அறிவிப்பு: இது என்னுடைய கருத்து மட்டும்தானே தவிர இதுதான் சரி என்று சொல்வது என் நோக்கம் அல்ல. ஒரு மாற்றுவழியை முன்வைத்திருக்கிறேன் எனக்கு தெரிந்தவரையில்.
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கிலா
அலகிலா விளையாட்டுடையார் –அவர்
தலைவர் அன்னவர்க்கு சரண் நாங்களே என்றபடி ஒரு சக்தி என்னையும் அறியாமல் வழிநடத்துவதாக எ ன க்கு நம்பிக்கை உண்டு. அதுவும் புகுமுக வகுப்பில் முழுசதவிகிதம் மதிப்பெண் எடுத்தும், அவளை பொறியியல் படிக்க வைக்க முடியாத நிலை இருந்தபோது, அப்படி இளநிலை படித்தால் இயற்பியல் தவிர்த்து வேறெதுவும் படிக்க மாட்டேன் என்று சொல்லி அரசினர் ஆடவர் கல்லூரியில் சேர்ந்து படித்து பின் அவளுடைய விருப்பப்படியே பொறியியலும் படித்து, பின் ஐ.ஐ.டியில் மேல்படிப்பும் படிப்பார் என்றும் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆடவர் கல்லூரியில் இயற்பியல் படிக்க 10 பெண்களாவது வந்தால் தான் முடியும் என்று நிர்வாகத்திஅனர் சொல்லிவிட்டபடியால்,அதுவும் 10 பெண்கள் இயற்பியல் படிக்க சேர்க்கும் வரை கொஞ்சமும் நம்பிக்கை இல்லை.. உயிர் வேதியியல் படிக்கும் போது மனித உடல் என்னை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. ஒவ்வொரு நேர்மறை அயான் சேரும் போது அதை உடலின் அமில – கார நிலை எவ்வாறு சரிசமமாக்கப்படுகிறது என்று. இதையெல்லாம் ஒழுங்குமுறையாக இருக்க இயற்கையின் திறன் முக்கியம். அந்த இயற்கையே எனக்கு இறைவனாகிறான். ஆனாலும் சிறுவயதில் கற்ற தமிழ், வடமொழி பாடல்கள் அனிச்சையாக மனதிற்குள் வந்து போகும் ஒவ்வொருமுறை செயல் துவங்கும் முன்னும்.
சிறுவயதில், 5 ஆம் வகுப்பு வரை வைத்திஸ்வரன் கோவிலில் இருந்தோம். அப்போது சன்னிதியின் வாசலில் உள்ள தபால் தந்தி அலுவலகத்தில் என் தந்தை அதிகாரியாக (Post Master)இருந்தார். கிருத்திகை அன்று கோவிலுக்கு கூட்டமாய் வரும் பெரும்பாலார், தங்கும் இடத்திற்கு பணம் செலுத்த வசதி இல்லாதவர்கள் உள்ளே நுழைந்து பைகளை வைத்துவிட்டு விட்டு, கோவிலுக்கு போவார்கள். அவர்களை எங்கள் வீட்டிலேயே குளிக்க சொல்லி, குழந்தைகளுக்கு உணவு அளிப்பதும் வழக்கமாக இருந்தது.
கோவிலில் வள்ளி தெய்வானை திருமணங்கள் சிறப்பாக நடக்கும். இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு அந்த கதைகள் தெரிந்திருக்க வேண்டும் என்ற அ ளவிலேயே நடக்கும். நான் சென்று நாள் முழுதும் கோவிலில் இருந்து கவனித்திருக்கிறேன்.
என் அக்கா நைஜீரியா செல்லும் முன் திருப்பதி செல்ல விரும்பியதால், நாங்கள் அனைவரும் முதல் முறையாக திருப்பதி சென்றோம். மலையே இறைவனாக மிக அழக்கான மரங்களும் மலைகளும் மனதில் இன்னும் நிறந்திருகிறது. ஆனால் அங்கே தர்ம தரிசன வரிசையில் எத்தனை நேரமாகும் என்று தெரியாமல் மாட்டி கொண்டு 12 மணிநேரம் நெரிசலில் சிக்கி நின்ற போது, அழும் குழந்தைகளும் வரிசையில் இருந்து மீள முடியாமல் வழியிலேயே மலம் கழிக்கும் சிறுவர்களுமாய் வெளியேறினால் போதும் என்று தோன்றிவிட்டது. அப்போதைய குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி வந்ததாலும், தர்ம தரிசன் வரிசை கதவ்டைப்பு செய்ய பட்டது. குழந்தைகளும் சிறுவர்களையும் அழைத்து வந்து பசியுடன் 12 மணி நேரம் நின்றிருந்த ஏழைகளுக்கு இறைவைன் தரிசனம் கிடைக்க வில்லை.
இப்போதெல்லாம் கட்டணம் செலுத்தி தரிசனம் செய்ய முடியும் என்றாலும் திருப்பதி செல்வதே இல்லை. ஒருவகையில் முதலில் சென்ற அந்த பயணம் எங்களுக்கு ஒரு பாடமாக இருந்தது என்று சொல்லலாம். ஒவ்வொருவராய் வேலைக்கு போக ஆரம்பித்த போதும் கோவிலுக்கு பாலும் பழமும் கொண்டு அர்ச்சனை செய்யததே இல்லை. மாதம் ஒருமுறை கோவில் வாசலில் உள்ள பிச்சைக்காரர்களுக்கோ அனாதை விடுதிகளுக்கோ உணவு வழங்கும் வழக்கம் மட்டும் இருகிறது.
கடவுளுக்கு கல்யாண உற்சவம் செய்வதும், ஒப்பிலியப்பன் கோவிலில் யாரோ ஒரு பக்தர் நவரத்தின கிரீடம் வைர முடி போன்றவை தந்ததும் என்னை பொறுத்தவரையில் இறைவனுக்கு உகந்ததாய் இருக்க முடியாது.
ஆனாலும் என் திருமணத்திற்கு பின் என் கணவன் வீட்டில் திருப்பதி சென்று கல்யாண உற்சவம் செய்ய வேண்டும் என்று சொன்னது 14 வருடங்களாக ஒத்திவைப்பில் இருக்கிறது. இபோது பக்தர்களின் வசதியின் பொருட்டு பல இடங்களில் கல்யாண உற்சவம் செய்யும் வசதி செய்து தரப்பட்டிருக்கிறது. முன்நாளில் பங்குனி உத்திரம் அன்று பட்டும் நடந்த கல்யாண உற்சவம் இப்போது எப்போது வேண்டுமானுலும் முடியும். இதைகூட என்னால் ஒப்புக்கொள்ளமுடிவதில்லை.
சமீபத்தில் என் கண்வர் வீட்டினர் வழிபடும் கோவிலில் பெருமாளுக்கு தங்க கசம் செய்ய பணம் திரட்டிய போதும் எனக்கு அதில் ஒப்புதல் இல்லை. பள்ளிக்கு செல்ல கூட முடியாத நிலையில், மாற்றி போட்டுக்கொள்ளாத நிலையில் இருக்கும் பெண்கள், சிறுவர்கள், ஆண்களுக்கு கைத்தறி உடை கூட இல்லை. நான் தானமும் தர்மும் கூடாது என்று சொல்லவில்லை. தேவைபடும் இடத்து தக்க உதவிகள் செய்ய வேண்டும்.
படமாடும் கோவில் பகவற்கொன்றீயில்
நடமாடும் கோவில் நம்பற்கங்காகா
நடமாடும் கோவில் நம்பற்கொன்றீயில்
படமாடும் கோவில் பகவற்கதாமே.
நான் நகர உயர்நிலை பள்ளியில் படித்த காலம் 10 வகுப்பிற்கு மேல் பெண்கள் தாவணி அணிய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. என் வீட்டில் அம்மவிடம் புடவைகளே அதிகம் இல்லாத நிலையில் தாவணிக்கு எங்ஏ போக? மூத்த சகோதரியின் நைந்து பழசாகிப்போன ஒரு புடவை கிழிக்க ப்ட்டு நாங்கள் இரு சகோதரிகளும் பெற்று கொள்வோம். இக்கலிங்கம் போனால் என்ன ஏகலிங்க மாமதுரை சொக்கலிங்கம் உண்டே துணை என்பது போல அதுவே பள்ளி முடியும் வரை கூட வரும். பிறகு கல்லூரி சென்ற போது கைத்தறி புடவை இல்லாமல் வேதியியல் செய்முறை வகுப்புக்களில் வெளியேற்ற பட்டிருக்கிறேன். வகுப்பின் வெளியே 3 மணி நேரம் நிற்பது அவஸ்தையானது. எப்போதாவது எனக்கும் வசதி வந்தால் இந்நிலை மாற முயற்சிக்க வேண்டும் என்று நினைத்து கொள்வேன். அதன்படி ஒரு காப்பிக்காகும் செல்வை தனியாக எடுத்து வைத்து வருட முடிவில் நகர உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியரிடம் தருமாறு என் சகோதரனிடம் சொல்ல அவனும் அதை போல இன்னும் சிறிது பணம் போட்டு அவரிடம் கொடுப்பதும் வழக்கமாகி போனது. அந்த பணத்தை வங்கியில் போட்டு வைத்து வரும் வட்டியில் சில மாணவிகளுக்கு சீருடை புத்தகங்கள் வாங்கி தருவதும், ஆதை பெற்ரு கொள்ளும் மாணவிகள் எனக்கு கடிதம் எழுதுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை தந்து
பிறர் உயர உழைத்திருக்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியை கேட்பேன்
அந்த சிரிப்பினில் இறைவனை நான் பார்ப்பேன் என்பதிலும் உண்மை இருக்கிறது.
இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madekarupy wrote:
பத்மா நல்ல ஒரு கட்டுரை. தங்களுக்கு இருக்கும் சிறு நம்பிக்கை கூட எனக்கு இல்லை. இறைவன் என்று ஒன்றை வணங்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாதவள் நான். தாங்கள் சொல்வது போல் ஏழைகளுக்கு உதவுதல்தான் மனதிற்கு கொஞ்சமேனும் நிம்மதியைத் தரும். ஆனால் ஜெயமோகனின் “ஏழாம் உலகம்” படித்த பின்பு அதிலிருக்கும் நம்பிக்கையும் போய் விட்டது. எல்லாமே வியாபாரமாகிவிட்ட நிலையில் எதிலும் நம்பிக்கை அற்ற தன்மையே எஞ்சி நிற்கின்றது.
reply to this comment
19/07 10:19:43
வன்னியன் wrote:
சிறப்பான பதிவு.
என்னைக்கேட்டால் கோயிலுக்கான தான தர்மங்கள் எதிர்க்கப்பட வேண்டியவையே என்பது என்கருத்து. இது நான் சார்ந்த ஈழத்தின் சிக்கல்களோடு பார்க்கிறேன். இன்னும் மக்கள் குடியேற அனுமதிக்கப்படாத பிரதேசங்களின்; கோயில்களுக்குத் தேர் செய்ய இலட்சக்கணக்கிற் பணம் திரட்டப்பட்டுள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கில் வீடுவாசலின்றி மக்கள் அவதிப்படுகையில், படிக்க பாடசாலைக்கட்டடங்களே இல்லாத நிலையில் கோயில்களுக்கு இறைக்கப்படும் பணம் வயிற்றெரிச்சலைத்தான் தருகிறது.
அதுமட்டுமன்றி, இன்னும் சாதித்தடிப்பையும் பரம்பரைச் செருக்கையும் வெளிக்காட்டவும் கோயில்த் திருவிழாக்கள் தான் வடிகாலாயிருக்கின்றன.
reply to this comment
19/07 10:24:02
வன்னியன் wrote:
அடடே கறுப்பி!
இன்னும் இதுக்குள்ளதான் சுத்திக்கொண்டிருக்கிறியளோ?
reply to this comment
19/07 10:41:03
karthikramas wrote:
நட்சத்திரத்துக்கு வாழ்த்து.
reply to this comment
19/07 10:55:17
karupy wrote:
ஆமாம் வன்னியன் இன்னும் இங்குதான் சுத்திக்கொண்டிருக்கின்றேன். அனேகமாக வியாழக்கிழமையோடு மின்கணனி இடம்மாறிவிடும் என்று நினைக்கின்றேன். வெள்ளியோடு வேலை முடிகின்றது. வலைப்பதிவுகளை பார்வையிடுவேன். முக்கியமானது என்று படும்போது பின்னூட்டமிடுவேன். அவ்வளவே.
காதிர்காமஸ் அவ்ளோதானா?
reply to this comment
19/07 11:05:21
Mathy Kandasamy wrote:
மிகவும் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் பத்மா.
இங்கே கோவில்களில் ஒவ்வொரு மாதமும் உண்டியலில் குறைந்தது பத்தாயிரம் டாலர் சேரும் என்ற செய்தியும்,
திருவிழாவுக்கு ஒவ்வொரு நாளும் நாப்பதாயிரம் வரை திரட்டி குழுக்களாகச் சேர்ந்து பொறுப்பேற்றுச் செய்கிறார்கள் என்ற செய்தியும் சமீபத்தில் கிடைத்தது.
பணத்தை, உற்றார் உறவினர் இல்லாத அனாதைக்குழந்தைகளுக்குச் செலவு செய்யவும், புதுத் தொழில்களைத் தொடங்கவும் நினைக்கும் உறவினர்கூட, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றபடி பணத்தைக் கொடுக்கிறார்கள்.
அடுத்த வார இறுதியில் Val Morin முருகன் கோயில் தேர். பத்தாயிரக் கணக்கான வாகனங்கள் முற்றுகயை¢டும்.
நீங்கள் சொல்வதை, இங்கே எவ்வளவோ சொல்லிப் பார்த்திருக்கிறேன். ம்கும் பலனில்லை.
-மதி
reply to this comment
19/07 12:43:23
Mookku Sundar wrote:
அருமையான சிந்தனை.
பிறருக்கு கெடுதல் நினைக்காமல், முடிந்தவரை நல்லவர்களாக இருந்தாலே போதும்.கடவுள் என்றாலே கடந்தும், உள்ளும் இருப்பவன் என்ற பொருளில் நாம் “உள்” ளையே மறந்து விட்டோம்.
சந்தனக்காப்பு அலங்காரமும், பஞ்சாமிர்த/பால்/பன்னீர் அபிஷேக அட்டகாசங்களும் கடவுளா கேட்கிறார்..??
தமிழ்நாட்டில் ஆத்திகம், நாத்திகம் என்று எல்லாமே – பிழைப்புதான்.
reply to this comment
19/07 13:26:54
ராம்கி wrote:
நட்சத்திரப் பதிவு.
சிறு வயதில் நன்றாகத் தமிழ் கற்றிருக்கிறீர்கள். அதுவும் ஆன்மீகத் தமிழ்..
உங்கள் எழுத்து படிப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. எந்தவித தத்துவ முலாமும் இன்றி போலி சவடால்கள் இன்றி வாழ்க்கை அனுபவங்களில் இருந்து பதிவுகள் வருவதால் சிறப்பாக இருக்கின்றன.
ராம்கி (ரஜினி ராம்கி அல்ல)
ஸ்டேஷன் பெஞ்ச் ராம்கி.
எலிக்குட்டியை எங்கும் வைத்துப் பார்க்கும் அவசியம் இல்லை.
reply to this comment
19/07 13:47:04
Snegethy wrote:
அண்மையில் ஆதி பராசக்தி படம் பாரத்தேன்.அதில் ஒரு காட்சியில் அம்மனுக்கு பலகாரங்கள் எல்லாம் செய்து படைத்துவிட்டு யாகம் செய்துவிட்டு முனிவர்கள் எல்லாம் இருந்து படையலை சாப்பிடுவார்கள் அம்மனோ ஒரு மீனவன் வீட்டுக்குச் சென்று பழைய கஞ்சி குடிப்பா.
கோயிலுக்கு பளிங்குக்கல் பதிக்க ஒரு சதுர அடிக்கு $25 கொடுக்கிற நேரம் சிதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகளைப் புனரமைக்க 3000 ரூபா கொடுப்பது எவ்வளவோ மேல்.
reply to this comment
19/07 13:58:58
இராதாகிருஷ்ணன༯a> wrote:
நட்சத்திரப் பதிவுக்கு வாழ்த்துகள்!
reply to this comment
19/07 16:15:52
துளசி கோபால் wrote:
நல்ல பதிவு பத்மா.
reply to this comment
19/07 18:11:27
Padma Arvind wrote:
கருப்பி:
ஏழைகளுக்கு உதவும்போதும் திகட்டதிகட்ட செய்தால், இருப்பதால் தான் கொடுக்கிறார்கள் என்று குறை சொல்ல நேரிடும். சுனாமியில் தூக்கி எறியப்பட்டவை பற்றி படித்தேன்.
reply to this comment
19/07 18:29:24
Padma Arvind wrote:
நன்றி வன்னியன்.நீங்கள் சொல்வதைப்போல அவர் எவ்வளவு செய்திருக்கிறார். நீ ஏன் செய்யவில்லை என்று சொல்வதையும் செருக்கை காட்டி புடவை சார்த்துவதையும் பார்த்திருக்கிறேன். பக்தி இதுவல்ல
reply to this comment
19/07 18:30:45
Padma Arvind wrote:
நன்றி மதி, சுந்தர்: கோவிலுக்கு புடவை வாங்கி தா குறைகள் அகலும் என்று பரிகாரம் சொல்லும்வரை மக்கள் நிறுத்தப்போவதில்லை.
reply to this comment
19/07 18:31:46
Padma Arvind wrote:
சினேகிதி, கார்த்திக், துளசி, இராதாகிருஷ்னன்
நன்றிகள்.பாராட்டுக்களுக்கு நன்றி ராம்கி. நான் உங்கள் பதிவுகளை படித்திருக்கிறேன். station bench என்ற பெயரே அழகாக் இருக்கிறது
reply to this comment
19/07 18:33:39
sarah wrote:
நல்ல சிந்தனை பத்மா
இதனைப் படித்தபின்
“மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெருங்கதைகள் சேர்த்துப் – பல
கள்ளமதங்கள் பரப்புதற் கோர்முறை
காட்டவும் வல்லீரோ?”
ஆவியினுள்ளும் அறிவினிடையிளும்
அன்பை வளர்த்திடுவோம்”
என்ற பாரதியின் வரிகளோடு கூடிய சிந்தனையும் வந்தது.
மிக்க நன்றி பத்மா உங்களது அனுபவம் சார்ந்த உண்மைகளுக்கும், அதனை உரக்கக் கூறும் திறனுக்கும்.
சாரா
reply to this comment
19/07 20:38:44
மூர்த்தி wrote:
மிக நல்ல பதிவு பத்மா அவர்களே…
மனதைப் பாதித்தது நீங்கள் பகிர்ந்துகொண்ட இக்கட்டுரை. யோசிக்கவும் வைத்தது.
reply to this comment
19/07 20:39:45
Arun wrote:
நெஞ்சைத் தொடும் பதிவு. குடியரசுத் தலைவர், பிரதமர் என்று பலரால் பாராட்டப்பெற்ற தாங்கள், எப்படி படிப்படியாக படிக்கக் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள் என்று புரிகிறது.
- அருண் வைத்யநாதன்
reply to this comment
19/07 23:11:05
mugamoodi wrote:
// Snegethy wrote: கோயிலுக்கு பளிங்குக்கல் பதிக்க ஒரு சதுர அடிக்கு $25 கொடுக்கிற நேரம் சிதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகளைப் புனரமைக்க 3000 ரூபா கொடுப்பது எவ்வளவோ மேல். //
அது எப்படி மேலாகும்.. எனக்கென்னவோ ரெண்டும் ஒன்று போலவே தெரிகிறது. உங்களுக்கு மாவீரர் மேலிருக்கும் கல் பெரியது, மற்றவருக்கு கல்லுக்குள் இருக்கும் கடவுள் பெரியது…
நான் இவ்வருடம் வரை காபிக்காகும் செலவை நான் படித்த உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு – பள்ளிக்கு அல்ல – தரலாம் என்று தீர்மானித்திருக்கிறேன்…
reply to this comment
19/07 23:33:28
mugamoodi wrote:
// இவ்வருடம் வரை // இவ்வருடம் முதல்
reply to this comment
19/07 23:34:21
அல்வாசிட்டி.வி wrote:
ஆகா! இந்த வார நட்சத்திரமா நீங்க. நான் கவனிக்கவே இல்லை பாருங்க. முதலில் வாழ்த்துக்கள்.
இந்த கட்டுரையைப் பற்றி:
பக்தி என்ற மாயையும் மீறி பொதுநலனில் அக்கறைக் கொண்டோர் கொஞ்சமாவது இதைப் பற்றி யோசிப்பதுண்டு. இதை ஒட்டிய பதிவு எழுத நினைத்து தள்ளி போய் கொண்டேயிருக்கிறது. ஆனால் நீங்கள் ரொம்ப எஃப்க்டிவாகவே எழுதியுள்ளீர்கள். “வாசிப்போம் சிங்கப்பூர்” இயக்கத்தின் வாயிலாக மறைந்த சிங்கப்பூர் எழுத்தாளர் நா.கோவிந்தசாமி அவர்களின் “வேள்வி” நாவலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நாவல் நீங்கள் சொல்லும் இந்த கருத்தை வலியுறுத்துகிறது. சிங்கப்பூர் சுழலுக்காக இந்த கதை எழுதப்பட்டிருந்தாலும் எங்கும் இது பொருந்துமென நினைக்கிறேன்.
சிங்கப்பூரில் இந்திய கோவில்களைப் பற்றி படிப்புக்காக ஆராய்ச்சியை மேற்கொள்கிறான் ஒரு தமிழ் இளைஞன். அளவுக்கதிகமாக கோவில்களுக்கு இருக்கும் சொத்து எதற்கும் பயன்படாமல் இன்னொரு கோவிலுக்கு போட்டியாக கோவிலை அலங்கரிப்பதிலே செல்வழிக்கிறார்கள். ஆராய்ச்சி மாணவன் ஏன் அந்த பணத்தை சமுதாய முன்னேற்றத்துக்கு பயன்படுத்தக் கூடாது என்று கேட்டதற்கு “சாமி குத்தம்” அது இதுவென பழமை பேசுகிறார்கள். அவனை ஒதுக்குகிறார்கள். அவனது போராட்டம் பற்றி பேசும் கதை அது.
இந்த பதிவை படிக்கும் போது அந்த நாவல் தான் ஞாபகம் வந்தது
reply to this comment
20/07 00:03:34
Ramesh wrote:
Nalla Pathivu. I also felt the same thing 2 days back when I read in newspaper that Ilayaraja Donated 27 lakhs worth ornamant to Mookambigai temple.
1 crore loan irukunnu ooorula irukira thamizhar ellam avar pannina CDya vanga solli kettavaru intha panathai avara sponser pannina org.kkukku kudithiruntharnna, innum neraiya athma thirupthi kedaichirukkum
reply to this comment
20/07 00:17:16
mugamoodi wrote:
சூப்பர்….. தல சூப்பர்…. நல்ல பதிவு…. ஜமாய்ச்சுட்டீங்க….
இந்த பின்னூட்டத்தின் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.. அது இங்கே இந்த பதிவில் அதிக பின்னூட்டம் இடுபவர்களுக்கு காயகல்பம், கங்கை தண்ணீர், கசுமாலப்பொடி, கருவாடு ஆகியவை சாஷேக்களில் அடைக்கப்பட்டு இ-மெயிலில் அனுப்பி வைக்கப்படும்…
உங்கள் பதிவை திசை திருப்பும் எண்ணம் இல்லை… இது ஒரு ஜாலி முயற்சி அவ்வளவே… தயவு செய்து இந்த ஒரு முறை பொருத்துக்கோங்க…
reply to this comment
20/07 01:00:45
NONO wrote:
நல்ல பதிவு! சிந்திக்கவேண்டியது! ஆனால் காணிக்கை செலுத்துபவர்களை குறைகூற எனக்கு அருகதையில்லை! நான் செய்யும் “ஊதாரிச்” செலவை பார்கையில் (உ+ம்: நான் புகைக்கும் சிகரட்டின் விலை மாதம் இந்திய மதிப்பின்படி 6 502 ரூபாய், ஒருவருடம் 6502*12= 78 ஆயிரத்து 24 ரூபாய் ) அவர்கள் கானிக்கை அளிப்பது ஒன்றும் பெரிய தவறாய் எனக்கு தெரியவில்லை ஆத்தம திருத்திக்காக அப்பிடி காணிக்கை அளிக்கிறார்கள்!
“நான் இவ்வருடம் வரை காபிக்காகும் செலவை நான் படித்த உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு -
பள்ளிக்கு அல்ல – தரலாம் என்று தீர்மானித்திருக்கிறேன்…”
நானும் இவ் யோசனையை பின்பற்ற முயற்சி செய்கிறேன்….. காப்கிச் செலவை அல்ல.. புகைத்தல் செலவை!!!!
reply to this comment
20/07 09:54:35
kumaraess wrote:
நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்,
படமாடும் கோவில் பகவற்கொன்றீயில்
நடமாடும் கோவில் நம்பற்கங்காகா
நடமாடும் கோவில் நம்பற்கொன்றீயில்
படமாடும் கோவில் பகவற்கதாமே.
சிறு வயதில் பாடசாலை சைவசமய பாடத்தில் படித்தது, வரிகள் மறந்துபோய்விட்டாலும், பொருளை மறக்காமல் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லலாம் செயல்ப்படுத்திக்கொண்டிருக்கிறேன். முடிந்தால் இந்த செயுள் தொடர்பான மேலதிக தகவல்களை தந்து உதவவும்.
reply to this comment
20/07 11:00:25
Padma Arvind wrote:
சாரா: தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி. நான் இன்னும் முழுமையாக பாரதியை படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
அருண், மூர்த்தி: மிக்க நன்றி.
முகமூடி: உங்கள் எண்ணம் முழுமையாக வாழ்த்துக்கள்.
விஜய்: வாழ்த்துக்களுக்கு நன்றி. நான் வேள்வி புத்தகம் கிடைத்தால் படிக்கிறேன். இதுபோல படிக்க வேண்டிய பட்டியல் உங்களை போன்றோர்களால் அதிகரித்துக்கொண்டே போகிறது.
ரமேஷ்: நானும் வைரக்கற்கள் மூகாம்பிகைக்கு தந்ததை படித்தேன். இவர்கள் கண்ணில் ஏனோ தற்கொலை வரை போகிற சக தொழிலாளிகள் படுவதே இல்லை என புரியவில்லை.
நோநோ: மிக்க மகிழ்ச்சி. தீர்மானம் நிறைவேற வாழ்த்துக்கள்.
குமரேஸ்: நானும் சிறுவயதில் படித்த பாடல். இது திருமந்திரத்திலிருந்து வருகிறது என்று நினைக்கிறேன்.
reply to this comment
20/07 11:18:16
kk wrote:
Yes, it is from thirumanthiram
reply to this comment
20/07 11:20:14
Thangamani wrote:
//நானும் வைரக்கற்கள் மூகாம்பிகைக்கு தந்ததை படித்தேன். இவர்கள் கண்ணில் ஏனோ தற்கொலை வரை போகிற சக தொழிலாளிகள் படுவதே இல்லை என புரியவில்லை//
பத்மா, பின்னூட்டமிட நேரமில்லை, ஆனால் உங்கள் பதிவின் முக்கியத்துவமும் நேர்மையும் என்னை நன்றியுணர்வில் நெகிழ்த்துகின்றன.
“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள த்ஹ்ருமங்கள் யாவும்
பெயர் விளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”
-பாரதியின் வரிகள் நினைவுக்கு வந்தன.
நன்றிகள்!
reply to this comment
20/07 18:35:31
Jayashree Abdul Malick wrote:
Madam,
Well written article. Somehow my parents had the same thought like you and I had never seen them spending money on such donations, abishekams to temples instead they used to get books to the needy childrens (my father & mother used to daily poojas and observe all fastings). Moreover, these highlighted thoughts in your article not only will help the needy people, but also help in reducing the religious fanaticism and encourage to accept all religions.
reply to this comment