»
S
I
D
E
B
A
R
«
உரை எழுதுதல்
March 9th, 2006 by பத்மா அர்விந்த்

நமது எண்ணங்களை நாம் பேசுவது வேறு அதையே இன்னொருவர் பேச அவருடைய தொனிக்கேற்றமாதிரி எழுதித்தருவது வேறு. நம்முடைய ஊரில் இப்படி உரை எழுதுபவர்கள் இருக்கக்கூடும். சிறிய வயதில் தேர்தலுக்கு தேர்தல் கருணாநிதி, அண்ணா மறைந்த போது எழுதிய உரையை அடிக்கடி ஒலிபரப்புவார்கள். அதில் இருந்த அழகுக்காக கேட்க தொடங்கி இன்னமும் சில வரிகள் அதிலிருந்து என்னால் சொல்ல முடியும். இப்போதெல்லாம் உரையை பற்றி பத்திரிக்கைகளில் படிக்கும் போது சிலருடைய உரைகளில் ஆபாசம் தலைவிரித்தாடுவதையும், மாற்றுக்கருத்து கொண்டவரை மரியாதை சிறிதும் இன்றி கடிந்தும் குற்றம் கூறியும் பேசுவதாக அறிகிறேன்.

தமிழ்நாட்டில் இருந்தவரை ஊர் ஊராக பேச்சுப்போட்டிகளில் கலந்து கொள்ள சென்றிருக்கிறேன். எப்போதும் எழுதி வைத்துக்கொள்வதோ மனப்பாடம் செய்து பேசியோ எனக்கு பழக்கம் இல்லை. அமெரிக்கா வந்தபின் பேசியதெல்லாம் அறிவியல் கூட்டங்களில் மட்டுமே. நமது துறையில் பேசுவதை நிறுத்து என்று சொல்லும் வரை பேச விஷய்ம் இருக்கும் எனவே கவலையும் தேவையில்லை. எப்போதாவது துறைத்தலவர் பேச சில குறிப்புகள் தருவதோடு முடிந்துவிடும்.

மேலாண்மை படித்தபோது ஒரு விவாதத்தில் கலந்துகொள்ள, strategic திட்டமிடல் செய்து அதை ஆதரித்து பேசி பரிசு பெற்றபோது, சற்றே பெருமையாக இருந்தது. ஏனெனில் நடுவராக இருந்த அமெரிக்கர்கள், மற்ற அமெரிக்க மாணவர்களை மீறி எனக்கு பரிசு தந்தது ஆச்சரியத்தில் ஆழ்த்தியதால். பேசுகிறபோது அதுவும் ஒரு கருத்தை வலியுறுத்தி பேசும்போது திகட்டமாலும், புரிகிற மாதிரியும் இருப்பது அவசியம் என்று எப்போதும் கருத்தாக இருப்பேன்.

மாநில அளவில் பல கூட்டங்களில் விவாதங்களில் கலந்துகொள்ளும் போதும், அதுவும் நிறவேறி, ஆணாதிக்கம் நிறைந்த ஆண்கள் மத்தியில் பேசும்போதும் தவறிக்கூட தடுமாறாமல் இருப்பதில் கவனம் தேவை. சமீபத்தில் ஒரு கூட்டத்தில் உரை நிகழ்த்தியவர், CDc தலை பொறுப்பில் உள்ளவர், சொன்னது அரங்கில் இருந்தவர்கள் ஆர்வம் இழக்க, நான் மட்டும் கலந்துரையாடல் போல பேச, எளிமையாக பேசியது அரங்கில் உள்ளவர்களின் பயத்தை போக்கி இருக்க வேண்டும். அதன்பின் நான் அந்த உரையை நிகழ்த்த, மெல்ல எல்லார் பார்வையும் என்பக்கம் திரும்பியது. இந்த பெண்ணிடம் ஏதோ விஷயம் இருக்கிரது, என்பதைவிட என் தீவிரம் புரிந்திருக்க வேண்டும். நமக்கு தெரிந்த விஷயத்தை நாம் புரிந்து கொள்வது போல் இல்லாமல் எல்லோரும் புரிந்து கொள்லுமாறும், நம் அறிவு அடுத்தவர்களை பயமுறுத்தாமலும், தாழ்த்தாமலும்(intimidate) இருக்க வேண்டியது அவசியம்.

நேற்று மீண்டும் ஒரு கூட்டம் நிர்வகித்து நடத்தினேன். இதில் பேசப்பட்ட முக்கிய விஷயம் புலம் பெயர்ந்தவர்கள், கண்பார்வை மங்கியவர்கள், வாகன வசதியோ, பெட்ரோல் செலவு கொடுக்க முடியாதவர்கள் எப்படி உடல்நல குறைகள் ஏற்பட்டால் மருத்துவரை நாட முடியும் என்பதே(access to health care). இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? இந்த கூட்டத்திற்கு 100 நிறுவனங்கள், பொதுமக்கள், காவலர்கள், கோவில் மதகுருக்கள், சமூக தொண்டர்களெல்லோரையும் அழைத்திருந்தேன். கூட்டத்திற்கு வர என்ன தகுதி வேண்டும் என்றவர்களிடம், பொதுநலத்தை பற்ரிய சில எண்ணங்கள் இருந்தாலோ போதும் பேச வாருங்கள், அரசாங்கம் உங்கள் குறைகளை கேட்க விரும்புகிறது என்று சொல்லி அழைத்தேன். நியுஜெர்ஸி பேருந்து, வாடகை வாகனங்கள் (CAB), புகைவண்டி நிலைய அதிகாரிகளும் வந்திருந்தனர். இந்த பிரச்சினையை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கL என்பதையும் எனக்கு சொல்லுங்கள்.

இந்த கூட்டதில் பல விஷயங்கள் அலசப்பட்டாலும், இதன் முதன்மை பேச்சாளராக வந்திருந்த அரசியல்வாதியின் உரையை நான் எழுதினேன். எழுதியதில் அடித்தலும் திருந்த்தலும் இன்றி அவர் பேச, கூட்டம் மெய்மறந்திருந்தது. என்ன சக்தியான மக்களை கவர்ந்திழுக்கும் உரை என்று பாராட்ட, அவர் திடீரென்று எழுதியவர் நான் என்று சொல்லி என்னை எழுந்திருக்க செய்து எனக்கான அங்கீகாரம் தர எல்லோரும் கரவொலி எழுப்பி ஆராவாரம் செய்ய, என்னுடன் வந்திருந்த என் மகனுக்கு ஏக பெருமை. எந்த திட்டத்தை தந்தாலும் நிறைவாக செய்பவர் , எல்லா முறையும் நிறைவாக செய்ய முடியும் என்று காட்டியவர் என்று எங்கள் வட்ட (county) தலவர் சொன்னதும் நிறைவாக இருந்தது.

இரண்டு வாரம் முன் என் புகழ் (?) வெள்ளை மாளிகை வரை சென்றிருக்க வேண்டும். தலைவருக்கு உடல் நல குழுவில்ஆதன் கொள்கைகள் பற்றி உரை எழுத, அவ்வப்போது மக்களவையில் பேச குறிப்புகள் தர சம்மதமா என்று கேட்டு வந்த தொலைபேசியும், அதன் ஊடாக நடந்த நேர்முக தேர்வும், கடைசியில் எனக்கு குடியுரிமை இல்லை என்பதால் போய்விட்டது. இதன் அடிப்படை தகுதி முனைவர் பட்டம், ஆனால் அதையும் தவிர என்னிடம் மேலாண்மை தகுதியும், சிறந்த பாராட்டுரைகளும் இருப்பதால் இரண்டு முறை அவர்கள் தொலை பேசி அழைப்பை தவறவிட்டும் மீண்டும் கூப்பிட்டு பேசினார்கள். தொலைபேசியில் கிட்டதட்ட இரண்டு மணி உரையாடினேன்.

இதுவும் நல்லதற்குத்தான்.இல்லை என்றால் புஷ்ஷின் எல்லா செயல்களுக்கும் நானும் வசை மொழி கேட்க வேண்டியிருந்திருக்கும்:) குடியுரிமை கிடைத்ததும் மீண்டும் சொல்லுங்கள் என்று சொல்லி தொலை பேசி எண் , மின்மடல் முகவரி எல்லாம் தந்திருக்கிறார்கள். இரட்டை குடியுரிமைக்காக காத்திருந்தோம், இப்போது ஒரு ஆசை வந்திருக்கிறது. பணியின் முக்கியத்துவத்தைவிட அதிகாரம் உள்ளவர்களிடம் நேரிடையாக பேச செயலாற்ற முடியும் என்ற ஒரு நேர்மறை அனுகூலம் உண்டு.
நாளை பற்றி இன்றென்ன கவலை.


32 Responses  
  • Mathy Kandasamy writes:
    March 9th, 2006 at 7:20 pm

    Padma!

    I am very very proud about you!

    kalakkunga friend.

    -Mathy

  • sbalaji writes:
    March 9th, 2006 at 7:27 pm

    Thanks for the tips Padma!!. You have touched many points which are really useful.

  • Thangamani writes:
    March 9th, 2006 at 7:28 pm

    Great Padma!
    உங்களைப் போன்ற ஆட்கள் அதிகார அமைப்புகளின் அருகில் இருந்தால் மக்களை பற்றிய சரியான அக்கறைகள் போய்ச்சேரும். நல்லது. வாழ்த்துகள்!

  • Jayashree writes:
    March 9th, 2006 at 7:29 pm

    மனம்கனிந்த வாழ்த்துக்கள் பத்மா. உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது.

    “சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லுஞ்சொல் இன்மை அரிந்து ”

    அத்தகைய சொல்வன்மை உங்களுக்கு வாய்த்திருக்கிறது.

  • துளசி கோபால் writes:
    March 9th, 2006 at 7:31 pm

    பத்மா,

    கிரேட்!!! வாழ்த்துகள்.
    எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு பத்மா.
    நல்லா இருங்க.

    ஆமா, புது வீடா? மரக்கூட்டத்துக்கு நடுவே சூரியஒளி!

    நல்லா இருக்கு பத்மா.

  • பாலாஜி-பாரி writes:
    March 9th, 2006 at 7:58 pm

    நன்றிகள் பத்மா!!
    வாழ்த்துக்கள்!!

    PS:மேலே கண்ட sbalaji அடியேன் என அறிக

  • வெளிகண்ட நாதர் writes:
    March 9th, 2006 at 8:03 pm

    சும்மா கலக்குங்க! வாழ்த்துக்கள் இப்போதே, குடியுரிமை கிடத்த்பினெ வரும் மணிமகுடத்திற்கு

  • செல்வராஜ் writes:
    March 9th, 2006 at 8:19 pm

    வாழ்த்துக்கள் பத்மா! மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • பத்மா அர்விந்த் writes:
    March 9th, 2006 at 9:17 pm

    வாழ்த்துக்களுக்கு நன்றிகள் செல்வராஜ், வெளிகண்ட நாதர், ஜெயஸ்ரீ, பாலாஜி. உங்கள் அனைவரின் தொடர்ந்த ஊக்கமும் ஒரு காரணம்.
    ஜெயஸ்ரீ: திருக்குறளும், வள்ளலார் மற்றும் பல பாடல்களை நினைவுகூர்ந்து எழுதும் உங்கள் ஆர்வம் என்னை வியப்படைய செய்கிறது.
    பாலாஜி: மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நான் முன்பு (இரண்டு மாதங்கள்) அனுப்பிய மின்மடல் பார்த்தீர்களா?
    துளசி: நல்லா இருக்கா? நன்றி. உங்களப்போல நண்பர்கள் இருக்கறபோ என்ன வேணும் சொல்லுங்க.

  • டிசே writes:
    March 9th, 2006 at 9:21 pm

    வாழ்த்து பத்மா.

  • DRaj writes:
    March 9th, 2006 at 9:27 pm

    Hi Padma:
    You rightly deserved such honors. We are pleased that your chose to share the news with us.
    Cheers
    DRaj

  • M. Sundaramoorthy writes:
    March 9th, 2006 at 10:21 pm

    பத்மா,
    பாராட்டுக்கள். அடுத்தமுறை பேசும்பொது ஒரு வீடியோ துண்டு எடுத்துப் போடுங்கள் :-)

  • arul writes:
    March 9th, 2006 at 10:29 pm

    பத்மா, மிக்க மகிழ்ச்சி.
    எளியோருக்கு அமைப்பின் உள்ளே இருந்து செய்ய பலரும் தேவை. வெளியே தெரியாத ஆனால் முக்கியமான பணி இது. be there. do that. வாழ்துக்கள்.
    அருள்

  • பாரதி writes:
    March 10th, 2006 at 7:46 am

    “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
    பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
    எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
    இளைப்பில்லை காணென்று கும்மியடி”.

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • வெங்கட் writes:
    March 10th, 2006 at 9:13 am

    பத்மா – வாழ்த்துக்கள். அருள் சொல்வதுபோல எளியோருக்கு அமைப்புள்ளிருந்து செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன. வாய்ப்புகள் பலருக்கும் வாய்ப்பதில்லை. சந்தர்ப்பம் வரும்பொழுது தவறவிடாது கைகொள்ளுங்கள்.

  • selvanayaki writes:
    March 10th, 2006 at 9:49 am

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பத்மா! உங்களின் பயணமும், வெற்றிகளும் பெருமைப்பட வைக்கின்றன. தொடர்ந்து செல்லுங்கள்!

  • ஞானவெட்டியான் writes:
    March 10th, 2006 at 10:51 am

    என் இதயங்கனிந்த பாராட்டுக்கள்; வாழ்த்துகள்.
    வாழ்க! வளர்க!! மிளிர்க!!!

  • karthikramas writes:
    March 10th, 2006 at 1:38 pm

    பத்மா வாழ்த்துக்கள்.

  • sarah writes:
    March 10th, 2006 at 2:04 pm

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பத்மா! மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    sarah

  • தாணு writes:
    March 10th, 2006 at 2:38 pm

    //எனக்கான அங்கீகாரம் தர எல்லோரும் கரவொலி எழுப்பி ஆராவாரம் செய்ய, என்னுடன் வந்திருந்த என் மகனுக்கு ஏக பெருமை// அந்தச் சின்னக் கண்ணனின் கண்ணில் தெரிந்திருக்கும் பெருமையையே உங்களுக்கு வாழ்த்துக்களாக்குகிறேன்.

  • Nithya writes:
    March 10th, 2006 at 3:52 pm

    Way to go, Padma.

  • பத்மா அர்விந்த் writes:
    March 10th, 2006 at 6:37 pm

    மதி: வாழ்த்துக்கு நன்றி. சுந்தரமூர்த்தி, டீசே, செல்வராஜ், செல்வநாயகி: தொடர்ந்து தரும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

    சுந்தரமூர்த்தி: வீடியோ எடுத்து போட முயற்சிக்கிறேன்.

    அருள், வெங்கட்: நா(ங்களு)னும் அதைத்தான் நினைத்தேன். இனிமேல்தான் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும். வாழ்த்துக்களுக்கு நன்றி. கார்த்திக், தாணு, சாரா, செல்வநாயகி: இது போன்ற ஊக்கமும் ஆதரவும் நிறைய கிடைப்பதால், எப்போதாவது சோர்வடையும் போது புத்துணர்ச்சி வருகிறது.

  • பத்மா அர்விந்த் writes:
    March 10th, 2006 at 6:38 pm

    நித்யா: நன்றிகள் பல. ஞானவெட்டியான் ஐயா: நன்றி. உங்களின் பல பதிவுகளையும் படிக்க முயற்சி செய்து வருகிறேன்:)

  • வாசன் writes:
    March 10th, 2006 at 11:29 pm

    பெருமையாக இருக்கிறது பத்மா இரண்டு வகையில். இந்திய பின்புலத்தை சேர்ந்தவர் ஒருவருக்கு திறனுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைத்தது என்றறிய.

    மற்றொன்று நாம் வாழும் இந்த அமேரிக்க நாட்டின் பல சிறந்த உள்ளங்களை, பரந்த மனப்பான்மையினரைப் பற்றி எண்ணும் போது.

  • தமிழ் சசி writes:
    March 11th, 2006 at 9:47 am

    பத்மா,

    வாழ்த்துக்கள்

    மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது

    உங்களுக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு பலருக்கு, குறிப்பாக அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் உங்கள் மூலம் நன்மைகளை கொண்டு சேர்க்கும் என்றே நினைக்கிறேன்.

  • dharumi writes:
    March 11th, 2006 at 11:07 am

    எல்லோரும் சொல்லிவிட்டார்கள்; இன்னும் என்ன சொல்ல – ரொம்பப் பெருமையாய் (எனக்கு பத்மாவை நல்லா தெரியுமே என்று சொல்லிக்கொள்ள முடியுமே!), சந்தோஷமாய் இருக்கிறது என்பதை விட.

  • ராம்கி writes:
    March 11th, 2006 at 11:23 am

    வாழ்த்துக்கள்..
    மாபெரும் சபைதனில் நீங்கள் நடந்தால் உங்களுக்கு மாலைகள் விழ வேண்டும்..
    ஒரு மாற்றுக் குறையாத பெண்மணி இவர் என போற்றிப் புகழ வேண்டும்..
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..

  • பத்மா அர்விந்த் writes:
    March 12th, 2006 at 7:56 am

    வாசன்: அமெரிக்காவில் உள்ள பல நிறைகளில் இதுவும் ஒன்று, திறமைக்கான ஊக்குவிப்பு. நன்றி
    தருமி, சசி, ராம்கி: தொடர்ந்த ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி

  • இராதாகிருஷ்ணன் writes:
    March 13th, 2006 at 6:01 pm

    கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. மேன் மேலும் உயர்ந்து பணியாற்றிச் சிறப்புற வாழ்த்துகள்!

    வேறு: புதிய வலைப்பதிவு தளம் நன்றாக உள்ளது.

  • dharumi writes:
    March 14th, 2006 at 4:48 am

    பத்மா,
    இந்தப் பதிவின் தலைப்பை ’speech writing’ என்றே வைத்திருக்கலாமென தோன்றுகிறது.

  • சுந்தரவடிவேல் writes:
    March 14th, 2006 at 5:44 am

    குடியுரிமை கிடைத்ததும் நிச்சயமாய் முயற்சி செய்யுங்கள். அதிகார வர்க்கத்துக்கு இடித்துரை செய்ய உங்களைப் போன்றவர்களையே மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
    வாழ்த்துக்கள்!

  • maram writes:
    March 15th, 2006 at 8:31 am

    //பணியின் முக்கியத்துவத்தைவிட அதிகாரம் உள்ளவர்களிடம் நேரிடையாக பேச செயலாற்ற முடியும்//

    பத்மா, நிச்சயமாக உங்களால் பல நல்லவை விளையும்.

    //உங்களுக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு பலருக்கு, குறிப்பாக அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் உங்கள் மூலம் நன்மைகளை கொண்டு சேர்க்கும் என்றே நினைக்கிறேன். //

    இதுவே நான் சொல்ல நினைப்பதும்.


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions