆகும் செலவு:

வடிகட்டுவதற்காக நிழல் படம் எடுக்க $150 ஆகும்.
இவை தனியார் இன்சுரன்சு அல்லது மெடிக்கர் மூலம் கட்டப்படும்.
சில இனவழி சங்கங்கள், நிகழ்ச்சிகள் இவை இலவசமாக செய்து தருவார்கள்.
உங்கள் மருத்துவரை அணுகுங்கள்:

எப்போது நீங்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும், எவ்வளவு மாதத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் மருத்துவரிடம் கேட்கவும். பிறகு ஒரு அட்டவனை செய்து கொள்ளவும், அதனை வாழ்நாள் முழுவதும் பயன் படுத்தவும்.
இன்று எல்லா பரிசோதனை நிலையங்களும் உணவு மற்றும் மருந்துகள் அனுமதிக்குழுவிடம் இருந்து அணுமதி பெறவேண்டும். இதனால் அவற்றின் தரம், கருவிகளின் நிலை, அங்கு வேலை செய்யும் மனிதர்களின் செயல் திறன், அவர்கள் வைத்து இருக்கும் படிவங்கள் ஆகியவற்றிற்கு உத்திரவாதம் தர இயலும்.
நீங்கள் அமெரிக்காவில் வாழ்பவர் என்றால் 1-800-4-கேன்சர் அழைத்து உங்கள் வீட்டுக்கருகே இருக்கும் பரிசோதனை நிலையம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

காத்திருக்காமல் இன்றே மருத்துவர்களை அணுகுங்கள். இது உங்கள் வாழ்வு.

மார்பக புற்று நோய் தடுக்கவல்ல காய்கறி: ப்ராக்கோலி எனப்படும் பூவகை. இதில் உள்ள இண்டோல் 3 சார்பினால் என்பது மார்பக புற்றுநோய்க்கு காரணமான ஜீன் அதிக அளவில் வீரியம் இல்லாததாக மாற்றுகிறது. எனவே வாரம் ஒருமுறை பிராக்கோலி சேர்த்து கொள்ளுங்கள். பிராக்கோலியில் நீர் அதிக உள்ளதால் இது எடை குறையவும் பயனாகிறது.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madeKannan wrote:
இந்தப் பதிவுக்கு மிக்க நன்றி!

reply to this comment
11/10 23:30:18
R. Valavan wrote:
Dear authour,

Your article on breast cancer is very good and informative. Keept it up.

reply to this comment
12/10 02:55:13
thanu wrote:
பத்மா
இத்துடன் periodic self examination of the breast பற்றியும் சில வரிகள் சொல்லியிருக்கலாம். பின்னூட்டத்தில் சொல்லிவிடுங்கள்.

reply to this comment
12/10 03:51:43
asalamone wrote:
Thanks Lot for your article about breast cancer.

Please keep some more update in future that we expect from you.

thanks and regards
asalamone
Bahrain

reply to this comment
18/10 04:12:59
Padma Arvind wrote:
பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றிகள். தாணு: சுய பரிசோதனி செய்யும் முன் தங்கள் மார்பகங்கள் எப்படி இருக்கின்றன என்பதையும் உணர வேண்டும். இல்லை எனில் பல பயங்களை தோற்றுவிக்க கூடும் என்பதால்தான் எழுதவில்லை. நான் ஒரு அட்டை தயாரித்திருக்கிறேன் சுயபரிசோதனை செய்து கொள்ளும் முறைகள், விளக்க படங்களுடன். விரும்புகிறவர்கள் தொடர்பு கொண்டால் அனுப்பிவைக்க இயலும்.

reply to this comment
18/10 08:18:39
கல்வெட்டு wrote:
பத்மா நல்ல தவல்கள்.
X-Ray யைத்தானே நிழல் படம் என்கிறீர்கள்?

reply to this comment
18/10 08:44:37
DJ wrote:
பத்மா, இப்போதுதான் இதை வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. தேவையான பதிவு. நீங்கள் குறிப்பிட்ட மாதிரி ஆசியப்பெண்களுக்கும் இந்நோய் இப்போது அதிகமாய் வருகின்றது என்று நினைக்கின்றேன். இங்கும் எனக்குத் தெரிந்த பலர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இன்னமும் இது குரித்து சரியான அறிவும், மார்பகப் புற்றுநோய் வந்தால் சமூகம் எப்படி தங்களை பார்க்கும் என்ற தயக்கமும் பலரைப் பரிசோதனைனைகளில் ஈடுபடாமல் தவிர்க்கச் செய்கின்றது. அமெரிக்கா போலல்லாது (விரைவில் சுகாதார சேவைகளை கட்டணமாக்கவேண்டும் என்று விவாதம் நடந்துகொண்டிருந்தாலும்) இலவசமாக இப்பரிசோதனைகளை குடும்ப வைத்தியர்களின் சிபாரிசுகளில் மூலம் செய்யலாம். வலைப்பதிவுகளில் எழுதப்படும் இவ்வாறான விழிப்புணர்வுக்கட்டுரைகளை விரிவான தளத்தில் சமூகத்துக்குள் கொண்டு சென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions