»
S
I
D
E
B
A
R
«
OTC மருந்துகள் மூலம் போதைக்குள்ளாகும் மாணவர்கள்
October 12th, 2007 by பத்மா அர்விந்த்

சென்ற மாதம் ஒரு மாலை வேளையில், town Hall கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தோம்.முக்கிய விவாத பொருள், மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வாங்க கூடிய மருந்துகளை குழந்தைகள், மாணவர்கள் எப்படி தவறாக பயன்படுத்தி போதை ஏற்றிக்கொள்கிறார்கள் என்பதை பற்றியதான கருத்தரங்கு. அங்கே வந்திருந்த பொதுமக்கள் பலரின் சொந்த அனுபவங்களை கேட்கும் போது அதிர்ச்சியாக இருந்தது.

போதை மருந்துகள்விற்பதும் உபயோகிப்பதும் தவறான போது, காவலர்களிடம் அகப்படாமல் எப்படி போதை ஏற்றிக்கொள்வது என்பதை சிலர் தீவிரமாக சிந்திப்பார்கள் போலும். வீட்டில் அம்மா அப்பா யாரெனும் பல் மருத்துவர்களிடம் சென்று ரூட் கானல் சிகிச்சை அல்லது விஸ்டம் பல் பிடுங்கினால், மருத்துவர் தரும் வி கோடின் அல்லது ஆக்ஸி கோடின் போன்ற மருந்துகளை மிச்சம் வைத்திருந்தாலுபயோகிப்பது, மாத்திரிகளை விற்பது, மருத்துவர் எழுதிய குறிப்புகளை விற்பது என்று பரவலாக உயர்நிலை, மத்திய பள்ளி மாணவர்கள் பழக ஆரம்பித்தனர். அமெரிக்காவில் 10.5% உயர்நிலைபள்ளி மாணவர்கள் வி கோடின், ஆக்சி கோடினை பயன் படுத்தி போதை பழகத்திற்கு அடிமையாக உள்ளனர்.

மெக்சிகோ போன்ற நாடுகளில் இருந்து இணையம் வழி இந்த மருந்துகளை பெற முடிவதால் கல்லூரி மாணவர்கள் அதிகம் பயன் படுத்துகின்றனர். இதில் என் தோழி லிண்டாவின் மகன் ஜேசனும் ஒருவர். அதிக விளைவால் 19 வயதில் அவர் மரணமடைந்தார்.

டெக்ஸ்ட்ரொமெதொர்பண் (dextrapmethorphan) என்னும் பொருள் 125 வகையான இருமல் மற்றும் சளிக்கான மருந்துகளில் இருக்கிறது. சுடாஃபெட் இதில் முக்கியமாக பயன் படுத்தப்படுகிறது. இவ்வகை மருந்துகள் பலருடைய வீடுகளில் சாதாரணமாக வைக்கப்பட்டிருக்கும். இவற்றை மாணவர்கள் தவறாக போதைக்காக பயன்படுத்துகிறார்கள்.

ரொபிட்டாசின், டைலினால், எக்செட்ரின் போன்ற அதிகம் உப்யோகிக்கும் பரவலாக கிடைக்கும் மருந்துகள், நைக்குவில்,விக்ஸ் ஃபர்முலா 44, சோரிசிடின் ஆகிவற்றிலும் DXM இருக்கிறது. இதற்கு மாணவர்களிடையே ரோபோ, ச்கிட்டெக்ஸ், வைட்டமின் டி, என்ற பெயர்கள் வழங்கப்படுவதால் பெற்றோருக்கு புரிவதில்லை.

வாயினில் எளிதில் கரையக்கூடிய கோரிசிடின்(coricidin) மாத்திரையில் அதிக விளைவைத் தரும் DXm இருப்பதால் ஒரு முழு பாட்டிலையும் குடிக்க வேண்டியதில்லை. எனவே நிறைய மாணவர்கள் இதை பயன்படுத்துகிறார்கள்.

ஆக்சிகாண்டின் போன்ற அருத்துவர் பரிந்துரை செய்யும் மருந்துகளை அபயோகிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது.
OxyContin & 12th Graders
Percentage of 12th graders who reported using OxyContin in the year prior to being surveyed:
Graph
The use of OxyContin has risen by almost 40 percent among 12th graders since 2002. The powerful prescription painkiller can be highly addictive when abused. NPR Online/University of Michigan/2005 Monitoring the Future Study

இதில் அதிர்ச்சியான செய்தி என்னவென்றால் 55% மாணவர்கள் (13 மில்லியன்)இருமல் மருதைனை அதிகம் குடிப்பதில் அபாயம் எதுவும் இருக்காது என்று நம்புவதாக சொன்னதும், 33% மாணவர்கள் மருத்துவர் பரிந்துரை செய்யாமல் எப்போதேனும் ஒருமுறை இதுபோன்ற பரிந்துரை தேவையான மருந்துகளை எடுத்துக்கொள்வது தவறில்லை என்றும் கருதுகிறார்கள். பெரும்பாலான பெற்றோர்களும் உடல் வலி தலைவலி மாத்திரைகள் ஆபத்தானவை என்று நம்புவதில்லை. மேலும் படிக்க இங்கே சுட்டுங்கள்.
சமீபத்தில் எடிசன் பள்ளி மாணவர்களிடையே நடத்திய கருத்துக் கணிப்பில் கிட்டதட்ட 25% மாணவர்கள் மருந்துகளையும் 10% மாணவர்கள் போதை பொருட்களை (மரிவானா வகை) பயன்படுத்துவது தெரிய வந்தது. இந்த பழக்கம் இப்போது அதிகரிப்பதும், அதிக மருந்து உட்கொண்டதால் அவசர சிகிச்சைக்கு வரும் பதின்மரின் எண்ணிக்கையும் கவலை கொள்ள வைக்கிறது.
இங்கே நியுஜெர்ஸியில் சிகரெட் போல இருமல் மருந்துப்பொருட்களை வாங்க இப்போது சில கட்டுப்பாடுகள் வந்திருக்கின்றன.

இருமல் சளி குளிர் அலர்ஜி மருந்துகள் தவிர பல உடல் இளைக்க வைக்கும் மருந்துகள், ட்ரெமமின் போன்ற மருந்துகள் போதை தரவல்லன. எனவே வீட்டில் மருந்துகளை பூட்டை வக்கவோ, மிச்சம் இருப்பதை தூக்கி போடவோ செய்வது சால சிறந்தது.


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions