வேலைக்காரி என்றொரு சாதி
நாம் எல்லோருமே ஒருவகையில் வேலைக்காரர்கள் தான் என்றாலும் பொதுவாக வேலைக்காரி என்பது கீழ் மட்டத்தில் தாழ்ந்த சாதிக்காரர்களை குறிக்கிறது. இது பொருளாதாரத்தை வைத்து தாழ்ந்தவர்கள் என்றாலும் அதனுள்ளே சாதி அடிப்படையில் சில வேலைகள் சிலரால்தான் செய்யபடுகிறது.
நாம் ஒரு நிறுவனத்தின் வேலைக்காரர்கள் என்றபோதும் நம்மை அந்த நிறுவனம் எப்படி நடத்த வேண்டுமோ அப்படி நம் வீடென்ற நிறுவனத்தில் வேலை செய்ய வருபவர்களை நடத்துவதில்லை.
அதற்கு அமெரிக்கா பரவாயில்லை. என் வீட்டை வாரம் ஒருமுறை வ ந்து சுத்தம் செய்யும் மெக்ஸிகோ நாட்டு பெண் நேரத்திற்கு வருவதும் சுத்தமாக வேலை செய்வதும் நான் வைத்து செல்கிற காசோலையை எடுத்துக்கொள்வதும் சத்தமின்றி இயல்பாக நடக்கிறது. நான் வீட்டில் இல்லாத போது தான் வருவாள் என்பதால் ஒரு சாவி உண்டு அவளிடம். அவளுடைய குழந்தைக்கு பள்ளி விடுமுறை என்றால் உடன் அழைத்து வருவாள். அலுவலகத்திலும் கடை நிலை ஊழியர் முதல் நிறுவன அதிகாரிவரை வேலை நேரம் முடிந்ததும் ஒரே தரத்தில்தான். பார்ட்டி என்றாலோ அலுவலக பிக்னிக் என்றாலும் அனைவரும் வேறுபாடு பார்ப்பதில்லை.
இன்னமும் திருவரங்கத்தில் நிறைய வீடுகளில் வேலைக்காரி வந்து சுத்தம் செய்த பாத்திரங்கள் கொல்லையிலேயே காத்திருக்கும். பூஜை முடிந்தபின் அவற்றின் மீது ஒரு கைப்பிடி நீர் தெளித்தபின் அவை உள்ளே வரும்.
வெள்ளிக்கிழமை காலையில் வேலைக்காரி தாமதமாகிவிட்டால் ஒரே கூப்பாடு. அத்வும் அவளும் இவர்களும் ஒருவர் அருகில் இன்னொருவர் வந்தால் தீட்டு என்று மனிதராக நடத்தாமல் படுத்தும் பாடு இது 21 ஆம் நூற்றாண்டுதானா என்று எண்ண வைக்கிறது. அதேபோல கோவில் பிரசாதங்கள் வீட்டிற்கு வந்தாலும் கடைசியில் மீந்தால் மட்டுமே இவர்களுக்கு. மீந்தா தரேன் ராத்திரி வா, அப்படியே பாத்திரம் கொஞ்சம் ஜாஸ்தியாஇடுத்து தேச்சு தா” என்பவர்களால் எப்படி இப்படி இருக்க முடிகிறது. பகிர்ந்துன்ணும் குணம் போனதெங்கே? கழிவிடத்தின் அருகே உணவு தருவதையும் இரண்டு வருடம் முன்னால் கண்டேன்.
சமீபத்தில் சில வார இதழ்களி ல் கூட இவர்களை கிண்டல் செய்வதை பார்க்கிறேன். நாம் சற்று பொய்வ்டெஉத்து கொண்டு காபி அருந்த போவதில்லையா, இணையத்தில் உலாவுவது இல்லையா அல்லது நம் உறவினருடன் தொலை பேசுவதில்லையா? நமது நிறுவனம் இ ல வ ச காப்பி தர வேண்டும், இன்ன சலுகைகள் தர வேண்டும் என்பதும் பண வீக்கத்திற்கு ஏற்றார்போல ஊதியம் அதிகரிக்க வேண்டும் என்றூ ஊக்க போனஸ் தகுதி போனஸ் தர வேண்டும் என்றும் எதிர்பார்ப்பது போல, படிப்பிற்காக இந்த சலுகைகள் என்றால், அவர்களுக்கு குறைந்த பட்சம் மனிதாபிமானமாவ து காண்பிக்கலாம்தானே.. அவர்களுக்கு நாமாவது சம்பளத்தை ஏற்றி இருக்கிறோமா? குறைந்தபட்சம் சத்தம் போடாமல் புரிந்து கொள்ளலாம் அது நம்மால் முடியும்தானே.
பெண்டாட்டி மேல் பூதம் வந்ததென்பார் பானையிலே தேளிருந்து பல்லால் கடித்தென்பார் என்றெல்லாம் சொன்னாலும் அது நாம் அவர்களை நன்றாக கவனித்து கொள்ளாததால்தான். இவளுக்கு வந்த திமிர் பார்த்தியா, நல்ல காப்பி வேனுங்கிறா. இப்பதான் என்னோட பொடவை வேற தந்தேன் நன்றி கெட்ட சன்மம் நம்ம கன்கொத்தி பாம்பாட்டம் பார்க்கலைன்னா அங்கியே குப்ப இருக்கும் அதனால் தான் பகவான் இவாளை இப்படி வெச்சிருக்கிறான் என்று சத்தமாக பேசிய மாமி ஒருவரை கேட்க நேர்ந்தது.
நிறைய நண்பர்கள் வேலைக்கரர்களின் குழந்தைகளுக்கு உடை எடுத்து தருவது, புத்தகங்கள் வாங்கிதருவது என்று செய்கிறார்கள். அவர்களுக்கு என் வணக்கங்கள். இப்போது நிலைமை மாறி இருக்கலாம். ஆனால் படிக்கின்ற பத்திரிக்கைகள் அப்படியான எண்ணத்தை என்னுள் உருவாக்கவில்லை. நம்மை ஒருவர் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படி நாம் அடுத்தவரை நடத்த கற்று கொள்வோம்.
இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madeThamarai wrote:
பத்மா, உங்களிடம் ஒரு கேள்வி. நீங்க தமிழ் நாட்டில் இருக்கும்போது உங்க வீட்டில் வேலையாட்கள் இருந்திருக்கிறார்களா? அவர்களை என்றாவது நீங்கள் டைனிங் டேபிளில் உட்கார வைத்து சப்பாடு போட்டிருக்கிறீர்களா? தவறாக நினைக்கதீர்கள். மிகவும் சாதாரணமாகக் கேட்கிறேன்.
தாமரை.
reply to this comment
23/07 17:20:01
Padma Arvind wrote:
தாமரை
இதில் தவறென்ன இருக்கிறது. எங்கள் வீட்டில் வேலைக்காரர்கள் இருந்ததில்லை. ஏழை என்றும் சாதி வேறுபாடு காட்டி நாங்கல் யாரையும் ஒதுக்கியதில்லை. எல்லோருமே தரையில் இன்றாய் இருந்து சாப்பிட்டிருக்கிறோம்.
reply to this comment
23/07 17:40:53
Arun wrote:
அன்புள்ள பத்மா,
நான் கூறும் விஷயத்தை நல்ல முறையில் எடுத்துக் கொள்வீர்கள் என்று நம்பி சொல்கிறேன். நீங்கள் சொல்வதில் அனைத்தும் நல்ல விஷயங்கள் தான்! நீங்கள் கொடுக்கும் உதாரணங்களும் உண்மையானவையாகவே இருக்கலாம்…மறுப்பதிற்கில்லை! ஆனால் வர வர உங்கள் பதிவுகள் எல்லாம் ஒரு மாதிரி ஸ்டீரியோ டைப் ஆகி வருகிறது. நீங்கள் உதாரணமாய் கொடுக்கும் அக்ரஹாரத்து மாமிகள் போல, சமூகத்தில் பலரும் அவர்கள் அவர்கள் இடத்தில் பேசியவர்களாகத் தானிருப்பார்கள். நீங்கள் இது போல உதாரணங்கள், நீங்கள் வளர்ந்த சூழ்நிலையின் காரணமாகத் தருகிறீர்கள்…ஆனால், இணையம் அனைவரும் புழங்கும் வெளி. அதுவும் குறிப்பாக பார்ப்பனர்கள், பார்ப்பனீயம் என்று குத்திக் கிழித்து, பின்னூட்டப் போர்கள் நடந்து இப்போது தான் சற்று ஓய்ந்திருக்கிறது. நீங்கள் இது போலெல்லாம் எழுதுவதால், இருபது பேர் வந்து ‘நல்ல பதிவுகள், நன்றி பத்மா’ என்று எழுதிவிட்டு செல்வார்கள். ஆனால், இருபதில் மூன்று பேராவது…இதை அவர்கள் வசதிக்கேற்றவாறு திரித்தும், உரித்தும் எழுதி விடுவார்கள்.
நீங்கள் எப்படி பல உயர்ந்த எண்ணங்களோடு பிறந்து, வளர்ந்து அவற்றைக் கடைபிடித்தும் வருகிறீர்களோ…அது போல பலர் இருந்து கொண்டே இருக்கிறார்கள், இருப்பார்கள். கொஞ்சம் முத்திரை குத்தும் விதமாகவும், ஸ்டீரியோ டைப்பாக எழுதப்படும் பதிவுகளையும் தவிர்த்தால் நன்றாயிருக்குமென்று நினைக்கிறேன்.
- அருண் வைத்யநாதன்
reply to this comment
23/07 17:56:20
Mathy Kandasamy wrote:
அதென்ன அருண், இதுபோன்ற அவசியமான பதிவுகளில்கூட நீங்கள் உங்கள் குயுக்தியான பின்னூட்டங்களை இட்டு பிரச்சினையையே திசைதிருப்புகிறீர்கள்?
என்னைப்போல சாதாரணமாகப் பார்ப்பவர்களைக்கூட, உங்களைப்போன்றவர்களின் பின்னூட்டங்கள் புருவம் நெரிக்க வைக்கிறது.
பத்மாவின் அவரின் அனுபவப் பதிவுகளை இடுவதைக்கூட, உங்களின் subtleஆன arm twisting மூலம் தடுத்து நிறுத்தப் பார்க்கிறீர்கள்.
இது என்னுடைய வெளிப்படையான எண்ணம்.
பத்மா, உங்களின் பதிவைத் திசை திருப்பும் எண்ணமில்லை. ஆனால், சொல்லவேண்டியது அவசியம் என்று கருதியதால் இந்தப் பின்னூட்டம்.
-மதி
reply to this comment
23/07 18:06:18
ஜோக்கர் wrote:
தாமரையின் பின்னூட்டமும் அருணின் பின்னூட்டமும்தான் வெவ்வேறு இடங்களிலிருந்து வரும் ஸ்டீரியோடைப்பான பார்வைகளாகத் தெரிகின்றதே தவிர, பத்மாவின் பதிவு அல்ல. உருப்படியான பதிவுகள், தொடர்ந்து எழுதவும்.
reply to this comment
23/07 18:18:58
Padma Arvind wrote:
அன்புள்ள அருண்
வெளிப்படையான கருத்துக்களுக்கு நன்றி. உங்கள் கருத்தும் அன்பும் புரிகிறது. மிக்க நன்றி. இன்று காலையில் நடந்த ஒரு சம்பவம் நான் இதை எழுதியதற்கு காரணம். என்னுடைய 6 மணி நேரம் நான் செலவிட்டது மருத்துவமனையில்.உலகில் நடப்பது நிறைய மாறவில்லை. இன்று காலை 12 வயது இந்திய பெண் வேலை செய்ய வந்தவளை உண்புணர்ந்த பெரியமனிதரை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். நான் இப்போதுதான் வீட்டிற்கு வந்தேன் மருத்துவமனையிலிருந்து. சின்னஞ்சிறு சிறுமி. வேலை செய்ய வந்த சிறுமி.இது என் தொழில் அல்ல. நான் என்னுடைய ஆ ரவ த்தினால் பேச, சட்ட உதவி கிடைக்க செய்கிறேன். கண் முன் நான் என்ன தப்பு செய்தேன் பெஹன்ஜி என்று கேட்கும் குழந்தை. என் மகனைவிட 2 வயதே பெரியவள். இதன் பாதிப்பே இந்த பதிவு. அவள் விகடனில் போன இதழில் வந்த அத்தனை சம்பவங்களும் மிகுந்த பன வேதனையை தந்தன. பார்ப்பனர்களை பற்றி மட்டுமே எழுதுவது என் நோக்கம் இலை. நான் பார்த்தவர்கள் அவர்கள்தான்.
நல்ல வேளையாக நாம் உயர்ந்த இடத்தில் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோம்.
படிப்பதற்கே இவை போரடிக்கிறதே, வாழ்பவர்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதை சிலராவது உணரவேண்டும். பின்னூட்டங்கள் வரும் வரவில்லை என்பது என் கவலை அல்ல. நிலைமை மாறவேண்டும். காலம் காலமாய் வாழ்பவர்கள் நிலை கொஞ்சமாவது தேறவேண்டும். நீங்கள் கூட இது குறித்து கவிதை எழுதி இருக்கிறீர்கள் அருண். எனக்கு தெரிந்தது இது ஒன்றுதான். கொஞ்சமாவது விழிப்புணர்வு வர எழுதுவது பேசுவது என் னாலான சிறு உதவி. இணையம் பலரும் புழங்கும் இடம் என்பதால்தான் எழுதுகிறேன்.
என்னை உயர்த்தி கொள்ளவோ பாராட்டு பத்திரம் படிப்பதற்கோ இல்லை. அது எனக்கு தேவையும் இல்லை.ஏனெனில் எனக்கு வேலையின் முடிவிலேயே ஆனந்தம் கிடைத்து விடுகிறது. உணமை வலிக்கிறது, ஆனால் வேதனையுடன் படுத்த படுக்கையாக இன்று மருத்துவமனையில் உள்ள அந்த வேலைக்கார பெண்ணின் இதயம் துடிக்கிறது.There are thousands of people who do things quietly, and I salute them. I write here so some people can look at a different side. I actually mentioned it at the intro too. Thanks again for your sincere views,
reply to this comment
23/07 18:27:47
Padma Arvind wrote:
மதி:
நன்றிகள். என்னுடைய பதிவுகளில் அதிக சீரியஸ்தன்மை இருப்பதென்னவோ உண்மைதான். நான் அறிந்ததும் அது ஒண்றுதான். அருண் நல்ல நண்பராக சொல்கிறார்.
உங்கள் ஆதரவிற்கு நன்றி
reply to this comment
23/07 18:30:34
Arun wrote:
மதி,
ஆஹா..நான் எழுதுவது குயுக்தியான பின்னூட்டம், நீங்கள் சாதாரணமாகப் பார்ப்பவர்கள்…பேஷ், பேஷ்! எத்தனையோ அவசியமான பதிவுகளில்
நல்ல முறையில் பாராட்டுகளைத் தெரிவிக்கவும் நான் தவறியதில்லை (நேரம் கிடைக்கும் போது, நான் இட்ட பின்னூட்டங்களில்). உங்களது வெளிப்படையான எண்ணம் போல, நானும் எனது வெளிப்படையான எண்ணத்தை பத்மாவிடம் சொன்னேன். எப்படி உங்களுக்கு எனது சான்றிதழ்கள் தேவையில்லையோ, அதே போல எனக்கும் உங்களின் சான்றிதழ் சத்தியமாய் தேவையில்லை!
பத்மா, உங்களுக்கு தனியாகவே இதை ஒரு இமெயிலாக போட்டிருப்பேன். பாராட்டுக்களை பதிவுகளில் தெரிவிப்பது போல, இது போன்ற வேறுபாடையும்
பதிவிலேயே தெரிவிக்கலாமே என்று தோன்றியதால் செய்தேன்.
மற்றபடி, உங்களின் மீது மரியாதைகள் நிறையவே உண்டு என்பதை நீங்கள் அறிந்தவர் என்பதில் எனக்கு சந்தேகமில்லை!
நான் வாதம் புரிய வரவில்லை. எனவே என்னைத் திட்டியும், இகழ்ந்தும் போடப்படும் எந்தப் பின்னூட்டத்துக்கும் அல்லது கருத்துக்களுக்கும் நான் பதில் சொல்லப் போவதுமில்லை.ஏனெனில், என்னைப் பொறுத்தவரை நேர அது விரயம்.
- அருண்
reply to this comment
23/07 18:39:37
Arun wrote:
அன்புள்ள பத்மா,
மிக்க நன்றி. நானும் கூட இது குறித்து எழுதியிருக்கிறேன். நிலைமை மாற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. நீங்களே குறிப்பிட்டது போல, நான் நல்ல நண்பனாகத் தான் சொன்னேன்.
புரிந்து கொள்ள வேண்டிய நீங்கள் இதைப் புரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
- அருண் வைத்யநாதன்
reply to this comment
23/07 18:46:02
Arun wrote:
பெஹன்ஜி என்ற அந்தப் பெண்ணின் நிலை படிப்பதற்கு மிகுந்த கஷ்டமாகத் தானிருக்கிறது. உங்களின் சேவை தொடரட்டும் பத்மா!
- அருண்
reply to this comment
23/07 18:50:05
Thangamani wrote:
பத்மா, நீங்கள் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு நன்றி! நீங்கள் ஒரு வகுப்பினரை திட்டுவதாகவோ, குறைசொல்வதாகவோ நான் நினைக்கவில்லை. மாறாக உரத்து உண்மைகளைச் சொல்வதற்கு உங்களுக்கு தார்மீக உரிமையும், தகுதியும் இருப்பதாகவே நினைக்கிறேன். அதைச் செய்வதற்கு உங்கள் அனுபவங்கள் செழுமைப்படுத்திய மனிதம் ஒன்றே காரணம் என்று புரிந்துகொள்கிறேன்; உங்கள் பதிவுகளை நல்லபதிவுகள் என்று நெகிழ்ந்துபோவதற்கும், நன்றியுணர்வுகொள்வதற்கும் அது ஒன்றே காரணம். மற்றபடி நீங்கள் வாரம் ஒரு பதிவு அல்லது ஆடிக்கு ஒன்று அம்மாவாசைக்கு ஒன்று என்றுதான் சீரியசான பதிவுகள் இடவேண்டியதில்லை என்று நினைக்கிறேன். உங்கள் பதிவுகளிலேயே எளிமையான நகைச்சுவையும், தமிழின் அழகும் உள்ளது. சில சமயங்களில் (தற்போது) சில எழுத்துப்பிழைகள் இருப்பதைத் தவிர நான் உங்கள் நடையையை இரசிக்கவே செய்கிறேன். உங்கள் கடுமையான பணிகளுக்கிடையே நீங்கள் வலைபதிவதையும், அமெரிக்க- இந்திய வாழ்முறைகளையும், அதன் விளிம்பு நிலை மனிதர்களையும் பற்றி பேசும் ஒரே வலைபதிவராக உங்களை இனங்காணுகிறேன். ஒரு குறிப்பிட்ட பருவத்தில் (காலப்பகுதியிலும் கூட) தமிழின் மேலும் வாழ்க்கையின் மேலான விழுமியங்களின் மேலும் மதிப்பும், அன்பும் கொண்டவர்களே இம்மொழி நடையையும், பார்வையையும் கைவரப்பெற முடியும் என்பதை நான் அறிவேன்.
மற்றபடி உங்கள் பதிவுகளை பாராட்டுபவர்கள் சரியான முறையில் புரிந்துகொள்கிறார்கள் என்றே நான் நம்புவேன். ஏனெனில் அவர்களை நான் பொதுவாக சந்தேகிக்க முடியாது.
நன்றி. தவறாய் இருந்தால் மன்னிக்கவும்.
reply to this comment
23/07 19:32:41
Padma Arvind wrote:
அன்புள்ள தங்கமணி
உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். நீங்கள் நன்றாக சிந்திப்பவர் என்பதை நான் அறிவேன். நாம் பார்க்கிற காட்சிகள் அதிகம் பாதிப்பை தருகின்றன. இன்றைய தினம் எனக்கு அப்படியாகிவிட்டது. இன்று மட்டும் இல்லை தினமும் வலியுடன் வருபவர்கள் சந்திக்கிறேன். இப்படிக்கூட துன்பம் வரமுடியுமா என்ற முறையில் வயதான பெரியவர்களை பார்க்கும் போது வேதனையாய் இருக்கிறது. இவர்களுக்கு இறப்பு வர கூடாதா என்று தோன்றுகிறது.
பார்ப்பதும் கேட்பதும் அவலமாக இருக்கும்போது வேறு எதை எழுடினாலும் அதில் என்னையும் அறியாமல் போலித்தனம் வருகிறது. இ ப்போதும் கூட அந்த பெண்ணை பார்த்து பதிவெழுத முடிகின்ற எனக்கு என் மகனுக்கு ஒன்று ஆகி இருந்தால் அமைதியாக இருக்கமுடியுமா என்றே தோன்றுகிறது.இதுவும் கூட தவறுதானோ என்று சிந்திக்க வைக்கிறது. என் பதிவின் வரிகளே நிஜங்களின் அவலம்தானே.
எதற்காக போலியாக எழுத வேண்டும்? அதற்கு எழுதாமல் இருப்பதே மேல் அல்லவா? நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றறிந்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி.
எழுத்துப் பிழைகளுக்கு வருந்துகிறேன். சாப்பிடும் உணவில் கல்லாக கடினமாய் இருந்திருக்கும். அவசரமாய் எழுதியதால் என்றாலும் இனி கவனமாக இருக்க முயற்சிக்கிறேன் சுட்டியமைக்கும் நன்றிகள்
reply to this comment
23/07 19:51:04
arun wrote:
அன்பு தங்கமணி,
மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள், நன்றி.
நீங்களும் நானும் பல விஷயங்களில் வேறுபட்டிருப்பினும், கண்ணியமாகவே
கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளோம். அதே கண்ணியம் எல்லா நிலைகளிலும்,
எல்லாப் பதிவுகளிலும் இருக்குமாயின் கருத்துப் பரிமாற்றங்கள் மட்டுமே இருக்கும்,
பிரச்சினைகளும் சச்சரவுகளும் அறவே இருக்காது. சமீபத்தில் சாதியின் பெயரை வைத்து,
எப்படியெல்லாம் தமிழ் இணையம் பாடாய்ப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம்.
அந்த ஆதங்கத்தில் விளைந்த மறுமொழி தான் அது. மற்றபடி, பத்மாவின் சேவை மனப்பான்மையையும், அவரின் நல்ல சிந்தனைகளையும் நான் நேரில் சந்தித்த போதே வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறேன்.
reply to this comment
23/07 19:54:15
Thangamani wrote:
நன்றி பத்மா, எழுத்துப்பிழைகளை நான் குறையாகச் சொல்லவில்லை; பிழை என்று குறிப்பிடும் அளவுக்கு அவை மட்டுமே இருப்பதாய்ச் சொல்லவே வந்தேன்.
நன்றி அருண்.
reply to this comment
23/07 20:45:30
ரஜீனிகாந்த் wrote:
ஆரம்பிச்சிட்டாங்கப்பா!!
reply to this comment
23/07 21:04:36
Ramya Nageswaran wrote:
இந்தப் பதிவு சிங்கப்பூர் சூழலுக்கும் மிகவும் தேவையான ஒரு பதிவு. நம்மூரிலாவது அவர்களுக்கு குடும்பம் இருக்கும், சுற்றார், நண்பர்கள் இருப்பார்கள். வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு போகலாம். ஆனால் இங்கே வேலை செய்ய வருபவர்கள் இரண்டு வருடங்கள் நம் குடும்பத்தோடு தங்கி வேலை செய்பவர்கள். தங்கள் நாட்டை, குடும்பத்தை, நண்பர்களை விட்டுவிட்டு நம் குடும்பத்திற்காக உழைக்கும் இவர்களை மனிதாபிமானத்தோடு நடத்துவது எவ்வளவு முக்கியம்? என் வீட்டில் 6 வருடமாக வேலை செய்யும் ரேணுகாவின் (ஸ்ரீலங்காவிலிருந்து வந்தவர்) மேல் எதற்காவது கோபம் வந்தால் நினைத்துக் கொள்வேன் “இவளைப் போல் கணவனை விட்டு பிரிந்து, இரண்டு குழந்தைகளைப் பிரிந்து உன்னால் பத்து நாட்கள் வேறோரு நாட்டில் வேலை செய்ய முடியுமா?’ என்று. கோபம் உடனே ஒரு constructive criticismஆக மாறிவிடும். என் இரண்டு குழந்தைகளுக்கு இரண்டாவது அம்மா அவள்.
reply to this comment
23/07 21:48:42
S. Sankarapandi wrote:
அன்புள்ள பத்மா,
எனக்கும் அருணைப்போலத்தான் தோன்றுகிறது. நீங்கள் உண்மையிலே அப்படி திட்டமிட்டு எழுதவில்லை என்றாலும், நீங்கள் காட்டும் நம் மண் உதாரணங்கள் அருண் சுட்டிக் காட்டியது போல பார்ப்பனர் மட்டுமே இப்படி நடந்து கொள்பவர்கள் என்று புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
மனிதர்களை பிறப்பின் அடிப்படையாலும், கல்வி, தொழில் மற்றும் செல்வம் அடிப்படையாலும் உயர்நிலை, இழிநிலை என நடத்தும் எண்ணம் பெரும்பாலான இந்தியரிடம் புதைந்திருக்கிற குணம். அதன் அடிப்படை பார்ப்பனியம், அந்த பார்ப்பனியத்தை எல்லாச் சாதியினரும், மதத்தினரும் உள்வாங்கிக் கொண்டுள்ளோம். எனவே பிறப்பால் பார்ப்பன சாதியில் தோன்றியவர்களை மட்டும் அவ்வாறு நடந்து கொள்வதாக சித்தரிப்பது மற்ற சாதியினர் தங்களைப் புனிதமானவர்களாகக் காட்டிக் கொள்ள மட்டுமே பயன்படும். இந்த மாதிரி வேலைக்காரி உதாரணங்களை மற்ற சாதியினரிடம் குறிப்பாக வேளாளச் சாதிகளில் இன்னும் கொஞ்சம் கொடுமை அதிகமாகவே கலந்து காண முடியும்.
பார்ப்பனியம் என்ற அதற்குறிய தத்துவப் பெயரை நான் இங்கு பயன்படுத்துவதை வைத்து அருணும், அவரது நண்பர் பி.கே.சிவக்குமாரும் என்னைச் சாதியை வைத்து சர்ச்சை செய்பவர் என்று முத்திரை குத்தி விடுவது எளிது. அவர் என்னைப் பற்றி புரிந்து கொள்ள முடியும் என முன்பு நம்பிக்கையில்லை. ஆனாலும் ஷங்கரின் ‘அன்னியன்’ படத்தில் உணராத சாதியப் பொதுமைப் படுத்தலை (ச்டெரெஒட்ய்பெ) பத்மாவின் பதிவுகளில் அருண் யோசித்துப் பார்த்தது நல்ல முன்னேற்றம்!
நன்றி – சொ. சங்கரபாண்டி
reply to this comment
23/07 22:16:49
S. Sankarapandi wrote:
முந்தையப் பின்னூட்டத்தின் இறுதியில் “பொதுமைப் படுத்தலை (stereotype)” என்று இருந்திருக்க வேண்டும்.
reply to this comment
23/07 22:21:31
arun wrote:
நண்பர் சங்கரபாண்டிக்கு,
நீங்கள் சாதியை வைத்து சர்ச்சை பண்ணுகிறீர்கள் என்று எங்கேயாவது நான் குறிப்பிட்டு,
வாதமோ அல்லது தனிப்பதிவுகளோ இட்டிருக்கிறேனா? சிவக்குமார் எனது இனிய
நண்பர். அவருடன் பல விஷயங்களில் ஒத்துப் போயிருக்கிறேன், மிகச்சில விஷயங்களில்
வேறுபட்டுமிருக்கிறேன். (அவரும் அப்படியே) அவரையும் என்னையும் சேர்த்து, ஊகமாக இப்படி செய்திருப்பார்கள்
என்றெல்லாம் இங்கே நீங்கள் எழுத வேண்டிய அவசியமே இல்லை என்பது தான் எனது கருத்து. என்னைப் புரிந்து கொள்ளமறுப்பவர்களைப் பற்றி, நான் கவலைப்பட்டுக்கொண்டிருக்க முடியாது. எனது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு, நான் எவற்றை எதிர்க்கிறேன் என்பதைப் புரிந்து
கொள்ள முடியும். பார்ப்பனீயம் என்ற வார்த்தைப் பிரயோகத்தைக் குறித்து, நான் தங்கமணியின் பதிவில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அடக்குமுறையின் அடையாளமாக நீங்கள் பார்ப்பனீயம்
என்று குறிப்பிட்டாலும், பார்ப்பனீயமும் ‘எல்லா’ பிராமணர்களும் ஒன்று தான் என்ற புரிதலில்
பலர் இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம். இதைக் குறித்து விரிவாக நிறைய முறை பேசியாகி விட்டது. விடுங்கள்….பேசிப் பிரயோஜனமில்லை!
முன்னேற்றம் என்ற வார்த்தையைப் பார்த்தேன். எனது கருத்துக்கள் அப்படியே
தான் இருக்கிறது. இருப்பினும், அந்த வார்த்தைக்கும் புரிதலுக்கும் நன்றி. But I believe in two things – (1)’Life is a learning process!’
(2) ‘Day by day, in every way, Iam getting better and better’
- அன்புடன், அருண்
reply to this comment
23/07 23:21:41
Dondu wrote:
என்ன அருண் சார் புரியாமல் எழுதுகிறீர்கள். பத்மா அவர்கள் தான் பார்த்ததைப் பற்றி மட்டும்தானே எழுத முடியும்? அவ்ர பார்த்த முதலியார், செட்டியார், நாயுடு, மற்றும் பிற சாதியைச் சேர்ந்த எஜமானிகள் அன்னை தெரஸா போல இருந்திருப்பார்கள் போல.
பத்மா அவர்கள் எழுதிய இன்னொரு பதிவையும் பாருங்கள்.
“கணவனுடன் H4 விசாவில் வந்து வீடில் இருக்க போரடிக்கிறது என்ற மாமிகள் சிலரிடம் மருத்துவமனையில் தன்னார்வ தொண்டு செய்யௌங்களேன் என்று கூறி இருக்கிறேன். ஒரு நாளைக்கு 2 மணி நேரம். காசு தருவாளா என்ற கேள்விக்கு இல்லை என்று சொன்னதும், அட போ வேறா வேலையில்ல எனக்கு, அங்க போய் எறும் வேலை பார்க்க, ஆத்தில் படமாவது பார்க்கலாம் இது ஒருத்டர், எங்க வீட்டுக்காரருக்கு இதெல்லாம் புடிக்காது இது இன்னொருவர். இவர்களுக்கு ஆங்கிலமும் பேச தெரியும். இதே பெண்கள் மணிக்கு 8$க்கு மேசி போன்ற கடைகளில் வேலை பார்ததும், இதில் வர்ற காசில் என வேனா பண்ணுட்டார், நாங்க மூனு பேரும் ஒரே மாதிரி நெக்லஸ் வாங்கிக்க போறோம் என்று சொன்னதையும் பார்த்திருக்கிறேன்.”
மற்ற சாதித் தமிழ்பெண்கள் இவ்வாறு பேசுவார்களா?
தெரியாமல்தான் கேட்கிறேன், அது என்ன உதாரணங்கள் எல்லாம் ஒரு சாதியையே குறி வைத்து வருகின்றன?
இதற்கு பெயர் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல என்று கூறுவார்கள். இது தெரியாமல் நீங்கள் எவ்விதமாக எழுதினாலும் சிலருடைய mindset மாறாது என்றுதான் கூற வேண்டும்.
மன்னிக்கவும் பத்மா அவர்களே, நான் என் சில வெளிப்படையான என்ணங்கள் கூறியதற்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
reply to this comment
24/07 00:27:30
Dondu wrote:
“பார்ப்பனியம் என்ற அதற்குறிய தத்துவப் பெயரை நான் இங்கு பயன்படுத்துவதை வைத்து அருணும், அவரது நண்பர் பி.கே.சிவக்குமாரும் என்னைச் சாதியை வைத்து சர்ச்சை செய்பவர் என்று முத்திரை குத்தி விடுவது எளிது.”
அது என்ன ஐயா பார்ப்பனியம் என்பது தத்துவப்பெயர் என்றெல்லாம் கூறுகிறீர்கள்? யார் வைத்தது அந்தத் தத்துவப்பெயரை? ஏன் உயர் சாதீயம் என்றால் புரியாதா? பார்ப்பனீயம் என்று எழுதிவிடுவது, பிறகு தட்டிக்கேட்டால் தத்துவப் பெயர் என்று சமாளிப்பது, என்ன இதெல்லாம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
reply to this comment
24/07 00:49:04
P money wrote:
we had few domestic helps in my parents house , we always called them akka etc..and they were pretty much treated equal , we never wanted to call them anythingelse , simply with an understanding that everbody is somebody’s servant.
-P money
reply to this comment
24/07 00:57:54
mayavarathaan wrote:
இந்தப் பதிவுக்கு எதிர்வினையாக பல்வேறு உதாரணங்களுடன் பின்னூட்டம் இட முடியும். ஆனால் அது ‘மாயவரத்தான்’ இடும் பின்னூட்டம் என்பதினாலேயே விவாதம் திசை திரும்பும் ஆபத்து இருப்பதால் ‘அப்பீட்’ ஆகிக் கொள்கிறேன். ஆனாலும் அருணின் பின்னூட்டத்தை வேறு கண்ணோட்டத்துடன் பார்க்கும் காமாலை கண்களை என்ன சொல்ல?!
reply to this comment
24/07 01:24:20
mugamoodi wrote:
// நாம் சற்று ஓய்வெடுத்து கொண்டு காபி அருந்த போவதில்லையா, இணையத்தில் உலாவுவது இல்லையா அல்லது நம் உறவினருடன் தொலை பேசுவதில்லையா? // அருமையான கருத்து… எங்கள் வீட்டில் வேலைக்காரி வைத்து கொண்டதில்லை… ஆனால் எங்கள் வீட்டுக்கு மார்கெட்டிங் செய்ய வருபவர்களை மரியாதையுடன் பேசி அனுப்புவேன்… (யுரேகா போர்ப்ஸ் விற்பனையாளருக்கு உபசரிப்பு ஒரு விதம், ஊதுபத்தி சொட்டு நீலம் விற்பவருக்கு இன்னொரு விதம் :: இது பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும்) இன்று வரையிலும் டெலி மார்கெட்டிங் என்று -எல்லை மீறாமல் – தொல்லை தருபவர்களை கூட நான் மனம் புண்படாமல்தான் பேசிக்கொண்டு இருக்கிறேன், காரணம் சக மனிதர்கள் என்பதால்தான்… இது போன்று கார் ஓட்டுனர் என்று எத்தனையோ பேரை சொல்லலாம்.
இப்பதிவில் விவாதிக்கப்படும் மற்றுமொரு கருத்தை பற்றிய என் எண்ணம் :: என் வீட்டுக்கு எதிர் வீடு ஒரு ‘மாமி’ வீடுதான்.. அவர்கள் வேலைக்காரியை (வசந்தா) நடத்திய விதம் எங்களுக்கு ஆச்சரியம் அளித்த ஒன்று… அவர்கள் பெண்ணுக்கு தோசை ஊத்தும்போது செய்வது போலவே நெய் ஊற்றிதான் வசந்தாவுக்கும் தருவார்கள். பூஜை ரூம் தவிர எல்லா ரூமிலும் வசந்தாவிற்கு அனுமதி உண்டு (பூஜை ரூமில் அனுமதி மறுப்பது அவர்களின் உரிமை – அவர்கள் ஏதோ ஒரு விசேஷ விக்கிரகம் வைத்து வழிபடுவர்… யாருக்குமே அனாவசியமாக அனுமதி இல்லை – அதற்கும் ஜாதிக்கும் சம்பந்தம் இருப்பதாக நான் கருதவில்லை. என் வீட்டு படுக்கை அறையில் நான் அன்னியரை அனுமதிப்பதில்லை எனபது போலத்தான்) அவர்கள் வீட்டில் நகை எல்லாம் மேஜை மேல் இறைந்து கிடக்கும், வேலைக்காரியிடம் சாவி கொடுத்துவிட்டு ஊருக்கு செல்வார்கள்…. ஆக மனிதர்கள் எல்லாவிதமாகவும் இருக்கிறார்கள்…
எனவே உங்கள் கருத்தாக்கத்துக்கு தடையாக இல்லாத பட்சத்தில் நீங்கள் //சத்தமாக பேசிய மாமி ஒருவரை // என்பதற்கு பதில் //சத்தமாக பேசிய பெண்மணி ஒருவரை // என்றால் ப்ரச்னையே இல்லையே…
reply to this comment
24/07 02:05:41
NONO wrote:
நல்லபதிவு தொடருங்கள்!!!!
“சமீபத்தில் சாதியின் பெயரை வைத்து,
எப்படியெல்லாம் தமிழ் இணையம் பாடாய்ப்பட்டது”
பயப்பட்டால் எப்பிடி???? பின் விழைவுகளுக்கல்லாம் அஞ்சக்கூடாது!!! மனதுல எது தோன்றுதோ எழுத வேண்டியதுதான்!!!!
reply to this comment
24/07 02:32:41
S. Sankarapandi wrote:
அருண், முன்பு ஒருமுறை சிவக்குமார் என்னைப் பற்றி அவ்வாறாக எழுதியதற்கு பொதுவாக ஆதரித்து நீங்கள் பின்னூட்டமிட்டதை நினைவில் வைத்து அப்படி எழுதினேன். விளக்கத்துக்கு நன்றி.
//அது என்ன ஐயா பார்ப்பனியம் என்பது தத்துவப்பெயர் என்றெல்லாம் கூறுகிறீர்கள்? யார் வைத்தது அந்தத் தத்துவப்பெயரை? ஏன் உயர் சாதீயம் என்றால் புரியாதா? பார்ப்பனீயம் என்று எழுதிவிடுவது, பிறகு தட்டிக்கேட்டால் தத்துவப் பெயர் என்று சமாளிப்பது, என்ன இதெல்லாம்?//
திரு. டோண்டு ஐயா (உண்மையான டோண்டு ஐயா என்று நம்பி எழுதுகிறேன்),
வர்ணாஸ்ரம சாதிய அடுக்குமுறை தத்துவத்தை Brahminism அல்லது தமிழில் பார்ப்பனியம் என்று அழைத்தது வரலாற்று அறிஞர்கள். D D Kosambi, Romila Thapar, Bipan Chandra, R.S.Sharma and Satish Chandra போன்ற அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து எழுதியதே பின்னால் பொது வழக்கிலும் பயன் படுத்தப் பட்டு வருகிறது. பார்ப்பனியத்தையும், பார்ப்பனர் சாதியில் பிறந்தவர்களையும் அடிக்கடி போட்டுக் குழப்பிக் கொள்வது சில நேரங்களில் தவறாகவும், சில நேரங்களில் வேண்டுமென்றேவும் நடக்கின்றது. உங்களைப் போன்றவர்கள் வேண்டுமானால் சாதிய அடுக்குமுறை இந்துமதத்தை
பிராமணியம் என்று அழைக்கக் கூடாது என்று அரசுக்கு விண்ணப்பித்தோ அல்லது வழக்குத் தொடுத்தோ மாற்றலாம். உங்களது ஆதர்ஷ மனிதர் சோ இராமசாமி போன்றவர்கள் இவ்வளவு காலமாக இதைச் செய்யவில்லையே என்று ஆச்சரியமாக இருக்கிறது.
நன்றி – சொ. சங்கரபாண்டி
reply to this comment
24/07 02:38:00
Dondu wrote:
உண்மையான டோண்டுதான் எழுதினேன், அதில் பிரச்சினையல்லை. முடிந்தால் சோ அவர்கள் எழுதிழ வெறுக்கத்தக்கதா பிராம்மணீழம் என்ற புத்தகத்தைப் படியுங்கள்.
மற்றப்படி என்னத்த கேஸு போட்டு, உருப்பட்டால் போலத்தான்.
வழக்கம் போல இந்தப் பின்னூட்டங்கள் எல்லாம் என் தனிப்பட்டப் பதிவிலும் வரும். பார்க்க
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments…
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
reply to this comment
24/07 02:47:24
Mathy Kandasamy wrote:
Thanks Padma.
Arun, as usual your response doest surprise me!
Padma, if anyone tries to talk about caste in a post such as this, we can only think about their humaneness.
-Mathy
reply to this comment
24/07 04:29:56
ராம்கி wrote:
வழக்கம்போல் விவாதம் திசை திரும்புகிறது.
அதுவும் பத்மா பதிவில்..
பதிவு செய்த எல்லொரும் தொடர்ந்து பத்மாவின் பதிவுகளை வாசித்து வருகிறவர்கள் என்பதும் தெரிகிறது.அப்படி இருக்கும் போது ஒரு தனிமனிதரின் அணுகுமுறை என்ற அளவில் மட்டுமே பார்க்கவேண்டிய ஒரு விஷயத்தை சாதி சார்ந்து பார்க்க வேண்டியதில்லை.
பத்மாவின் வேறொரு பதிவில் சிலகருத்துக்களை முன்வைத்திருந்தேன்.
//இந்தியாவில் 85 கோடி மக்களை 15 கோடி மக்கள் கண்டு கொள்வதில்லை என்பதே எனது புரிதல். நீங்கள் 15 கோடியில் இருந்து கொண்டு உண்மையாக 85 கோடிக்குக் கவலைப்படுகிறீர்கள்.// இந்தப் பதினைந்து கோடி என்பது பொதுவாக டோண்டு போன்றவர்கள் தட்டிக் கேட்கும் 2 முதல் 3 சதவீத மக்களை மட்டும் சேர்ந்தவர்கள் இல்லை. பலவிதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் சமூகம் பற்றிய கல்வியில் இந்தியாவில் வருணாசிரமக் கொள்கையை பார்ப்பனீயம் என்றே வழங்கி வருகிறார்கள். இந்தக் கொள்கையை உள்வாங்கி நடைமுறைப் படுத்துபவர்கள் பிறப்பால் பிராமணர்களாக ம்ட்டுமே இருக்க வேண்டியதில்லை. வளர்ந்த சூழலில் சிலருக்கு சில கருத்துக்கள் ஆழமான நம்பிக்கையாக உருவாகி இருக்கலாம். உலகைப் புரிந்து கொண்டு மேலும் வளரும்போது இத்தகைய கருத்துக்களும் நம்பிக்கைகளையும் விட்டொழித்தவர்களையும் நாம் காண முடிகிறது. விடாப்பிடியாக ஒருசில வாத்தைகளைப் பிடித்துக் கொண்டு விவாதத்தை வேறு திசைக்குத் திசைதிருப்புவது அவசியமில்லை என்பது எனது கருத்து.
வேலைக்காரி குறித்த பத்மாவின் நல்ல பதிவுக்கு ஆரோக்கியமான பின்னூட்டங்கள் உதவிகரமாக இருக்கும்.
தமிழ்மொழியே வஞ்சகம் செய்கிறது (புதிய சர்ச்சைக்கு அடித்தளம்?)
Domestic help என்பதற்கான தமிழாக்கமாக வேலைக்காரி இல்லை. வேலைக்காரி வரலையா என்ற கேள்வியிலேயே ஒரு ஆதிக்க உணர்வு தொனிக்கிறது.
தொடரும்
http://stationbench.blogspot.com…
reply to this comment
24/07 04:34:17
ராம்கி wrote:
சமையலறைக்குள் உள்ள “சிங்க்”கில் பாத்திரங்களைக் கழுவுவதற்கு வேலைகளுக்கு உதவுபவரை அனுமதிக்காத எத்தனையோ குடும்பங்களை எனக்குத் தெரியும். அவ்வளவு ஏன், பெற்ற பெண்களையே அந்த 3 நாட்களில் கழிப்பறை பக்கம் அமரச் செய்து உணவு கொடுக்கும் குடும்பங்களையும் எனக்குத் தெரியும்.(மகாஜனங்களே, எனது வார்த்தைகளில் கதாபாத்திரங்களின் சாதி தெரிகிறதா?) நான் பொதுவாக விவாதிக்கிறேன். பத்மா குறிப்பாக அவர் எதிர்கொண்ட சம்பவத்தில் இருந்து எழுதுகிறார். மாயவரத்தான் அனுபவத்தில் வேறு சாதியினர் ஆதிக்க இடத்தில் இருந்திருக்கக் கூடும். எனவே இதில் ஈடுபட்டவர் பிராமணரா, வேளாளரா, முதலியாரா, தேவரா, வன்னியரா, யாதவரா,தலித் பிரிவுகளில் ஒரு உட்பிரிவு இன்னொன்றின் மீதா என்பதல்ல முக்கியம். தனிமனிதர்களின் அணுகுமுறைகளில் மாற்றம் தேவை என்பதே பத்மாவின் பதிவின் நோக்கமாக இருக்க முடியும்.
எங்கோ ஒரு சிலரின் உள்ளங்களில் வலி ஏற்பட்டுவிட்டது என்று எழுதுவதை மாற்றிவிடாதீர்கள் பத்மா. (நிறுத்தி விடாதீர்கள் என்று எழுதக்கூட மனம் வரவில்லை)
http:stationbench.blogspot.com
reply to this comment
24/07 04:35:21
சுந்தரவடிவேல் wrote:
பத்மா, நல்ல பதிவு. ஆனால் உங்களது குறைந்த வலைப்பதிவு வாழ்வில்
நீங்கள் பார்ப்பனர்களின் பேச்சு வழக்கை எவற்றுக்கெல்லாம் பயன்படுத்தலாம் எவற்றுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதை இன்னும் சரியாகக் கற்றுக் கொள்ளவில்லையென்றே நினைக்கிறேன். அதாவது அதை வைத்து திராவிடக் கட்சிக் காராளை, பார்ப்பனீயத்துக்கு எதிராய்ப் பேசி வருவாளை, இன்ன மாதிரி நாலு மத்தவாளைத் தாக்கியிருந்தாலோ அல்லது அதை வைத்து நாலு சினிமா போண்டா, கிரிக்கெட் வடை இந்த மாதிரி உருட்டியிருந்தாலோ உங்களுக்கு குடோஸ் கிடைத்திருக்கும். நீங்களோ இதை ஒரு வீட்டில் நடக்கும் கேட்டினைச் சுட்டிக்காட்டக் கைக் கொண்டு விட்டீர்கள். இதைப் போல் யாரும் இதற்கு முன் செய்ததில்லை. அதுதான் நீங்கள் இழைத்திருக்கும் பெருந்தவறு. இதற்காக உங்களுக்கு முதலாம் எச்சரிக்கையை அன்பாக விடுத்திருக்கிறார் அருண். துடைத்தெறிந்துவிட்டு உண்மைகளைத் தொடர்ந்து சொல்லுங்கள் பத்மா. நன்றி.
reply to this comment
24/07 06:24:52
anil wrote:
//வர்ணாஸ்ரம சாதிய அடுக்குமுறை தத்துவத்தை Brahminism அல்லது தமிழில் பார்ப்பனியம் என்று அழைத்தது வரலாற்று அறிஞர்கள். D D Kosambi, Romila Thapar, Bipan Chandra, R.S.Sharma and Satish Chandra போன்ற அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து எழுதியதே பின்னால் பொது வழக்கிலும் பயன் படுத்தப் பட்டு வருகிறது. பார்ப்பனியத்தையும், பார்ப்பனர் சாதியில் பிறந்தவர்களையும் அடிக்கடி போட்டுக் குழப்பிக் கொள்வது சில நேரங்களில் தவறாகவும், சில நேரங்களில் வேண்டுமென்றேவும் நடக்கின்றது. //
Dear S. Sankarapandi,
By the same logic, would you accept the use of the English word “pariah” (which incidentally was first recorded in the year 1613 and has been used widely by an equally impressive list of scholars)to denote anyone who is a social outcast and not a person belongging to specific caste?
reply to this comment
24/07 07:22:36
Arun wrote:
மதி…
Ausualllllllll,Your comment also doesn’t surprise me at all!
Iam very happy that your twisting didn’t work here well.
Keep up your work!
சுந்தரவடிவேல்,
அடேங்கப்பா…ஏதோ எங்களுக்குத் தெரிஞ்ச பொதுநடப்பு, வடை,பஜ்ஜி,கிரிக்கெட்,சினிமான்னு
நாலு விஷயம் எழுதிண்டு வர்றோம். அவாளுக்குத் தெரிஞ்சுது அவ்வளவு தான்..ஏதோ குடோஸ் வாங்கிட்டுப் போறான்னு விட்டுடுங்கோ! சமத்துவம், நீதி, நேர்மையெல்லாம் வளக்கறதுக்குத் தான் நீங்க இருக்கேளே…! முடிவா,நான் இதுவரைக்கும் எச்சரிக்கையெல்லாம் எங்கேயுமே விட்டது இல்லைங்காணும்….தோழி பத்மா கிட்டே எதுக்கு எச்சரிக்கையெல்லம் விடணும்?!
சுந்தரபாண்டி,
எந்தக் கட்டுரை என்று நினைவில்லை. அந்தக் கட்டுரை பொதுவாக எழுதப்பட்டது போல் ஒரு ஞாபகம். இது குறித்து, நாம் கடிதங்கள் பரிமாறிக்கொண்டதாய் கூட ஞாபகம்.
- அருண் வைத்யநாதன்
reply to this comment
24/07 07:35:17
Padma Arvind wrote:
நண்பர்களே: பின்னூட்டங்களுக்கு நன்றிகள். ராம்கி: மிக தெளிவாக எழுதுகிறீர்கள். நான் பார்த்த கேட்ட சம்பவங்களையும், அனுபவித்த சில விஷயங்களையும் எழுதினேன். எடிசனில் 9 கெஜம் கட்டி போகிற சிலர் என்ன இனம் என்பது அவர்களே குறிப்பால் உணர்த்துகிறார்கள். மற்றவர்கள் என்ன உட்பிரிவு, என்ன சாதி என்று எனக்கு தெரியது. இத்தனை உட்பிரிவுகள் இருந்ததும் இருப்பதும் கூட எனக்கு தெரியது என்பது உண்மை. இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன். இன்னும் சொல்ல போனால் தமிழர்கள் பலருக்கும் அறிமுகமான ஒருவரின் மனைவி தானும் குழுவினரால் ஏற்று கொள்ள படவேண்டும் என்று அவர்களின் பழக்க வழக்கங்களை செய்ததோடு மடிசார் வரை கட்டி கொண்டதும் செய்வதும் எனக்கு தெரியும்.
டோண்டு அவர்களே: முகமூடியும் P என்பவரும் தங்களுக்கு தெரிந்ததை எழுதி இருக்கிறார்கள். அவர்களின் அனுபவம் நன்றாக இருக்கிறது. நீங்களும் அப்படி எழுதி இருக்கலாம். தெரிந்துகொள்கிறேன்.
நான் ஒரு வேலைக்காரியாக இருந்த போது பட்ட சில அனுபவங்கள் இதில் உண்டு. இங்கே பின்னூட்டமிட்ட எவருக்கும் அந்த அனுபவம் இல்லல என்று நினைக்கிறேன்.
reply to this comment
24/07 07:36:44
Padma Arvind wrote:
முகமூடி, ரம்யா, P, மற்றும் நோநோ ஆகியோருக்கு நன்றீகள். முகமூடி: நீங்கள் சொன்னதுபோல பெண்மணி என்றால் பிரச்சினை இல்லை. நான் கேட்டதை அப்படியேதான் எழுதினேன். என் விடுமுறை 10 நாட்கள் பெங்களூரிலும் 4 நாட்கள் திருவரங்கத்திலும் கழியும். பெங்களூரில் உள்ள நாட்கள் IISc, Medical Institue என்று விரைவாக போய்விடும். திருவரங்கத்தில் நான் பார்ப்பதும் கேட்பதும் இது மட்டுமே.
மாயவரத்தான்: முதன்முறையாக எனது பதிவுக்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.
சுந்தரவடிவேல்: தெரிந்து கொள்ள வேண்டியது எனக்கு நிறைய. அதுவும் எழுதும் முன்னால் இது சர்ச்சைக்கு உரியது, இந்த வார்த்தைகள் இன்னாரை குறிப்பிடும் என்று யோசித்து எழுத வேண்டி கற்று கொள்வது நிறைய.
reply to this comment
24/07 07:38:21
Padma Arvind wrote:
ஸ்டேஷன் பென்ச் ராம்கி: அவ்வளவு ஏன், பெற்ற பெண்களையே அந்த 3 நாட்களில் கழிப்பறை பக்கம் அமரச் செய்து உணவு கொடுக்கும் குடும்பங்களையும் எனக்குத் தெரியும் உண்மைதான். இதை செய்யாததால் நாங்கள் வீட்டில் தீட்டு கலந்து தெய்வ குற்றம் சுமத்துகிறோம் என்று வீட்டை விட்டு வெளியேற்றபட்டதும் இன்னமும் பல வாழ்நாள் அனுபவங்கள் வந்து போகின்றன.
நண்பர்களே: வீட்டில் வேலை செய்பவர்களுக்கும் தன்மானம் உண்டு என்று சொல்வதே இதன் நோக்கம். மேலும் வன்புணரப்பட்ட பெண் ஹிந்தி பேசுவதால் வட இந்தியர்மட்டும் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று சொல்லாதீர்கள். உங்களின் எழுத்துக்கள் எனக்கு பிடித்திருக்கிறது.
reply to this comment
24/07 07:38:57
Padma Arvind wrote:
தனிப்பட்ட எந்த ஒரு இனத்தையும் நான் குறிக்கவில்லை.
அதேபோல டோண்டு: என் முந்தைய பதிவில் இருந்து நீங்கள் உங்களுக்கு தோதுவான ஒன்றை மேற்கோளிட்டீர்கள் என்று நினைக்கிறேன். அதில் ” என் வீட்டுக்காரருக்கு இதெல்லாம் பிடிக்காது என்று சொன்ன பெண்களையும் எழுதி இருந்தேன். அதேபோல பொதுவாக தென்னிந்தியர்களையும் குறித்திருந்தேன்.
reply to this comment
24/07 07:43:21
சுந்தரவடிவேல் wrote:
அருண்,
உங்களுக்குத் தெரிஞ்சத பேஷா எழுதுங்கோ, ஆனா அடுத்தவா எதை, எப்படி எழுதணும் எழுதப்படாதுங்கறதத் தீர்மானிச்சு அதை ‘அன்பா’ச் சொல்றேள் பாருங்கோ அங்கதான் நிக்கறேள்! உம்மை ரொம்ப காலமாத் தெரியுங்காணும்
reply to this comment
24/07 08:24:33
arun wrote:
சுந்தரவடிவேல்,
நான் யார் எப்படி எழுதணும்னு தீர்மானிக்கலை ஓய்…நல்லபடியா எழுதறதைக் கூட திரிக்கறதுக்கும்,
உரிக்கறதுக்கும் நெறைய பேரு இருக்கான்னு என்னோட ஆதங்கத்தை சொன்னேன். அதுவும் எல்லார் கிட்டேயும்
போய் சொல்லிண்டு இருக்கலை..நல்லா தெரிஞ்சவாக்கிட்டே, நல்ல விதமா எனக்குத் தெரிஞ்சதை சொன்னேன்.
உம்மையும் எமக்கு ரொம்ப காஆஆஆஆஆலமாவே பேஷா தெரியுங்காணும்!
முடிவாக, நான் சொல்ல வேண்டியதை சொல்லியாகி விட்டது. பத்மாவும், நல்ல நண்பராகத் தான் அருண்
சொல்லியிருக்கிறார் என்று அதை எடுத்துக் கொண்டாகி விட்டது. இனிமேலும் இந்த விவாதத்தை நீட்டிப்பதில்
அர்த்தமில்லை. (No more comments from my side – I have made my views very clear. Thank you padma for everything,All the best!)
reply to this comment
24/07 08:56:21
mayavarathaan wrote:
விவாதம் எப்படி வேண்டுமானாலும் செல்லட்டும். ஆனால் சுந்தரவடிவேல் கிண்டலடிக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் ‘ஒரு குறிப்பிட்ட பிரிவினரை கிண்டலடிக்கும்’ தொனியில் வார்த்தைகளை அள்ளி வீசுவது நியாயமா?இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
reply to this comment
24/07 09:47:17
சுந்தரவடிவேல் wrote:
அருண்,
//கொஞ்சம் முத்திரை குத்தும் விதமாகவும், ஸ்டீரியோ டைப்பாக எழுதப்படும் பதிவுகளையும் தவிர்த்தால் நன்றாயிருக்குமென்று நினைக்கிறேன்.//
இந்தச் சட்டாம்பிள்ளை வேலையை “நல்ல விதமாக, நன்றாய்த் தெரிந்தவர்களிடம்”தான் செய்கிறீர்களக்கும்? போம் ஓய்! பஞ்சாயத்துப் பஞ்சவர்ணத்தைப் பற்றி எழுதப் போகும் முன்னரே சதையாடி வந்து “நல்ல விதமாக”ச் சொல்லிச் சென்ற அன்பாளராயிற்றே நீர்! இப்போது ஒரு பார்ப்பனரே கோடாரிக் காம்பாகப் போகிறாரோ என்ற நடுக்கமே உம்மை இப்படி எழுத வைக்கிறது ஓய்!
என் அனுபவத்தில் உம்மோடு பேசுவதில் அர்த்தமில்லையென்று தெரியும், நிறுத்திக் கொள்கிறேன்.
//(1)’Life is a learning process!’
(2) ‘Day by day, in every way, Iam getting better and better’//
)
reply to this comment
24/07 09:47:24
Arun wrote:
என் அனுபவத்தில் உம்மோடு பேசுவதில் அர்த்தமில்லையென்று தெரியும், நிறுத்திக் கொள்கிறேன்.
Same here!
reply to this comment
24/07 15:01:18
S. Sankarapandi wrote:
//Arun asks -
Dear S. Sankarapandi,
By the same logic, would you accept the use of the English word “pariah” (which incidentally was first recorded in the year 1613 and has been used widely by an equally impressive list of scholars)to denote anyone who is a social outcast and not a person belongging to specific caste?
//
I am surprised whenever people like you think that they can compare the denigration of a Dalit to the criticism or hostility towards a Brahmin. The dictionary use of the word ‘pariah’ is derogatory to the Dalits. You are complaining as if the word ‘Brahmin’ is used akin to a criminal. Belittling the Pariah (Dalit) community by calling an anti-social with the name ‘pariah’ cannot in any way be compared to the embarrassment of the Brahmins by calling the divisive philosophy as Brahminism. By doing so, we further suppress the torment felt by a Dalit.
Since I disallow such a comparison, it is unnecessary to cite the appeal from the Pariah Mahajan Sabha after Independence to desist from using the word ‘pariah’ and how Indian government responded favorably. I do not recollect the specifics but I remember it in the context of when Ms. Jayalalitha (in her previous regime) filed a case against Dr. Subramaniam Swami based on the inappropriate use of the word ‘pariah’.
reply to this comment
24/07 15:19:52
ravi srinivas wrote:
சு.சுவாமி அந்த வார்த்தையினை உபயோகப்படுத்தியது புலிகள் இயக்கம் சர்வதேச அளவில் தீண்டத்தாகதாக இருக்கிறது என்ற பொருளில். ஆனால் இது தலித்களைக் கேவலப்படுத்துவதாக உள்ளது ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது தலித்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் வாதாடிக் கொண்டிருந்த சு.சுவாமி இதைக் குறிப்பிட்டு தன்னை கைது செய்வதற்கு தடை உத்தரவு பெற்றார். பின்னர் உச்ச நீதி மன்றத்தில் அவ்வழக்கிற்கு தடை பெற்றார். பின்னர் அரசே அவ்வழக்கினை வாபஸ் பெற்றுவிட்டது. இதை என் நினைவிலிருந்து எழுதுகிறேன். இப்போதும் ஒருவர் என்னை அந்த வார்த்தையினைப் பயன்படுத்தி திட்டினார் அல்லது ஜாதி பெயரைக் குறிப்பிட்டு கிண்டல் செய்தார் என்று புகார் செய்தால் அச்சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
அந்த வார்த்தை ஆங்கில அகராதியில் இருக்கிறது, தீண்டத்தகாத, விலக்கி வைக்கப்பட்ட என்ற பொருளில் அதை பயன்படுத்தலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்தப் பெயரில் ஒரு கணினி விளையாட்டும் இருக்கிறது. ஆகவே இப்போது அது எதைக் குறிக்க எங்கு என்ன பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பதை கவனிக்காமல் ஒரே அர்த்தம்தான் இருக்கிறது என்று நினைத்துவிட முடியாது.
reply to this comment
24/07 18:02:34
ravi srinivas wrote:
wikipedia says
Pariah, originally the name of the Pariah (people) in India, has gained widespread use as an analogy, especially in the phrase “social pariah”, as a term for anyone excluded from society, such as the homeless, or a social group. This use is sometimes considered to be offensive. It has also been adopted as:
Pariah dog
Pariah comic book
Pariah computer game
Pariah band
reply to this comment
24/07 18:04:35
ravi srinivas wrote:
ஆனால் இது தலித்களைக் கேவலப்படுத்துவதாக உள்ளது ஒருவர் கொடுத்த புகாரின் பேரில்
it should be
ஆனால் இது தலித்களைக் கேவலப்படுத்துவதாக உள்ளது என்று ஒருவர் கொடுத்த புகாரின் பேரில்
reply to this comment
24/07 18:10:57
sarah wrote:
//பத்மா, உங்களிடம் ஒரு கேள்வி. நீங்க தமிழ் நாட்டில் இருக்கும்போது உங்க வீட்டில் வேலையாட்கள் இருந்திருக்கிறார்களா? அவர்களை என்றாவது நீங்கள் டைனிங் டேபிளில் உட்கார வைத்து சப்பாடு போட்டிருக்கிறீர்களா? //
நான் எனது வீட்டில் எனது வேலைக்காரம்மாவை , அம்மா என்று தான் கூப்பிடும் பழக்கம் (இந்தியாவில் இருந்தபொழுது), அவங்க தாழ்ந்த ஜாதிதான். நாங்கள் சாப்பிட்டு முடித்தபின் , எனக்கு நேரம் இருக்கும் பொழுதெல்லாம், அந்தம்மாவை டைனிங் டேபிலிள் உட்கார வைட்துப் பரிமாறி இருக்கிறேன். இதையெல்லாம் பார்திருந்தாலும், இன்றும் கூட எனது அம்மா (உயர் ஜாதி (பிராமணர் அல்ல) ) தன்னால் முடியாவிட்டாலும், தாழ்ந்த ஜாதிப் பெண்களே வேலைக்குக் கிடைப்பதால், ஓட்டலில் வாங்கிச் சாப்பிடுவதே பெருமை!!! ( கான்சர் வயப் பட்டவர்) என்று நினைக்கிறார். ஆசிரியராய் இருந்தவர், (ஜாதி இரண்டொழிய வேறில்லைனு சொல்லி மாணவனுக்குச் சொல்வீர்கலே , இப்படி நீங்களே செய்யலாமா எனக் கேட்டால் (போன மாதம் ) அவர்கள் பதில் — புத்தகத்தில் இருப்பது வாழ்க்கைக்கு உதவாது– என்ன செய்ய?. இவர்களிடம், பேசவே முடியாது பத்மா, பெற்ற அம்மாவிடமே சொல்லிப் புரியவைக்கமுடியாத பொழுது பேசமுடியாத பொழுது மற்றவர்களிடம் என்ன சொல்ல என்ற சளிப்பு பல தறுணங்களில் எனக்கு வந்தாலும், எனக்கு இது போன்ற எண்ணத்தை என்னுள் விதைத்த மிகப் பெரிய மனிதர்களுக்கு நான் திறும்பிச் செலுத்தும் நன்றியாகவே இதைப் பார்க்கிறேன். இன்றும் எனது ஊரில், பிராமணருக்கும், வன்னாருக்கும், நாசுவனுக்கும் ஒரே இடம் தான் ( அதாவது அவர்கள் முற்றம் வரைதான் வந்து போகலாம்), சக்கிலியர், பறையரொ அவர்கள் கல்வி கற்பிக்கும் ஆசிரியராய் இருந்தாலும் நிலைப்படியைக் கடந்து உள்ளே வர முடியாது.
பிராமணர் , தனது வகுப்பினரைத் தவிர அனைவரையும் கீழ் என்பதுபோல, பல மேட்டுக்குடி பண்ணையார்களும் தமது இனமே உயர்ந்தது, ஆனால் சக்கிலியர் , பறையர் இனம் தாழ்ந்தது என்று நினைக்கின்றனர்.
இதெல்லாம் இங்கு எழுதுகிற அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், எதைக் காக்கும் பொருட்டு இவ்வாறு சண்டை போடுகிறார்கள் என்பது எழுதுபவர்க்கும் தெரியும், அதை வாசித்து மறுபடி பதிலனுப்புவர்களுக்கும் தெரியும்.
(தொடரும்..)
reply to this comment
24/07 18:48:48
sarah wrote:
ஆனால், பத்மா கூற வந்த பிரச்சினை அதுவல்லவென்றே நான் நினைக்கிறேன்.
ஏனெனில் சோ காட்டாத பிராமணீயமா, பாரதி காட்டாத பிராமணக் குதர்க்கங்களா பத்மா இன்று அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு விளக்குகிறார்?. எனக்குத் தெறிந்த வகையில், நான் படித்த வரையில் அவர் வாழ்க்கையை எவ்வாறு பார்க்கிறார், எங்கெங்கு பாதிக்கப் படுகிறார், எங்கெங்கு உதவி செய்கிறார் போன்ற அனுபவங்களை எழுதுகிறார் என்றே எனக்குப் புலப்படுகிறது.
“தம்மினும் மெலியாரை நோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென்று அகமகிழ்க
தம்மினும் கற்றாரை நோக்கிக் கருத்தழிக எற்றே இவர்க்கு நாமென்று”
கற்றல், படிப்பு மட்டுமல்ல
வாழ்கையையும் அதனைச் சார்ந்த அனுபவங்களையும்.
இவ்வளவு விரிவாகச் சண்டை போடுகிறவர்கள், ஏன் இந்தப் பிறழ்வைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்?, நானும் , எனது ஜாதியைக் குறிப்பிட்டு யாராவது ஓ, நீங்களா, இந்த …. ஆரம்பிசாங்கனா, விடு ஜுட். ஆனால், தன்னை இந்த ஜாதி என்னும் ஒரு வெற்றுச் சொல்லில் (ஒரு கறுத்தாக்கம் மட்டுமே என்பதனை உணராமல்) பிணைத்து , அதற்கெல்லாம் எந்த விதத்திலும் சமனே இல்லாத உயிருள்ள மனிதர்களுடன் ஏற்றத்தாழ்வையோ , சண்டையயோ ஏன் போட்டுக் கொல்(ள்)கிறொம் என்பது எனக்கு விளங்காமலில்லை. உங்களுக்கு?
பத்மா விளக்க வந்தது மனிதர்கள், சக மனிதர்களை நடத்தும் விதத்தை என்றே நான் புரிந்துகொள்கிறேன்.
(தொடரும்..)
reply to this comment
24/07 18:49:59
sarah wrote:
//நீங்கள் இது போலெல்லாம் எழுதுவதால், இருபது பேர் வந்து ‘நல்ல பதிவுகள், நன்றி பத்மா’ என்று எழுதிவிட்டு செல்வார்கள். ஆனால், இருபதில் மூன்று பேராவது…இதை அவர்கள் வசதிக்கேற்றவாறு திரித்தும், உரித்தும் எழுதி விடுவார்கள்.//
எல்லோரும், அவரவர் வசதிக்கேற்றவாறுதான் வாழ்கிறார்கள். வாழ்க்கையைப்புரிந்துகொள்கிறார்கள். அன்று அந்தத் தச்சனைக் கொன்ற அந்த சமுகமேதான் இன்று அவன் பெயரில் காசு பார்க்கிறது, பிறனை அடக்குகிறது. அன்று பாரதியைத்தனது தெருவில் வைதிருந்தாலே அசிங்கம் என்று நினைத்த ஜாதி, இன்று அவன் பாடல்களைத் தமது பிள்ளைகளை அவன் பாடலுக்கு பாட்டுப் பாட, டான்ஸ் ஆட வைக்கிறதில் பெருமை அடைகிறது.
இதனையெல்லாம், படிக்காமல், அதைத் தன்னளவில் புரிந்து கொள்ளாமல் விட்டால் அதற்கு அந்தத் தச்சன், பாரதி எப்படிப் பொறுப்பேற்க முடியும்?. அல்லது நாம் எப்படி வாழ்கையைப் புரிந்து கொள்வது?. அடக்கப்படுபவன் தான் அடக்கப் படுகிறோம் என்பதனை உணராதவரை அடக்குபவர் ஆளுமை செய்துகொண்டேதான் இருப்பர்.
இந்தியாவில் வாழும் மிகப் பெரிய மக்கள் தொகைக்கு ராமன் ஒரு கடவுள், என்னைப் பொறுத்தவரை அவன் ஒரு அயோக்கியன், தன்னையே நம்பி வந்த தனது மனைவியைக் கூட பிறர் சொல்லுக்காகப் பலி கொடுத்தவன்.
இதையெல்லாம், யாரோ ஒருவர் எழுதுவதினாலேயே படிக்கமுடிந்தது, கம்பரை மட்டும் படித்திருந்தால் வேறு பார்வையில் மட்டுமே பார்த்திருப்பேன். ஆனால், இதைப் பற்றிய மீள் பார்வையை நிரையப் பேர் எழுதியதால் படிக்கமுடிந்தது. பின்னர் என்னால் ராமனைப் பற்றிய பார்வையை மாற்றி அமைக்க முடிந்தது. ( இதிலும் ராமன் ஒரு பிராமணக் கடவுள் என்று எழுதி என்னை வம்புக்கிழுக்க என்னால் அனுமதிக்கமுடியாது, ஏனெனில் கடவுளைப் பற்றிய எனது பார்வை இந்தத்தளத்தில் வாராதது).
ஆதலால், எழுதுபவரை எழுதாதே என்று சொல்வது என்னைப் பொறுத்தவரை ஒரு ஆக்கிரமிப்புச் செயலாகவே பார்க்கப் படுகிறது. அதுவும் எழுதுபவரே இதில் உள் நோக்கம் ஒன்றும் இல்லை என எழுதிய பின்னும் விவாதிப்பது ஒரு நல்ல விவாதமாகவே எனக்குப் படவில்லை.
(தொடரும்..)
reply to this comment
24/07 18:52:58
sarah wrote:
நமக்குத் தெறிந்து நிறையப் புத்தகங்களை நாம் படிப்பதில்லை. அதுபோல, பிடிக்கவில்லயெனில் படிக்காமல் இருக்கலாம், அல்லது ஒரு நல்ல தர்க்கரீதியான காரணங்கள் காட்டி ஏன் இப்படி என்று கேட்கலாம், அதை விடுத்து எழுதியவர் நான் அப்படி எழுதவில்லை என்ரு சொன்ன பின்னும் பின்னூட்டமிட்டுப் படுத்துவது , அல்லது தான் எழுதுவதே தவரோ என்ற பார்வைக்கு அவரைத் தள்ளுவது என்பது ஒரு நாகரீகமற்ற செயலாகவே எனக்குப் படுகிறது.
என்ன இதற்கு மேல் எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை பத்மா.
நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள். இப்படிப் பட்ட சர்ச்சைகளால் மனம் புண் படாதீர்கள். எழுதுங்கள். அது நிறைய பேருக்கு வாழ்க்கையை தட்டையாகப் (ஒரு பரிமாணம்)பார்க்காமல், முழுதுமாகப் (முப்பரிமாணம்) பார்க்கிற வாய்ப்பினைத் தரும்.
சாரா
reply to this comment
24/07 18:53:44
senthil wrote:
Hats off Sarah.
Ennal Tamilil ezutha mudiyathu. But,
Naan ninachathai appadiye eluthi irukireergal.
Padma, Dont get discouragred by these type of chain comments. These people are all doing this kind of conversations, because they cant think “Out of the box”.
I didnot find any kind of stereotypeness in your blog.For eg, within one week, you wrote about Shivaji Ganeshan and Kannadasan.Also, these kind of experience sharing(like the one above) is giving more clarity in my thinking.
Personally I feel Arun should given his comments in mail. But later on he explained which is OK.After than also argument cotinues means people are trying to satisfy their ego.
Also I feel very bad about the incident happened to that 12 year girl.Did police had taken any action over the concerned??
reply to this comment
24/07 19:33:35
senthil wrote:
Read the third para like this
Personally I feel Arun should given his comments in mail. But later on he explained the reason why he mentioned here, which is OK. After than also argument cotinues means people are trying to satisfy their ego.Also nobody even concerned why,what happened to that girl
reply to this comment
24/07 19:35:44
Padma Arvind wrote:
நன்றி சாரா. விரிவாக எழுதுகிறேன். என் சிந்தனைகளை புரிந்து கொண்டமைக்கும் உண்மையாக எழுதியமைக்கும் என் நன்றிகள்.
செந்தில்: 12 வயது பெண் பற்றிய கவலையைவிட இன்னொருகுலத்தை எடுத்துக்காட்டாக சொல்லாததுதான் முக்கிய தவறு!
சிறீய பெண் மீது வன்புணர்ச்சி இருந்தது, குழந்தைகளை சட்டத்திற்கு புறம்பாக வேலைக்கு வைத்து கொண்டது என்ற வழக்குகள் பதிவாகி இருக்கிறது. பெண்ணின் பெற்றோர்மீதும் குழந்தையை சரியாக கவனிக்காத வழக்கு பதிவாகி இருக்கிறது. நாளை தான் தெரியும் ஜாமீன் உண்டா இல்லையா என்று. நன்றிகள் பல
reply to this comment
24/07 20:56:30
mayavarathaan wrote:
//நான் எனது வீட்டில் எனது வேலைக்காரம்மாவ, அவங்க தாழ்ந்த ஜாதிதான். நாங்கள் சாப்பிட்டு முடித்தபின் , எனக்கு நேரம் இருக்கும் பொழுதெல்லாம், அந்தம்மாவை டைனிங் டேபிலிள் உட்கார வைட்துப் பரிமாறி இருக்கிறேன். //
ஹும்.. இதிலே என்ன பெருமையைக் கண்டீர்கள் சாரா? எழுதியது தான் எழுதுகிறீர்கள்…நீங்கள் சாப்பிடும் போதே கூட உட்கார வைத்து சாப்பிடச் சொல்லுவேன் என்று எழுதினாலாவது உங்கள் மேல் ஒரு தனி இமேஜை இங்கே வளர்த்துக் கொண்டிருக்கலாம்.
reply to this comment
24/07 21:05:58
arun wrote:
அன்புள்ள சங்கரபாண்டி,
அனில் என்று கூறியவர் கருத்தை நான் கூறியதாக நினைத்து, பதில் சொல்லியிருக்கிறீர்கள்.
கொஞ்சம் கண்ணைத் திறந்து வைத்து, முடிந்தால் மனதையும் திறந்து வைத்து…இது போன்று
எனது பெயரை இழுப்பதற்கு முன்னால் யோசித்தால், புண்ணியமாய்ப் போகும்.
- அருண் வைத்யநாதன்
reply to this comment
24/07 22:13:28
anil wrote:
Dear S. Sankarapandi,
I agree equating an outcast (btw, the dictionary usage of the word, as Ravi Srinivas points out, is to refer to anyone who is excluded from society, such as the homeless, or a social group, and NOT someone who is anti-social as you incorrectly indicate) to the dalits is offensive to the community. Thus when Subramanya Swamy called the Tamil Tigers as international pariahs, meaning they are being shunned world over, people here for whom the word carries centuries of hurt, got rightfully outraged. My suspicion is that, Swamy was not well informed about the word usage and the present sentiments surrounding it, beyond its literal meaning. And that is to be expected, as he is product of western education and far removed from ground realities – perhaps not unlike some of the history experts that you quote in your earlier reply.
You say the word ‘pariah’ has a negative connotation and therefore is derogatory to the dalit community, but the word ‘brahmin’ (or brahminism’), which is increasingly used to denote oppressive, divisive, devious, wily, or manipulative group of individuals, is not. I am just wondering how this is not negative connotation and how it manages to be not derogatory to the brahmin community?
Perhaps the answer to that question lies in how you use the word ‘degenerating’, ‘belittling’ and ‘tormenting’ when referring to the plight of dalits, while using the words ‘criticism’, ‘hostility’ and ‘embarrassment’ while referring to the plight(!) of brahmins. Obviously you think the latter is insignificant or at least not as serious as the former.
My view is that the two are not very different and that history may well be on its way to repeating itself. Brahmins are fast becoming the new pariahs.
reply to this comment
24/07 23:39:53
S. Sankarapandi wrote:
அன்புள்ள அருண்,
நாம் இருவரும் விவாதித்துக் கொண்டிருந்ததால், இடையில் வந்த அனிலை அருண் என்று தவறாக வாசித்து எழுதி விட்டேன். மன்னித்து விடுங்கள்.
நான் எழுதிய முந்தைய பின்னூட்டத்தில், அருண் என்பதை அனில் என்று மாற்றி வாசித்துக் கொள்ளுங்கள் என்று வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி – சொ. சங்கரபாண்டி
reply to this comment
24/07 23:47:43
S. Sankarapandi wrote:
Dear Anil,
//My view is that the two are not very different and that history may well be on its way to repeating itself. Brahmins are fast becoming the new pariahs.//
If this is what you think, I have no answer; I will let others judge the veracity of your claim.
reply to this comment
24/07 23:52:53
kk wrote:
Padma,
You mentioned about the girl who was molested only while replying to arun’s comments. Had you mentioned this in your post first and then written the rest of the matter, you would have made your point very clear.
I have read each one of your posts and can recollect everything you have written even when I am not before the PC. I have read them repeatedly. Your article “manadhil urudhi vendum” was lingering in my mind for days. But of late the impact your posts make is
somewhat diminished.
Since you deal with the suffereing /affected people on a daily basis your writings carry your true feelings/pain. You remind me of some characters in Ayn Rand’s novels. You are idealistic. But not everyone can be like that.
But in real life we cannot classify people as fully good or fully bad. They are a combination of many factors.I have seen dozens of families who treat their domestic helps decently. I have seen some who treat them very badly.
(continued)
reply to this comment
25/07 00:29:11
Dondu wrote:
“தனிப்பட்ட எந்த ஒரு இனத்தையும் நான் குறிக்கவில்லை.
அதேபோல டோண்டு: என் முந்தைய பதிவில் இருந்து நீங்கள் உங்களுக்கு தோதுவான ஒன்றை மேற்கோளிட்டீர்கள் என்று நினைக்கிறேன். அதில் ” என் வீட்டுக்காரருக்கு இதெல்லாம் பிடிக்காது என்று சொன்ன பெண்களையும் எழுதி இருந்தேன். அதேபோல பொதுவாக தென்னிந்தியர்களையும் குறித்திருந்தேன்.”
நான் என் கட்சியை நிலைநிறுத்த எழுதும்போது எனக்கு சாதகமானதைத்தான் மேற்கோள் காட்ட முடியும்? இதில் என்ன தவறு? அதைத்தானே எல்லோரும் செய்கிறார்கள். வாதம் புரிபவர் தன் கட்சிக்கு சாதகமானதைத்தான் பட்டியலிடுவார்.
உங்கள் அடுத்த பாயிண்டுக்கு வருவோம். நீங்கள் கூறுகிறீர்கள் பார்ப்பனப் பெண்மணிகளைப் பற்றிக் கூறிய அதே பதிவில் பொதுப்படையாகவும் அதாவது பார்ப்பனரல்லாதவரைப் பற்றியும் எழுதினீர்கள் என்று.
பார்ப்பனரல்லாதவர்கள் என்று ஒரு ஜாதி கிடையாது. பார்ப்பனரைப் பற்றி எழுதிய பதிவில் முதலியார், செட்டியார் என்றெல்லாம் பிரிக்காமல் தென்னிந்தியர்கள் என்று குறிப்பிட்டேன் என்கிறீர்கள். அதற்கு பேசாமல் ஒரு சாதியையும் குறிப்பிடாமல் இருப்பதுதானே. இப்போது நீங்கள் கூறுவது சப்பைகட்டாகவே தோன்றுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
reply to this comment
25/07 00:30:13
kk wrote:
If you can see god in your hearts, then no need to go look for him in temples. But how many of us have such a maturity and self realization? Temples and rituals are only stepping stones in realizing oneself. People are in different levels of maturity and if going to temple soothes and comforts one then why not?
The instances you have quoted in your posts, I have similar experiences with a majority north indian community (in US). Only thing I realise is WE are becoming more materialistic nowadays(irrespective of cate and community).
When a person of any other community is not referrred to by his caste/community, why only brahmins?
As a social worker, you must be interacting with all kinds of people. When you refer to a north indian (in your previous posts) you only mention if he/she is a gujarati, bihari etc. When it is tamilians, why mention the caste ( if is is a community specific issue such as UPANAYANAM it is fine).
reply to this comment
25/07 01:35:54
raj wrote:
Dear Padma,
very thoughtful post. Few years back, a movie called “KUTTY” was screened in the theaters. Of course like any other good movie it was a failure by movie standards. The movie is all about poor girls who take up housemaid jobs due to poverty. The girl who acted in the movie had done a commendable job. She works as a helper in a family where both the husband and wife are working (Actor Ramesh Aravind and Kausalya) they take care of her well, but the trouble starts when the hero’s mother (M.N. Rajam) comes to stay with them. the girls wants to leave the house at one satge but don’t know how to go to her house. She is cheated by a street vendor who sell her to Mumbai brothel brokers but telling her that she is going home. The movie ends there with her sitting in the train which is leaving to Mumbai. Very touching movie and at the end of it I was crying.
Similarly sometime last year, in “Kumudam Jyothidam’ the editor of the magazine narrated an incident. He was in a restaurant where he saw a wealthy family, they brought along a maid girl of 8-9 years old who was holding a feeding bottle for a toddler in the family. The people ate well, and all the while the girl was standing there holding the bottle and looking. Once they finished they just left and did not bother about the small girl. He was giving lot of advice in the article how to treat the workers properly. But, I don‘t know how many even bothered to change.
In my opinion, we Indians, believe in Karma theory which states that a person will live a happy blissful life or undergo hardship based on past deeds in previous births. so, many people in our country never feel any prang of guilt when they see a person suffering and it is taken for granted that a person is poor. In daily life also we see lot of people who blame it on fate for any sufferings. when a person feels like that for his/her own life, you can imagine the apathy that one have for fellow human beings. They just shrug it off and go as it is their fate and so they are suffering. It is not only the domestic helpers are abused, even the people who work at the bottom layer of the society like peons, cleaners, municipal workers are ill-treated and shunned. Only when a person’s mentality change, he/she will become compassionate and caring. Sorry for the long reply.
reply to this comment
25/07 02:32:52
Padma Arvind wrote:
Dear Mr.KK
Thanks for your kind words. I had been thinking about writin gon maids, an dsomething precipitated and I wrote when I just came home.I have not been writing much these days. When you write what actually happens, I used the exact same words. Until Arun commented, I did not realize words can be misunderstand in that blog. I ahd been away for entire mornign doing volunteering at hospital withthis girl.
I am not a social worker by job, but do it as that gives me pleasure and use my skills to help needy. I will blog whu maids get my softcorner soon. Thanks
reply to this comment
25/07 06:30:48
Padma Arvind wrote:
Dondu
I simply do not know to identify people with subcastes. Thats real. IF you do not belief, I can not help it.Thanks for your comments
reply to this comment
25/07 06:33:01
Padma Arvind wrote:
KK:
I forgot. I do not think anyone is bad. It is circumstance and ignorance make them do the way they do. We can not get angry for ignorance.As Maughm says, if merit outnumbers demerits, take it as good. I do understand grey ares and that is one of my area to concentrate
reply to this comment
25/07 06:36:04
Padma Arvind wrote:
Raj
Thanks forundersatnding. I heard about kutti but have not seen it. I had gone thorugh lots of abuse as a maid and may be one dayI will write.
reply to this comment
25/07 06:37:18
kvr wrote:
பத்மா, உங்களது இந்தப் பதிவு கண்டிப்பாக தேவையான ஒன்று. அதே சமயம், அருண் குறிப்பிடும் விஷயமும் கவனிக்கப்பட வேண்டியதே. நீங்கள் சொல்ல வரும் விஷயம் தேவையில்லாமல் ஜாதீய ரீதியாக திரும்பிவிடக்கூடும் என்ற நிலை தான் இப்பொழுது இருக்கிறது.
ராம்கி சொல்லும் அதே கருத்து தான் என்னுடையதும். ஒவ்வொரு ஜாதியினருமே அவருக்கு கீழே உள்ள ஜாதியாக நினைப்பவரை சரிசமமாக நடத்துவது இல்லை, இதில் எல்லோரையும் சொல்லவில்லை. எல்லா ஜாதியிலும் அப்படி இருக்கிறார்கள் என்றே சொல்கிறேன்.
டோண்டு சார் தான் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுவிட்டது போல தோன்றுகிறது .
reply to this comment
25/07 09:14:43
Ganesh wrote:
I liked the post. Goodwork Padama
For the non stop Narayanan’s
I really don’t understand how people can be so indecent. What some people above are doing is like having a non stop verbal combat in someone else’s {padma) house. If there is great need to retaliate or to make a point please try to make the comment to their private email or in their own blogs. Do not use other person’s blog to prove your point of view. Immaturity at its best.
reply to this comment
25/07 23:26:51
மரவண்டு wrote:
<<வேலைக்காரி என்பது கீழ் மட்டத்தில் **தாழ்ந்த** சாதிக்காரர்களை குறிக்கிறது>>
அன்புள்ள பத்மா
தாழ்ந்த ஜாதி என்பதை தாழ்த்தப்பட்ட ஜாதி என்று மாற்றி எழுதுங்கள்.
இல்லாவிட்டால் யாரிடமாவது மன்னிப்பு கேட்கவேண்டியதிருக்கும்.
நன்றாக எழுதுகிறீர்கள் .. ஆனால் ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள் ,
சிறிது நேரம் ஒதுக்கி எழுத்துப்பிழைகளை சரிசெய்யவேண்டியது தானே !
என்றும் அன்பகலா
மரவண்டு
reply to this comment
27/07 04:44:25
ரவியா wrote:
பத்மா, எனக்கு உங்கள் பதிவு தவறாக படவில்லை..
இப்பொழுதய அசுகாதார நிலைமையில் டோண்டு சாரும் அருணும் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுவிட்டது போல தோன்றுகிறது. (இருவரையும் நேரில் சந்தித்து பேசின அனுபவத்தில் உரிமையில் சொல்லுகிறேன்.)
ஆனாலும் kvr ரின் கருத்தையும் நீங்கள் பரிசீலிக்க வேண்டும் பத்மா !
reply to this comment
27/07 09:34:42
Dondu wrote:
“இப்பொழுதய அசுகாதார நிலைமையில் டோண்டு சாரும் அருணும் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுவிட்டது போல தோன்றுகிறது.”
ரவியா அவர்களே, இப்போதுதான் ஒரு பெரிய சர்ச்சை இணையத்தில் முடிந்துள்ளது. தேவையற்ற இன்னொரு சர்ச்சை வேண்டாமே என்பதையே நானும் அருணும் கூற முயன்றோம்.
reply to this comment
27/07 09:54:54
Padma Arvind wrote:
நன்றி KVR, மரவண்டு, ரவியா, கணேஷ்
கருத்துக்களுக்கு நன்றீகள். இன்னும் நேரம் எடுத்து எழுத்துப்பிழைகளை கவனமாக தவிர்க்க முயல்கிறேன்.
reply to this comment
27/07 10:00:07
pandi wrote:
நல்லபதிவு தொடருங்கள்…
reply to this comment
27/07 11:53:01
Nisha wrote:
//Do not use other person’s blog to prove your point of view. Immaturity at its best.
Ganesh
Arent you doing the same thing?
You are “trying” to prove your point in this house .
Isnt this “Immaturity at its best” ??
reply to this comment
27/07 12:06:21
Ganesh wrote:
Nisha,
I had the same after thought after posting that comment. Point well taken.
reply to this comment
28/07 21:46:01
thanu wrote:
பத்மா,
உங்கள் எழுத்துக்கள் எல்லாமே உணர்தல்பூர்வமாக இருக்கிறது. பின்னூட்டங்களைப் படிக்காமல் உங்கள் எழுத்துக்களை மட்டும் வாசிக்கும்போது கிடைத்த நிறைவு அவற்றையும் வாசித்தபின்பு கொஞ்சம் எரிச்சலையே ஏற்படுத்தியது. உங்கள் எழுத்துக்களை அதன் கருத்துக்களுக்காகவும் அதில் வெளிப்படும் பகிர்தல் உணர்வுகளுக்காகவும் வாசிக்காமல், வலையில் தங்கள் பெயர் அடிக்கடி வரவேண்டுமென்று விதண்டாவாதம் பண்ணுபவர்களுக்காக உங்கள் நடையையும் சிந்தனைகளையும் மாற்றிக் கொள்ளாதீர்கள்.
பெண்கள் நகையலங்காரப் பதுமைகளாகவே சித்தரிக்கப்படுகிற சமுதாயதில் உங்கள் எழுத்துக்கள் போன்றவைதான், பெண் சமுதாயத்தின் உயரிய சிந்தனைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட முடியும்.
தமிழின் பெருமையும் பிரச்னைகளும் அதன் வெளிப்பாட்டில் தவிர்க்கமுடியாதது. She gave food to the maid in the backyard –என்று சொல்லும் போது அது, பிரச்னயை மட்டுமே காட்டும்.ஆனால் அதுவே தமிழில் எழுதப்படும்போது எத்தனை தேவையற்ற விவாதங்கள்-முடிவில் சொல்லப் பட்ட கருத்தின் நோக்கமே சிதறிப் போய்விடுகிறது. பின்னூட்டம் எழுதியதில் எத்தனை பேர் துணைக்கு சேர்க்கப்பட்ட பெண்டிர்க்கு சரி சமமாக சோறு போட்டிருப்பார்கள்?(சாதம் என்ற வார்த்தையை தவிர்த்திருக்கிறேன், அது ஜாதி சார்ந்த பதமாகிவிடுமோ என்ற தயக்கத்தில்).
நட்புடன்,
தாணு